search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Community baby shower"

    • வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.வத்தலக்குண்டு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வத்தலக்குண்டு பேரூராட்சி சமுதாய கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரிமுருகன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வத்தல க்குண்டு தி.மு.க. பேரூர் செயலாளர் சின்ன த்துரை, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பாக்கியலட்சுமி, ஊட்டச்சத்து நிபுணர் மதர்தெரசா, பேராசிரியர் சரவணசெல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பின்னர் சமுதாய வளை காப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் போட்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 வகையான உணவு வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயராணி நன்றி கூறினார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி,அங்கன்வாடி பணியாளர்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, 200 கர்ப்பிணிகளுக்கு தனது சொந்த செலவில் சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்,ஹரிணி தில்லை, முகமது அமீன், ஒன்றிய குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா,ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் திசையன்விளையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலை மையில் திசையன்விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந் துள்ள கெட்டி மேளம் மகாலில் நடைபெற்றது.

    100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று கர்ப்பிணி பெண்களுக்கு புடவை மற்றும் பரிசு பொரு ட்கள் வழங்க ப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக விழா முடிவுற்றதும் 7 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெ ண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பினும் வீட்டில் நடைபெறும் வளை காப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதிகா சரவணகுமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சூசை ரத்தினம், பஞ்ச வர்ணம் ஜெயகுமார், வளர்மதி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி, பால சுப்ரமணியம், திசை யன்விளை பேரூர் இளை ஞரணி அமைப்பாளர் நெல்சன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், அனைச்சியார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவ்வலடி சரவணகுமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம்கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், கிங்ஸ்டார் சேர்மதுரை, அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கோகுல், புளியடி குமார், முத்து, எழில் ஜோசப், சாகுல் ஹமீது, முத்தையா, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொ கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார்.

    கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

    வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் மகிழ்ச்சியான சூழலுக்கு சென்று ஆரோக்கி யமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களில் 12 ஆயிரத்து 714 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவில் நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்க மாக தான் 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

    கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சொந்த நிதியிலிருந்து ரூ.1,000மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.
    • பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காங்கயம் : 

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர். அ.லட்சுமணன் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் காங்கயம் பழனியப்பா திருமண மண்டபத்தில் 180 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000-மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) ஸ்டெல்லா, தி.மு.க. பிரமுகர்களான குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தி.மு.க. யூனியன் கவுன்சிலர் ரவி, கவுன்சிலர் செல்வம் ராமசாமி, படியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், காங்கயம் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக “100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு” சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது.
    • விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

     கல்லிடைக்குறிச்சி:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக "100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு" சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது

    விழாவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பார்வதி, இசக்கிபாண்டியன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா மற்றும் வசந்த சந்திரா, மேலச்செவல் தலைவர் அன்னபூரணியம்மாள், கோபாலசமுத்திரம் தலைவர் தமயந்தி மற்றும் சுந்தர்ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரியசெல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்து லெட்சுமி, செய்யது அலி பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின்தேனா, காந்திமதி , சீதாலெட்சுமி மற்றும் சரஸ்வதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • 70 பேருக்கு சீர்வரிசை வழங்கினர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெரணமல்லூர், வட்டார கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வேணிஏழுமலை, தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், துணைத் தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்டதிட்ட அலுவலர் கந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார திட்ட அலுவலர் ரேவதி, வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சீர்வரிசை பொங்கல் 70 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, குழந்தைகள் வட்டார கண்காணிப்பாளர் சிவகுமார், மேற்பார்வையாளர்கள் முத்தழகி, மகேஸ்வரி, அலமேலு, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் உள்பட பல்வேறு சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) ரூபி பெர்ணான்டோ வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் உள்பட பல்வேறு சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச் செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் ரேவதி கோமதிநாயகம், சுதாகர், அரசு வழக்கறிஞர் சாத்ராக், கேடிசி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடைபெற்றது.
    • 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கப்பட்டது

    உடன்குடி:

    தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் உடன்குடி வட்டார ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி ஊராட்சி ஓன்றிய அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலம்கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

    மேலும் தமிழக அரசு சார்பில் பெண்கள் நலன், கிராமப்புற பெண்களின்சுய பொருளாதார முன்னேற்றம், செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்து பேசினார்.

    திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி வட்டார வளர்ச்சி ஆலுவலர் ஜான்சிராணி, உடன்குடி பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால்ராஜேஷ், வட்டார மருத்துவ ஆலுவலர் சு.ஆனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் -மரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜூதீன், முபாரக், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ரவிராஜா, மகாவிஷ்ணு, ஷேக் முகம்மது,

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் லெபோரின், பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அன்புராணி, ஆபித், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், ஆஜய், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜி பக்கீர் உட்பட திரளான அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • சீர்வரிசை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவினை குத்து விளக்கு ஏற்றி வட்டார பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை தட்டுக்களை அமைச்சர் சொந்த செலவில் வழங்கி னர். பின்னர் பேசியதாவது:-

    ஆட்சி பொறுப் பேற்கும் பொழு தெல்லாம் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி இருக்கின்றார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று சொல்லக்கூ டிய அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொதுமக்க ளுக்கும் மகளி ருக்கும் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தா ர்களோ அதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் எந்த கட்சியாயினும் குறிப்பாக தாய்மார்கள் நமது முதல்வரை மறக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு மகளிருகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அமைச்சர் காந்தி 200 கர்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்புகளையும், மதிய உணவினையும் சொந்த செலவில் அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்ச பிரியா நன்றி கூறினார்.

    • கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சா ரியில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது‌. இதில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம் எல் ஏ, துணை மேயர் சுனில் குமார், 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது

    கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நாம் அரணாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நமது முன்னோர்களால் நடத்தப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழக முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு எந்தெந்த சலுகைகள் வழங்க வேண்டும் என யோசித்து எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்காக சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை வளர்த்து நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    சரியான உணவு விகிதத்தை கடைபிடித்து உங்களுக்கு சிவப்பு அணுக்கள் அதிகரிக்க கூடிய மாதுளை மற்றும் பழ வகைகள் நாட்டு காய்கறிகள் தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • குடியாத்தத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவிற்கான ஊராட்சி களில் ஊட்டச்சத்தை தூண்டுதல் மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ராஜாகோவில் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் வேலூர் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரிபிரேம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் விமலகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தனது சொந்த செலவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை அனுப்பி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அந்த சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.ரமேஷ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் எம். சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட குடியாத்தம் வட்டார அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

    ×