search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்க வாசல்"

    • நம் வாழ்க்கையில் நல்லதைச் செய்வோம்.
    • பரமனின் பாதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம் பரமபதம்.

    பரமபத சோபனம் என்ற பாம்பு கட்ட விளையாட்டு இந்தியாவில் தொன்மையான ஒன்று. இவ்விளையாட்டை 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கவிஞர் ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். தொன்மையான பரம பதம் துணியில் வரையப்பட்டதாகும். பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கின்றன.

    ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட பரமபதத்தில் 12-ம் கட் டம் உண்மையையும், 51-ம் கட்டம் நம்பிக்கையையும், 57-ம் கட்டம் பெருந்தன்மையையும், 76-ம் கட்டம் ஞானத் தையும், 78-ம் கட்டம் சன்னி யாசத்தையும், குறிக்கின்றன. இந்த கட்டங்களில் மட்டுமே ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், ஜெயம், அதிர்ஷ்டம், முன்னேற்றம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

    41-ம் கட்டம் கீழ்படியாமையையும், 44-ம் கட்டம் அகந்தையையும், 49-ம் கட்டம் ஈனத்தையும், 52-ம் கட்டம் களவையும், 58-ம் கட்டம் பொய் புரட்டையும், 62-ம் கட்டம் மதுபானம் அருந்துதலையும், 69-ம் கட்டம் கடனையும், 73-ம் கட்டம் கொலையையும், 84-ம் கட்டம் கோபம், வெஞ்சினம், வஞ்சத்தையும், 92-ம் கட்டம் கர்வத்தையும், 95-ம் கட்டம் பெருமையையும், 99-ம் கட்டம் காமத்தையும், கொடுக்கும். இந்த கட்டங்களில் உள்ள பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம் மற்றும் அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்றவற்றை கொடுப்பவை.

    2 முதல் 4 பேர் வரை விளையாடக்கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டையை உருட்டி அதில் வரும் எண்ணுக்கு தகுந்தவாறு கட்டங்களில் காய்களை நகர்த்தி செல்ல வேண்டும். விளையாட்டை தொடங்க தாயம் 1 விழ வேண்டும். இப்போட்டியில் முதலில் மோட்சம் பெற்றவர் வெற்றி பெற்றவர் ஆவார். 100-ம் கட்டம் நிர்வாணம் (மோட்சம் மற்றும் முக்திக்கு இணையானது) என்று அழைக்கப்பட்டது.

    பரதபதத்தில் நாம் தாயக்கட்டையை உருட்டுகிறோம். உருட்டிக் கொண்டு போனவுடன் முதலில் சிறுபாம்பு கடித்து மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும். இதில் இருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்து மேலே இருந்து கீழே வந்து விடுகிறோம். இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் திரும்ப வந்து பல சுழற்சிக்கு பிறகு மேலே போகிறோம்.

    இன்னும் இரண்டே கட்டம் தான் என்று எண்ணி விளையாடும் போது எல்லாவற்றையும் விட பெரிய பாம்பு அங்கே இருக்கும். பயத்தில் உருட்டிய உடனே தாயம் விழுந்து விடும். மீண்டும் விஷ நிலைகள் கீழே இறக்கி பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும். கீழ் நிலைக்கு கொண்டு வந்து மிக மோசமான சரீரத்தை (பிறப்பை) எடுக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது-.

    வாழ்க்கை என்ற அற்புதத் தின் சுழற்சியில் நடக்கும் உயர்வு, தாழ்வு என்ற பிறப் பின் பெரு ரகசியத்தை பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள்தான் ஏகாதசி. பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு, வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் ஆகி, அந்த மெய் ஒளி யின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களில் தனிக்கதவை திறந்து வைப்பார்கள்.

    இன்றைக்கும் பலரும் ஏதோ பெயரளவுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமியை கும்பிட்டோம் என்று இருக்கிறோம். பரபதம் என்ற வாழ்க்கையின் சூத்திரத்தை ரகசியத்தை அறியாமல் கதையை கேட்டு சொர்க்கம் கிடைக்கும், மோட்சம்அடை யலாம் என்று எண்ணி இருக் கிறோம். ராத்திரியெல்லாம் விழித்திருந்தோம். இரவு பரம பதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் பரமபதம் என்றால் என்ன என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    பரமபதத்தின் ரகசியம் என்ன?

