search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைக்காலம்"

    • அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் நேற்று முன்தினம் விடை பெற்றுவிட்டது.
    • தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    சென்னை:

    அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் நேற்று முன்தினம் விடை பெற்றுவிட்டது. அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நிலையிலும் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 102.92 டிகிரி வெயில் பதிவானது. மற்ற இடங்களில் பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.98 டிகிரி (36.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    கோவை - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

    கடலூர் - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)

    தர்மபுரி - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

    ஈரோடு - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)

    கரூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 71.6 டிகிரி (22 செல்சியஸ்)

    மதுரை நகரம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

    மதுரை விமானநிலையம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    நாகப்பட்டினம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    நாமக்கல் - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)

    சேலம் - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    திருச்சி - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    திருத்தணி - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.92 டிகிரி (34.4 செல்சியஸ்)

    ஊட்டி - 66.2 டிகிரி (19 செல்சியஸ்)

    வால்பாறை - 80.6 டிகிரி (27 செல்சியஸ்)

    வேலூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

    இதுதவிர, புதுச்சேரியில் 96.26 டிகிரியும் (35.7 செல்சியஸ்), காரைக்காலில் 95.54 டிகிரியும் (35.3 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.

    • அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது.
    • வெயிலினால் காய்ந்து கிடந்த இலை சறுகுகள், சாலை மண்கள் புழுதியை கிளப்பியபடி காற்றுடன் சேர்ந்து பறந்தது.

    சென்னை:

    கோடை காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இடையில் அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் பிற்பாதியில் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகளவில் இருந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது. இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் சில இடங்களில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று சில இடங்களில் வெயில் சுட்டெரிக்கத்தான் செய்தது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது.

    ஆனால் அக்னி நட்சத்திரம் காலத்தில் பதிவான வெயிலை விட குறைவாகவே சென்னை நகர் பகுதிகளில் இருந்தது. மீனம்பாக்கம் உள்பட புறநகர் பகுதிகளில் வெயில் இயல்பை விட சற்று அதிகமாகவே பதிவானது.

    நேற்று பிற்பகலில் இருந்து சூரியன் சுட்டெரித்து வந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சீதோஷ்ண நிலை அப்படியே மாறியது. மேகங்களே இல்லாமல், வெறுமையாக இருந்த வானத்தில் திடீரென்று கருமேகங்கள் சூழத் தொடங்கின.

    5 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக்கியது. மேலும் சூறாவளி காற்றும் பலமாக வீசியது. வெயிலினால் காய்ந்து கிடந்த இலை சறுகுகள், சாலை மண்கள் புழுதியை கிளப்பியபடி காற்றுடன் சேர்ந்து பறந்தது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமப்பட்டனர். அதிலும் வாகன ஓட்டிகள் பலரை சூறாவளி காற்று தள்ளியதால், சிலர் அச்சத்தில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியதையும் பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையோரத்தில் கடற்கரை மணலுடன் காற்று வீசியது.

    இருள் சூழ்ந்தபடி, கருமேகக்கூட்டங்கள் வந்ததால், மழை வெளுத்து வாங்கும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குளிர்ச்சியான நிலை உருவாகும் என்று எதிர்பார்த்திருந்த மக்களை, வெறும் காற்றுடன் வந்த மேகக்கூட்டங்கள் அப்படியே கலைந்து சென்று, மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டது. ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'சென்னைக்கு வடக்கில் உருவாகி, இடி மேகக்கூட்டங்களில் வந்த குளிர்ந்த காற்று சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் வந்ததால், தரைப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாலையில் 6 டிகிரி வரை வெப்பம் குறைந்திருந்தது. காற்றில் ஈரப்பதம் பெரிய அளவில் இல்லாததால், மழை பெய்யாமல் சென்றுவிட்டது' என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது.
    • கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், சூரிய பகவானின் உக்கிரம் இன்னும் தணியவில்லை.

    இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் அதிகாலையிலேயே வியர்வையில் குளித்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, பதனீர் போன்றவற்றை வாங்கி அருந்தும்படி கூறியுள்ளனர்.

    டாக்டர்களின் அறிவுரைப்படி இயற்கை பானங்களை தேடி செல்லும் மக்களின் பார்வை தற்போது கோலி சோடா பக்கமும் திரும்பி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான கோலி சோடா, ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழுத்துபாணி கண்ணாடி பாட்டில்களில் விற்பனைக்கு வந்தது.

    சாதாரண பெட்டிக்கடைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கோலி சோடாக்களின் விலை சாமானிய மக்களும் வாங்கும் அளவுக்கு இருந்ததால் இதனை அதிகமானோர் விரும்பி வாங்க தொடங்கினர். குறிப்பாக வெயிலில் அலைந்து திரும்புவோர், கோலி சோடா ஒன்றை வாங்கி அருந்தி மகிழ்ந்தனர்.

    குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது. அதன்பின்பு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற கோஷம் கிளம்பியபோது, கோலி சோடாவுக்கும் ஆதரவாக குரல் எழும்பியது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் கோலி சோடாவின் வரவு மீண்டும் தொடங்கியது.

    தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்களின் பார்வை மீண்டும் கோலி சோடா பக்கம் திரும்பி உள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கோலி சோடாவுக்கு மக்கள் மத்தியில் மீண்டும் மவுசு அதிகரித்து உள்ளது.

    கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர். இவை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.150 வரை விற்பனை ஆகிறது. இளம் தலைமுறையினரும் இப்போது கோலி சோடா பக்கம் பார்வையை திருப்பி உள்ளதால் சென்னையில் கோலி சோடா விற்பனை சூடு பிடித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும்.
    • சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    சென்னை:

    அக்னி நட்சத்திரம் விடைபெற்ற பிறகாவது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனால் வெப்ப அனல்கள் இன்னும் 2 வாரங்களுக்கு குறைய போவதில்லை என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    நேற்று 13 இடங்களில் வெப்பம் சதம் அடித்த நிலையில் தொடர்ந்து இதே நிலைதான் ஜூன் முதல் வாரம் வரை நீடிக்கும் என்றார். தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான். அவர் மேலும் கூறியதாவது-

    அக்னி வெயிலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பொதுவாகவே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று அதிகமாக வீசும்.

    இது ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் இருந்து வெப்ப காற்றை இழுத்து வரும். இதனால் வட தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு.

    தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த பருவ மழை சென்னைக்கு கிடைக்காது. கேரளா, கன்னியாகுமரி, வால்பாறை, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும்.

    சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதுவும் ஜூன் முதல் வாரத்துக்கு பிறகுதான்.

    வேலூருக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகும் நகரமாக சென்னை உள்ளது.

    இந்த மாதத்தில் மட்டும் இரண்டு நாட்கள் உச்ச வெப்ப நிலை பதிவானது. அதாவது நுங்கம்பாக்கத்தில் 16-ந்தேதி 108.7 டிகிரியும், 27-ந்தேதி 106.88 டிகிரியும் பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் விடைபெறுகிறது.
    • கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை :

    கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்தாலும், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அவ்வப்போது கோடை மழையும் தன் பங்குக்கு பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பான மழை அளவைவிட 65 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சூளகிரி 7 செ.மீ., சின்னார் அணை 6 செ.மீ., வறட்டுப்பள்ளம் 4 செ.மீ., தேன்கனிக்கோட்டை, வி.களத்தூர், குன்றத்தூர் தலா 3 செ.மீ., செம்பரம்பாக்கம், குமாரபாளையம், அம்மாபேட்டை, துவாக்குடி, கோத்தகிரி, விரகனூர், கவுந்தம்பாடி, திருவாலங்காடு, தாமரைப்பாக்கம், ஆவடி, கெட்டி, திருவள்ளூர், ஏற்காடு, மேற்கு தாம்பரம் தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

    நாளையுடன் விடைபெறும் அக்னி நட்சத்திரம்

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டில் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கினாலும், கோடை மழை இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

    கோடை மழை சற்று குறைந்ததும் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உக்கிரத்தை வெளிகாட்டியது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த கத்தரி வெயில் காலத்தில் உச்சபட்ச வெயில் பதிவாக இருந்து வருகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 இடங்களுக்கு மிகாமல் வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கிறது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) விடைபெற இருக்கிறது. இதனால் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் உக்கிரத்துடன் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஊட்டி, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
    • ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வி.சி.காலனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் காணப்பட்டது.

    தற்போது கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் குறைந்து இதமான கால நிலை நிலவி வருகியது. அவ்வப்போது மூடுபனியுடன் மழையும் பெய்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஊட்டி, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மழையில் இருந்து தப்பிக்க வாகனங்களில் சென்றவர்கள், வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வி.சி.காலனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் மழை நீரில் சேதம் அடைந்தது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வாளியை கொண்டு வெளியேற்றினர்.

    திடீரென பெய்த மழையால் ஊட்டியில் கடும் குளிா் நிலவியது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வெளியில் வராமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினா். குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    • 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
    • தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரத்தை பார்க்கலாம்.

