search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசி கொடை விழா - மண்டைக்காடு கோவிலில் நாளை நள்ளிரவு வலியபடுக்கை பூஜை
    X

    மாசி கொடை விழா - மண்டைக்காடு கோவிலில் நாளை நள்ளிரவு வலியபடுக்கை பூஜை

    • கொத்தனார்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது
    • தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை சார்பில் சந்தனகுடம் பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருறது. விழா நாட்களில் கணபதி ஹோமம், பஞ்சாபிஷேகம், திருக்கொடியேற்று, தங்கத் தேர் உலா, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, கீழ்கரை பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்து களப பவனி, கொத்தனார்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது. 5-ம் நாளான இன்று மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. நிறுவனத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம் மற்றும் தேர்மாலையுடன் யானை மீது சந்தனகுடம் பவனி நடக்கிறது.

    6-ம் நாளான நாளை (10-ந் தேதி) காலை 6.30 மணிக்கு உஷபூஜை, பகல் 12 மணிக்கு பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் சந்தனகுடம் பவனி, 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15-க்கு குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார் கோயிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடைபெறும். 7-ம் நாள் மாலை 6 மணிக்கு பாலப்பள்ளம் பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை சார்பில் சந்தனகுடம் பவனி நடக்கிறது. 8-ம் நாள் பகல் 12.30 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி, மாலை 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி நடக்கிறது. 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடக்கிறது 10-ம் நாள் இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    Next Story
    ×