search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாய வளைகாப்பு விழா"

    • வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.வத்தலக்குண்டு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வத்தலக்குண்டு பேரூராட்சி சமுதாய கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரிமுருகன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வத்தல க்குண்டு தி.மு.க. பேரூர் செயலாளர் சின்ன த்துரை, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பாக்கியலட்சுமி, ஊட்டச்சத்து நிபுணர் மதர்தெரசா, பேராசிரியர் சரவணசெல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பின்னர் சமுதாய வளை காப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் போட்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 வகையான உணவு வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயராணி நன்றி கூறினார்.

    • 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், வெள்ளோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகி த்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ, குமாராவலசு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டணர்.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சொந்த நிதியிலிருந்து ரூ.1,000மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.
    • பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காங்கயம் : 

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர். அ.லட்சுமணன் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் காங்கயம் பழனியப்பா திருமண மண்டபத்தில் 180 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000-மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) ஸ்டெல்லா, தி.மு.க. பிரமுகர்களான குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தி.மு.க. யூனியன் கவுன்சிலர் ரவி, கவுன்சிலர் செல்வம் ராமசாமி, படியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், காங்கயம் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருள்கள் மற்றும் தனது சார்பில் சேலை, பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழா வின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளை காப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத் திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் தொடங்கி 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது டன் தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவ கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பால்துரை, சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூ ராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முக மது, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோமதி சண்முகம், ராஜேஸ்வரி சேகர், சரண்யாஹரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.
    • மேயர் நாகரத்தினம் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சமூகநலன் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.

    தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமை ச்சர் முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 111 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், 45-வது வார்டு கவுன்சிலர் பிரவீனா சந்திரசேகர், மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேயர் நாகரத்தினம் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

    • 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • நகாராட்சி தலைவர் பரிதா நவாப் கர்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ வழங்கி வாழ்த்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    தற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

    கிருஷ்ணகிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி லட்சுமி, மற்றும் தெய்வமணி, தனம், அமிர்தா, ஜெயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கர்ப்பிணிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு புடவை, பூ, பழம், மஞ்சள், குங்குமம் அடங்கிய சீர்வரிசையை மதியழகன் எம்.எல்.ஏ., வழங்கி வாழ்த்தினார். கிருஷ்ணகிரி நகாராட்சி தலைவர் பரிதா நவாப் கர்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ வழங்கி வாழ்த்தினார்.

    இதில் தி.மு.க., மாவட்ட அவை தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கவுன்சிலர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    தோவாளை தாலுகாவில் 123 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் ஆரல்வாய்மொழி பகுதியில் 41 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.இந்த மையத்திற்குட்பட்ட 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் பண்டாரபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொன்பகவதி தலைமை தாங்கினார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், பீமநகரி ஊராட்சி தலைவர் சஜிதா சுப்பிரமணியம், சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வளைகாப்பு நிகழ்ச்சியானது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இக்கால கட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மேலும் எந்த துயர சம்ப வத்தினை பற்றியும் சிந்தித்து மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.

    மேலும் உங்களின் குழந்தைகள் ஆரோக்கி யமாக இருக்க வேண்டும் என்றால் குழந்தை பிறந்ததும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை கடைபிடிக்க வேண்டும். இது அனைத்து கர்ப்பிணி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவிதா, தோவாளை ஊராட்சி துணைத்தலைவர், தாணு, பண்டாரபுரம் ஊர் தலைவர் ராமன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • குடியாத்தத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவிற்கான ஊராட்சி களில் ஊட்டச்சத்தை தூண்டுதல் மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ராஜாகோவில் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் வேலூர் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரிபிரேம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் விமலகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தனது சொந்த செலவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை அனுப்பி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அந்த சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.ரமேஷ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் எம். சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட குடியாத்தம் வட்டார அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

    • 200 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

    தாராபுரம் :

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் தாராபுரம் புறவழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 200 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் தலைமை தாங்கினார்.ஆர்.டி.ஓ. குமரேசன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ராமர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கே.ஜீவானந்தம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனஜா, தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோட்டில் உள்ள ராசி மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தலைமையில், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.முகனியரசி முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் கு.மரகதம் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகையான உணவு, ரொக்கம் ரூ. ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலம் முன் பின் பராமரிப்பு ,குழந்தைக்கு உணவு ஊட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்களை குறித்து எடுத்துக்கூறினார்.

    இதில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி, வெள்ளகோவில் தி.மு.க.நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர் கழக செயலாளர் செண்பகம் பாலு, முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர்கள் ஜெயக்குமார், எத்திராஜ், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் நளினி கார்த்திகேயன், ஏ.என்.சேகர், செல்வராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×