search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    111 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
    X

    111 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

    • சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.
    • மேயர் நாகரத்தினம் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சமூகநலன் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.

    தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமை ச்சர் முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 111 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், 45-வது வார்டு கவுன்சிலர் பிரவீனா சந்திரசேகர், மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேயர் நாகரத்தினம் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

    Next Story
    ×