search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
    X

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி சீர்வரிசை பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்.

    200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

    • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • சீர்வரிசை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவினை குத்து விளக்கு ஏற்றி வட்டார பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை தட்டுக்களை அமைச்சர் சொந்த செலவில் வழங்கி னர். பின்னர் பேசியதாவது:-

    ஆட்சி பொறுப் பேற்கும் பொழு தெல்லாம் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி இருக்கின்றார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று சொல்லக்கூ டிய அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொதுமக்க ளுக்கும் மகளி ருக்கும் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தா ர்களோ அதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் எந்த கட்சியாயினும் குறிப்பாக தாய்மார்கள் நமது முதல்வரை மறக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு மகளிருகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அமைச்சர் காந்தி 200 கர்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்புகளையும், மதிய உணவினையும் சொந்த செலவில் அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்ச பிரியா நன்றி கூறினார்.

    Next Story
    ×