    பரமபதத்தை அடைய வேண்டும் என்றால்விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாத படி ஒளியின் சரீரமாக நாம் ஆகி, அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது மனதின் குணங்கள் 13 ஆகும். அவை ராகம், துவே ஷம், காமம், குரோதம், உலோகம், மோகம், மதம், மாச் சர்யம் (பொறாமை) ஈரிஷை, அசூயை, டம்பம், தர்பம், அகங்காரம், குணங்களை மாற்ற கடை பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சகுணம், ஸ்தோத்திரம், தியானம், யாகம், மவுனம், பக்தி, சித்தி, சிரத்தை, ஞானம், வைராக்கியம்.

    13 குணங்களை செம்மைப்படுத்தி நாம் பரவாசுதேவனின் பரமபதத்தை அடையும் வழிகளை உதாரணங்களுடன் விளக்குவதே பாம்பு, ஏணி என நாம் விளையாடும் பரமபத சோபன விளையாட்டு. பரமனின் பாதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம் பரமபதம்.

    நம் வாழ்க்கையில் நல்லதைச் செய்வோம். அதே சமயம், நம்மை அறியாமல் வேதனை போன்ற நிலை ஏற்படும் போது விஷம் போன்ற பாம்பு நிலைகளால் கொத்தப்பட்டு நோய் வாய்ப்பட்டு மனித சரீரத்தை இழந்து இழிநிலையான சரீரத்தை பெற்று அதிலிருந்து மீண்டு மனிதனாகி, மீண்டும் இழந்து மீண்டும் வளர்ந்து என இந்த சுற்றிலேயே இருக்கிறோமே தவிர மெய் வழியை அடையும் தன்மை இல்லாமல் இருக்கிறோம்.

    அத்தகைய மெய் வழிக்கு செல்வதற்கு என்ன வழி என்பதைத்தான்அன்று மெய்ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். பரமபதம் வாழ்க்கையின் ரகசியத்தை சூட்சுமத்தை மனிதனுக்கு உணர்த்தும் பேருண்மையின் பாதை.

    பரமபதம் அடைவது என்றால் பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களில் இருந்து அடுக்கடுக்காகச் சென்று மனிதன் என்ற நிலை பெற்று அதில் இருந்து உயிரை ஒளியாக மாற்றி, உடலை விட்டு உச்சிக்கு சென்று விண்ணில் பேரொளியாக நின்று நிலைபெற கூடிய நிலையை பரமனின் பதம் எனக் காட்டி அதற்கு உகந்த நாளாகத்தான் ஏகாதசியை நமக்கு ஞானிகள் காட்டியுள்ளனர்.

    • வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • இந்த நாளில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது.

    ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவு நாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும்.

    அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்).

    ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.

    தேவையானதை முதல் நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

    • வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும்.
    • மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி.

    கயிலாயத்தை ஆண்ட சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.

    உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.

    மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதம் இருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும்.

    • திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
    • பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைணவ தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும்.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசோசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளால் நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.

    • நாளை ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
    • உற்சவர் தேவநாதசாமி மோகன அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவில் 8-ம் நாளான நேற்று பங்களா உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதில் உற்சவர் தேவநாதசாமி மோகன அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை தொடர்ந்து அன்றைய தினம் பகல் பத்து உற்சவம் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து காலை 5.30 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெறும். இதை தொடர்ந்து அன்றைய தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க மேற்கூரையும் பொருத்தப்பட்டுள்ளன.
    • சுவாமி தரிசனத்துக்கு இலவச கட்டண முறையில் அனுமதி உண்டு.

    நாமக்கலில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது .குடைவறை கோயிலான இந்த கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டில் ஜனவரி 2-ந் தேதி நடைபெறும் ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நெரிசலின்றி செல்லவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கோவிலுக்கு முன்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க மேற்கூரையும் பொருத்தப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்துக்கு இலவச கட்டண முறையில் அனுமதி உண்டு. மேலும் பக்தர்கள் தடுப்புகள் வழியாக செல்லாமல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாதையின் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி நாள் அன்று கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
    • பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் விழாவை சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 இணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள், வைணவ கோவில்கள் அல்லாத பிற கோவில்களின் செயல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எளிய முறையில் விரைவாக தரிசனம் செய்திட வசதியாக ஒழுங்குப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.

    பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய வரிசைமுறை நீட்டிக்கவும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்களும், அவசர ஊர்திகளும் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சியின் மூலம் சுழற்சி முறையில் 150 தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், 1,500 போலீசாரை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி முககவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. என்.கே.டி. பள்ளி மற்றும் வெலிங்டன் பள்ளி வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளன்று பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அன்னப்பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறந்து 11-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவாரம் வழியாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆங்கில புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கான வசதி ஏற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

    முன்னேற்பாடு பணிகள், திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள், பழைய அன்னப்பிரசாத கூடம் உள்பட பல்வேறு இடங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஜனவரி 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிபாரிசு கடிதங்களும், எந்தப் பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது, நிராகரிக்கப்படும். இருப்பினும், செல்ப் புரோட்டோகால் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள், ரூ.300 டோக்கன்களுடன் பக்தர்கள் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிகளில் திருமலைக்கு வர வேண்டும்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக் கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இதுதவிர மேலும் கூடுதலாக அன்னப்பிரசாத மையங்களை திறக்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் பிரதான கல்யாணக் கட்டா வளாகம் எதிரே அமைந்துள்ள பழைய அன்னப்பிரசாத வளாகம், நாராயணகிரி பூங்கா, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் (பி.ஏ.சி-4) ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், காபி, டீ ஆகியவை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார், என்ஜினீயர் ஜெகதீஸ்வர்ரெட்டி, சுகாதார அதிகாரி டாக்டர் ஸ்ரீதேவி, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, அன்னப்பிரசாத திட்ட சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 3-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது.
    • இலவச தரிசனம் 2-ந்தேதி இரவு 10 மணி வரை நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருகிற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. 2 நாட்கள் கோவிலில் மார்கழி மாத கைங்கர்யமாக நள்ளிரவு 12.45 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணி வரை மூலவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு தோமால சேவை, கொலு நடக்கிறது.

    இதையடுத்து 2-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனம் அன்று இரவு 10 மணி வரை நடக்கிறது.

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
    • சயன கோலத்தில் சுவாமி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

    நவதிருப்பதி கோவில்களில் கடந்த 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழா தொடங்கியது. இராப்பத்து திருவிழாவில் முதல் நாளான வருகிற ஜன.2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவத்திருப்பதி கோவில்களில் சுவாமி சயன திருக்கோலத்தில் எழுந்தருளி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையும் மற்ற கோவில்களில் சுவாமிகள் இரவு 7 மணி வரையும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இரவு 7 மணிக்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் இரவு 11மணிக்கும், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ஆழ்வார்திருநகரி கோவிலில் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் சயன திருக்கோலத்தில் சுவாமி பொலிந்து நின்றபிரான் மதியம் 1.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் எனவும் கோவில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அக்கட்சியினர் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கோவில் நிர்வாகத்திடம் தரிசன நேரத்தை மாற்றக்கூடாது என வலியுறுத்தினர்,

    பின்னர் மாவட்ட தலைவர் கூறுகையில், நவதிருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகர் ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஒன்பதாவது திருத்தலமாகும். வைகுண்ட ஏகாதசி அன்று மற்ற கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் கடைசி கோவிலான ஆழ்வார்திருநகரி வரும்போது மாலை வரை சயன கோலத்தில் சுவாமி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதைவிடுத்து மதியம் 1.30 மணிக்கே சயன கோலம் முடிவிற்கு வந்தால் பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாமல் போய்விடும். வழக்கமான நடைமுறையை மாற்றக்கூடாது. இதை மீறினால், வருகிற டிசம்பர் 29-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், 30-ந் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும், என்றார்.

    இதுகுறித்து செயல் அலுவலர் அஜித் கூறுகையில், வைகுண்ட ஏகாதசி திதியை கருத்தில் கொண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஏகாதசி திதி நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் மற்றும் ஆச்சாரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவாமி. சயன திருக்கோலத்திற்கு பிறகு பல்வேறு பணிகள் உள்ளது. மூலவர் சன்னதி திறந்திருப்பதால் பக்தர்கள் இரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம், என்றார்.

    • இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.
    • முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 2-ந் தேதி முதல் 11 ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்று தீர்ந்தன.

    இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களுக்கான இலவச டைம் ஸ்லாட் டிக்கெட் வரும் 1-ந் தேதி முதல் தினமும் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகை யில்:-

    வைகுண்ட வாசல் தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 1-ந் தேதி இலவச டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கிருஷ்ணதேஜா ஓய்வு இல்லத்தில் தரிசன நேரத்திற்கு வரவேண்டும்.

    குறைந்த அளவு அறைகள் மட்டுமே உள்ளதால் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.

    தரிசன டிக்கெட் அல்லது இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க இலவச டைம் ஸ்லாட் டோக்கன்கள் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும்.

    திருப்பதியில் நேற்று 62,152 பேர் தரிசனம் செய்தனர். 30,682 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
    • ஜனவரி 2-ந்தேதி இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு உள் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். அதன் பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது. 11.30 மணக்கு பார்த்த சாரதி சுவாமி உற்சவர், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    ×