search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் 550 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
    X

    திருவண்ணாமலையில் 550 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

    • சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொ கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார்.

    கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

    வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் மகிழ்ச்சியான சூழலுக்கு சென்று ஆரோக்கி யமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களில் 12 ஆயிரத்து 714 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவில் நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்க மாக தான் 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

    கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×