என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
- ஜனவரி 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அன்னப்பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறந்து 11-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவாரம் வழியாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆங்கில புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கான வசதி ஏற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
முன்னேற்பாடு பணிகள், திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள், பழைய அன்னப்பிரசாத கூடம் உள்பட பல்வேறு இடங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஜனவரி 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிபாரிசு கடிதங்களும், எந்தப் பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது, நிராகரிக்கப்படும். இருப்பினும், செல்ப் புரோட்டோகால் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள், ரூ.300 டோக்கன்களுடன் பக்தர்கள் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிகளில் திருமலைக்கு வர வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக் கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இதுதவிர மேலும் கூடுதலாக அன்னப்பிரசாத மையங்களை திறக்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
ஜனவரி 1-ந்தேதி முதல் பிரதான கல்யாணக் கட்டா வளாகம் எதிரே அமைந்துள்ள பழைய அன்னப்பிரசாத வளாகம், நாராயணகிரி பூங்கா, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் (பி.ஏ.சி-4) ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், காபி, டீ ஆகியவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார், என்ஜினீயர் ஜெகதீஸ்வர்ரெட்டி, சுகாதார அதிகாரி டாக்டர் ஸ்ரீதேவி, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, அன்னப்பிரசாத திட்ட சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்