    சென்னை :

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    மீனம்பாக்கம் - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)

    கோவை - 97.88 டிகிரி - (36.6 செல்சியஸ்)

    குன்னூர் - 76.28 டிகிரி - (24.6 செல்சியஸ்)

    கடலூர் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    தர்மபுரி - 97.16 டிகிரி - (36.2 செல்சியஸ்)

    ஈரோடு - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.84 டிகிரி - (33.8 செல்சியஸ்)

    கரூர் - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 70.7 டிகிரி - (21.5 செல்சியஸ்)

    மதுரை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    நாகை - 99.86 டிகிரி - (37.7 செல்சியஸ்)

    நாமக்கல் - 98.6 டிகிரி - (37 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 100.76 டிகிரி - (38.2 செல்சியஸ்)

    சேலம் - 98.6 டிகிரி - (37 செல்சியஸ்)

    தஞ்சை - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    திருச்சி - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)

    திருத்தணி - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 91.76 டிகிரி - (33.2 செல்சியஸ்)

    ஊட்டி - 68.36 டிகிரி - (20.2 செல்சியஸ்)

    வால்பாறை - 82.4 டிகிரி - (28 செல்சியஸ்)

    வேலூர் - 104 டிகிரி - (40 செல்சியஸ்)

    இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது.
    • டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    புதுடெல்லி :

    கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக தெறித்தது. மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர்.

    இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்க, சில இடங்களில் மழைத்துளியும் விழுந்தது.

    இதற்கிடையே, இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இனி வானில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்படும் எனவும், கோடைகாலத்துக்கு முந்தைய மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

    மலைப்பாங்கான இடங்களில் கனமழை பெய்யும் என்றும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேற்கண்ட மாநிலங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறியுள்ளது.

    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 முதல் 84 டிகிரி ஒட்டியே இருக்கும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (22-ந்தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று மற்றும் நாளை (22-ந்தேதி) உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் சென்னையில் வெயில் குறையும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 முதல் 84 டிகிரி ஒட்டியே இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.
    • இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொருத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 3.7 செல்சியஸ் வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    கோவை - 96.08டிகிரி (35.6 செல்சியஸ்)

    கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    தர்மபுரி - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

    ஈரோடு -102.56டிகிரி (39.2 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 91.4 டிகிரி (33 செல்சியஸ்)

    கரூர் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)

    மதுரை நகரம் -101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    நாகப்பட்டினம் - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)

    சேலம் -100.58டிகிரி (38.1 செல்சியஸ்)

    தஞ்சாவூர் -100.58 டிகிரி (38 செல்சியஸ்)

    திருப்பத்தூர் -102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருச்சி -101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    திருத்தணி -101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

    தூத்துக்குடி -92.48 டிகிரி (33.6 செல்சியஸ்)

    ஊட்டி -72.86 டிகிரி (22.7 செல்சியஸ்)

    வால்பாறை - 82.4 டிகிரி (28 செல்சியஸ்)

    வேலூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    • வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
    • ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

    கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

    குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

    மருத்துவ உதவியை நாடுங்கள்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

    அதிக நேரம் சூரிய ஒளி

    வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    வீட்டில் இருந்தபடி வேலை

    கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.

    சிக்கனுக்கு டாடா

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.

    பழங்கள், காய்கறிகள்

    அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.

    திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

    சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்

    எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

    கூடுதல் குடிநீர்

    மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.

    வெளியில் தலைகாட்டவில்லை

    விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.

    • அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது.
    • 6-வது நாளாக தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து முதல் 10 நாட்கள் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அதன் கோரத் தாண்டவத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. 6-வது நாளாக நேற்றும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

    அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொறுத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 5 டிகிரி வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நேற்று பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.98 டிகிரி

    சென்னை மீனம்பாக்கம் - 101.12 டிகிரி

    கோவை - 97.7 டிகிரி

    கடலூர் - 96.44 டிகிரி

    தர்மபுரி - 99.68 டிகிரி

    ஈரோடு - 101.84 டிகிரி

    கன்னியாகுமரி - 91.76 டிகிரி

    கரூர் - 106.7 டிகிரி

    கொடைக்கானல் - 70.88 டிகிரி

    மதுரை நகரம் - 102.2 டிகிரி

    மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி

    நாகப்பட்டினம் - 100.4 டிகிரி

    நாமக்கல் - 100.4 டிகிரி

    பாளையங்கோட்டை - 101.3 டிகிரி

    சேலம் - 101.48 டிகிரி

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி

    திருப்பத்தூர் - 102.56 டிகிரி

    திருச்சி - 102.38 டிகிரி

    திருத்தணி - 103.28 டிகிரி

    தூத்துக்குடி - 93.38 டிகிரி

    ஊட்டி - 69.98 டிகிரி

    வால்பாறை - 84.2 டிகிரி

    வேலூர் - 107.24 டிகிரி

    ×