search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரவதை"

    • கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
    • சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.

    மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    ×