search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியோ"

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.

    காதலர் தின ஆஃபர் விவரங்கள்:

    ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.

    இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய பிரீபெயிட் சலுகைகள் ஜியோ வலைதளம், மைஜியோ செயலிகளில் கிடைக்கிறது.
    • புதிய சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.

    இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ச்சியாக தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. இம்முறை ரிலையன்ஸ் ஜியோ இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 349 மற்றும் ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு சலுகைகளின் பலன்கள் அதிகளவு வேறுபடுகின்றன.

    எனினும், இவற்றில் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றன. பலன்களை பொருத்தவரை அதிகபட்சம் 90 நாட்கள் வேலிடிட்டி, 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்றன. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இரு சலுகைகளின் பலன்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த பலன்களுடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

    புதிய ஜியோ ரூ. 899 சலுகையிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ. 899 சலுகையில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 225 ஜிபி டேட்டா பெறலாம். இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகையை போன்றே இதிலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.

    "17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    "டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 630 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    2023 புத்தாண்டை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2023 விலையில் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. புத்தாண்டை குறிக்கும் ரூ. 2023 விலையில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரூ. 2023 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.

    பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 2023 விலை சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா (மொத்தத்தில் 630 ஜிபி), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு சலுகையாக ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை 23 நாட்கள் நீட்டித்து இருக்கிறது. அதன்படி ரூ. 2999 விலையில் கிடைக்கும் ஜியோ சலுகையில் தற்போது 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 912.5 ஜிபி டேட்டா (தினமும் 2.5 ஜிபி), 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதற்கு பயனர்கள் குறைந்த பட்சம் ரூ. 239 விலை சலுகை அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகையின் விலை ரூ. 749 ஆகும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும்.

    ஜியோ ரூ. 719 சலுகையும் இதே போன்ற பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இவை தவிர ரூ. 249 - 23 நாட்கள், ரூ. 299 - 28 நாட்கள், ரூ. 533 - 56 நாட்கள், ரூ. 2 ஆயிரத்து 879 - 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் அனைத்திலும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    மற்ற சலுகைகளை போன்றே புது சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் என ஏராளமான ஜியோ சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. புது சலுகை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகை ரூ. 239 அல்லது அதற்கும் அதிக சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ. 749 விலை சலுகை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. இதுதவிர மூன்றாம் தரப்பு செக்பாயிண்ட்களிலும் இந்த சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

    பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட நோக்கியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.
    • இதற்காக நோக்கியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையே பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    ஆகஸ்ட் மாத வாக்கில் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச அளவில் நெட்வொர்க் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உபகரணங்களை பல ஆண்டுகள் வழங்குவதற்கான உரிமத்தை வென்று இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் பேஸ் ஸ்டேஷன்கள், அதிக திறன் கொண்ட 5ஜி MIMO ஆண்டெனா, பல்வேறு ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை சப்போர்ட் செய்யும் ரிமோட் ரேடியோ ஹெட்கள், நெட்வொர்க் மென்பொருள் உள்ளிட்டவைகளுக்கான உபகரணங்களை நோக்கியா வினியோகம் செய்ய இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்திற்கும் நோக்கியா தனது ஜி உபகரணங்களை வழங்க இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளின் பீட்டா சோதனையை- மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் துவங்கி இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த சேவை மேலும் அதிக நகரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக ரிலையன்ஸ் குழும ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்-ஐ வழங்க திட்டமிட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மேம்பட்ட 5ஜி சேவைகளை வழங்க முடியும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
    • முதற்கட்டமாக 5ஜி பீட்டா சோதனையை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகளின் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவைகளுக்கான வெளியீடு தயாராகி வருகிறது. மேலும் 5ஜி பீட்டா டெஸ்டிங்குடன் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. பீட்டா டெஸ்டிங்கின் அங்கமாக ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். இத்துடன் சேவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

    தீபாவளி வாக்கில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதை அடுத்து தற்போது 5ஜி பீட்டா டெஸ்டிங் துவங்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் (SA) தளத்தில் வெளியாகிறது.

