search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திர கிரகணம்"

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை நடை சாத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் தினமும் பக்தர்களின் தரிச னத்திற்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக்கோவில், சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காககோவில் நடை திறக்கப்படும். 

    • இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் சந்திரகி ரகணத்தையொட்டிவருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடைஅடைக்கப்படும்.

    சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    அதே நேரத்தில் இந்த கோவிலில் மதியம் நடைபெறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 8-ந்தேதி மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
    • 8-ந்தேதி மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் தினமும் பக்தர்களின் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக்கோவில், சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படும்.

    • ஈரோட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில்.
    • விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் அடைக்கப்படும். ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூ்ா, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு தினமும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் தினமும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 8-ந் தேதி அன்று மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை 6½ மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும்.

    எனவே அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது.
    • சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின்போது பழனி மற்றும் அதன் உப கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 8-ந்தேதி மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் பெரியாவுடையார் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    • 8-ந்தேதி சந்திர கிரகணம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் 12½ மணிநேரம் மூடப்படுகிறது
    • இங்கு 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

    திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி கோவில் அமைந்துள்ளது. இங்கு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.

    சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பஞ்சவடி கோவில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 12.30 மணிநேரம் மூடப்படுகிறது. அதாவது அன்றைய தினம் அனைத்து சன்னதிகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த தகவலை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • 8-ந்தேதி மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
    • 7-ந்தேதி மாலை 4.54 மணிக்கு மேல் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும், நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    இதனால் அன்றைய தினம் கோவில் நடையானது, காலை 9 மணி அளவில் சாத்தப்பட்டு சந்திர கிரகணம் முடிவுற்ற பின் இரவு 7.31 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.

    மேலும் 7-ந்தேதி பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் அன்று மாலை 4.54 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும் என தெரிவிக்கிப்பட்டுள்ளது.

    • சந்திரகிரகணம் 8-ந்தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது.
    • வருகிற 7-ந்தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சந்திரகிரகணம் வருகிற 8-ந் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும். மேலும் அன்றைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வருகிற 7-ந் தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • சந்திர கிரகணம் 8-ந்தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.
    • அன்னபிரசாத கூடம் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.

    சந்திர கிரகணம் வருகிற 8-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது.

    இதனால் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.

    இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • 25-ந்தேதி சூரிய கிரகணம் நடக்கிறது.
    • நவம்பர் 8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

    மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நவம்பர் 8-ந் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று காலை முதல், மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    எனவே அன்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த டிக்கெட்டுகள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 72,243 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,652 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து வகையான தரிசனமும் ரத்து.
    • சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
    • அன்னபிரசாதம் வழங்கப்படாது.

    திருமலை

    வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.

    எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×