search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடை விழா"

    • வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.
    • அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை, நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.

    மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

    மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நேற்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.

    வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    வலிய படுக்கை பூஜை நடந்த போது கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் சரண கோஷம் எழுப்பினர். இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • நள்ளிரவு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது
    • பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலில் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    கன்னியாகுமரி :

    தென் தமிழகத்தில் பெண்கள் வழிபாட்டுக்கும் பகவதி வழிபாட்டுக்கும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5 -ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14ம் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. தொடர்ந்து அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று இன்று பரணிக் கொடைவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது. மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, நள்ளிரவு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    • நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
    • வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    இதை தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நடக்கிறது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சிகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

    இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
    • ‘பெண்களின் சபரிமலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு கடந்த 5-ந் தேதி மாசிகொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தோப்புகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கடற்கரைபகுதி, லட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை, சாஸ்தான் கோவில் சாலை போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது.

    எட்டாம் கொடை விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    • கொடை விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
    • 25-ந்தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தகோவிலிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வதால் 'பெண்களின் சபரிமலை' என போற்றப்படுகிறது.

    இங்கு கடந்த 5-ந் தேதி மாசி கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    எட்டாம் கொடை விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவின் தொடர்ச்சியாக 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    • மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டேந்தி சரணகோஷத்துடன் தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    இங்கு கடந்த 5 ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 14-ந்தேதி வரை பத்து நாட்கள் மாசிக் கொடை விழா நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் எட்டாம் கொடை விழா நடக்கிறது. காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை யொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    விழாவின் தொடர்ச்சியாக 25-ந்தேதி மீனபரணி கொடைவிழா நடக்கிறது.

    • கொத்தனார்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது
    • தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை சார்பில் சந்தனகுடம் பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருறது. விழா நாட்களில் கணபதி ஹோமம், பஞ்சாபிஷேகம், திருக்கொடியேற்று, தங்கத் தேர் உலா, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, கீழ்கரை பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்து களப பவனி, கொத்தனார்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது. 5-ம் நாளான இன்று மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. நிறுவனத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம் மற்றும் தேர்மாலையுடன் யானை மீது சந்தனகுடம் பவனி நடக்கிறது.

    6-ம் நாளான நாளை (10-ந் தேதி) காலை 6.30 மணிக்கு உஷபூஜை, பகல் 12 மணிக்கு பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் சந்தனகுடம் பவனி, 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15-க்கு குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார் கோயிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடைபெறும். 7-ம் நாள் மாலை 6 மணிக்கு பாலப்பள்ளம் பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை சார்பில் சந்தனகுடம் பவனி நடக்கிறது. 8-ம் நாள் பகல் 12.30 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி, மாலை 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி நடக்கிறது. 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடக்கிறது 10-ம் நாள் இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    • தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இதேபோல இந்தாண்டு கொடை விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 10-ம் திருநாளன்று தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மாலையில் பறவை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டாற்று பாலம் அருகே, விரதம் இருந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சிலர் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்கிட, பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடி எடுத்தார். பறவை காவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வலம் வந்து தீப்பாச்சி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய மாசிக் கொடை விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டை ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து நடத்தி வருகின்றன.

    இந்த ஆண்டு 86-வது மாநாடு மார்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ைஹந்தவ சேவா சங்கம், மாநாட்டை நடத்தக் கூடாது என்றும், அரசு தான் நடத்த வேண்டும் என்றும், மாநாடு பந்தலுக்கு டெண்டர் கொடுத்து பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவில் ஸ்ரீகாரியம், ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது பக்தர்களுக்கும், சேவா சங்க உறுப்பினர்களுக்கும் வருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில், கடந்த 85 ஆண்டுகளாக நடந்தது போல இந்த ஆண்டும், இந்து சமய மாநாட்டை அதே இடத்தில்,ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொடை விழாவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை. 2-ம் நாள் காலை அபிஷேக ஆராதனை, கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். பூஜையினை திசையன்விளை அம்பிகை தாசன் ஆர். ஜி. பாலன் வழி நடத்தினார். தொடர்ந்து விஷேச புஷ்பாஞ்சலி, தீபாராகனை நடைபெற்றது. பின்னர் கனியான் கூத்து, வில்லிசை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

    • இந்த விழா 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    காட்டாத்துறை குழிவெட்டான்விளை பராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா இன்று(புதன்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழாவில் நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு லலிதா ஸ்கஸ்ரநாம அர்ச்சனை, இரவு 7 மணிக்கு இந்து சமய கருத்தரங்கம், 8.30 மணிக்கு அய்யாவழி இன்னிசை விருந்து, 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு யானை மீது அம்மன் எழுந்தருளி பவனி வருதல், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 29-ந்தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு மஞ்சள்பால் குளித்தல், மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வினோத், துணைத்தலைவர் அஜித், செயலாளர் விஜித், துணை செயலாளர் சஜின், பொருளாளர் மத்தியாஸ், ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், கவுரவ தலைவர் வின்சென்ட் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • கொடை விழா இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம வழிபாட்டை நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரமத்தை சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்தியாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5,.30 மணிக்கு பக்திகானம், காலை 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுருள் அழைப்பு, பகல் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சிங்காரி மேளம், பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி, மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7 மணிக்கு வில்லிசை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு மண்டல பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    மேலசங்கரன்குழி ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டப்பட்டது. 23-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பும், 25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடுவாசிப்பு பட்டாபிஷேகமும் நடந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு சுவாமி திருக்கோவில் பவனி வருதலும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

    வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 10 மணிக்கு கீதா பாராயணத்தை யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். இரவு 8மணிக்கு சுவாமி பணிவிடை, 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சுவாமி அலங்கார வாகன பவனி வருதல் ஆகியவை நடைெ்பறுகிறது. அதிகாலை 3 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    ×