    ஜியோ ட்ரூ 5ஜி அறிமுக சலுகைகள்:

    டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரனாசியில் ஜியோ 5ஜி அறிமுக சலுகைகள் இன்விடேஷன் முறையில் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.

    நான்கு நகரங்களை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் பீட்டா டெஸ்டிங் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும்.

    சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் வரை பயனர்கள் பீட்டா டெஸ்டிங்கில் பயன்பெற முடியும்.

    இன்வைட் செய்யப்பட்ட ஜியோ அறிமுக சேவை பயனர்கள் தானாக 5ஜி சேவைக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்கள் தனியே 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு மொபைல் போனிலும் தலைசிறந்த 5ஜி சேவையை வழங்க ஏதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடனும் ஜியோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஏற்கனவே ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிரடி சலுகைகள் வழங்கி முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் சந்தையில் ஜியோ இலவச போன் சேவை மற்றும் குறைந்த விலை 4ஜி சேவைகளை வழங்கி பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து 2017 வாக்கில் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போனை தொடர்ந்து லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜியோவின் லேப்டாப் மாடல் ஜியோபுக் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜியோபுக் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 4ஜி சப்போர்ட் மற்றும் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஜியோபுக் மாடல் குவால்காம் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவி உருவாக்கப்பட்ட ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது.

    தற்போது கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 100 டாலர்கள் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிரிவில் ஜியோபோன் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த போன் விற்பனையில் இந்த பிரிவில் இருந்து மட்டும் ஒன்பது சதவீதமாக உள்ளன.

    ஜியோபுக் மாடலில் ஆண்ட்ராய்டு தழுவி உருவாக்கப்பட்ட ஜியோஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மைக்ரோசாப்ட் செயலிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் ARM தொழில்நுட்பத்தில் உருவான குவால்காம் பிராசஸர் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 665 வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லேப்டாப் ஏசர், லெனோவோ மற்றும் லாவா நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் விண்டோஸ் ஒஎஸ் கொண்ட லேப்டாப்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தான் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவிய ஜியோஒஎஸ் கொண்ட ஜியோபுக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பல லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக ஜியோ 5ஜி சேவைகள் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    முதற்கட்டமாக நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் டிசம்பர் 2023 வாக்கில் நிறைவு பெறும் என தெரிகிறது. ஜியோ 5ஜி சேவைகள் முதலில் 5ஜி எஸ்ஏ எனப்படும் ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்குகளில் அறிமுகம் செய்யப்படும்.

    முன்னதாக 2016 வாக்கில் 4ஜி சேவைகள் வெளியீட்டின் போது ரிலையன்ஸ் ஜியோ அனைவரும் அதிர்ச்சியடைய செய்தது. இதே பானியை 5ஜி வெளியீட்டின் போதும் ஜியோ மேற்கொள்ளும் என தெரிகிறது. கட்டண ரீதியில் ஜியோ 5ஜி சேவைகள் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு இதர வழிகளிலும் ஜியோ தனது திட்டங்களின் மூலம் அதிர்ச்சி அளிக்கும் என தெரிகிறது.

    4ஜி சேவைகளை வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வழங்கியதோடு, டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதே போன்ற திட்டத்தை 5ஜி வெளியீட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    வர்த்தக பயனர்கள் மட்டுமின்றி தொழில்துறை பயனர்களுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளன. டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீட்டில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஜியோபோன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் 5ஜி மாடலின் விலையை ரூ. 8 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 12 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையை துவங்கும் முன், நாடு முழுக்க 5ஜி நெட்வொர்க் கிடைப்பதை உறுதிப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது.

    2024 வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி எம்எம்வேவ் பிளஸ் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக 2022 ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

    முந்தைய தகவல்களில் ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் IPS LCD 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் கூகுளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


    ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.

    இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.

    ×