search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்கம்"

    • பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
    • ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க திருப்பூா் மாவட்டத்தில் ஒரு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடராகவும், 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சங்க உறுப்பினா் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். மேலும், சங்க உறுப்பினா்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

    மகளிா் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501, 503, 5ஆவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரி அல்லது 94450-29552, 0421-2971112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் அறிவுரைப்படி கடன் வழங்கும் மேளா நடந்தது.
    • 15 நபர்களுக்கு ரூ.14.37 லட்சம் பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது

    கோவை

    சூலூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் அறிவுரைப்படி கடன் வழங்கும் மேளா நடந்தது.

    விழாவுக்கு சங்க தலைவர் சி.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் எஸ்.ஏ.மோகன், அருண்குமார், எஸ்.வி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் ரவிச்சந்திரன், திலகவதி, ரங்கநாயகி, காந்திமதி, சரோஜினி கடன் மேளா பற்றி சிறப்புரையாற்றினர். சங்க செயலாளர் ஜோதிமணி வரவேற்றார். சூலூர் வட்டார கள அலுவலர் ராமசாமி கடன் மேளாமற்றும் மின்னணு கல்விசார் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    இதில் டாப்செட்கோ 4 நபர்களுக்கு ரூ.2 லட்சமும், 15 நபர்களுக்கு ரூ.14.37 லட்சம் பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முடிவில் சங்க எழுத்தர் ராகவன் நன்றி கூறினார்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
    • இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர்

    சூலூர் அருகே சிந்தாமணி புதூரில் ஒட்டர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.


    நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பேச்சிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த மேளாவில் 8 நபர்களுக்கு பயிர் கடனாக 8 லட்சம் ரூபாய்க்கும், மகளிர் குழு கடனாக 12 குழுக்களுக்கு ரூபாய் 15 லட்சத்துக்கும், மாற்றுத்திறனாளி கடன் தொகையாக இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான கடன் மனுக்கள் பெறப்பட்டன. சங்கத்தின் செயலர் சகாய பவுலின் மேரி நன்றி கூறினார்.

    • மதுரை கூட்டுறவு சங்கத்தில் ரூ.42 லட்சம் முறைகேடு செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாவினிப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. நாங்கள் நடப்பு ஆண்டுக்கான விவசாய பயிர் கடன் பெற்று இருந்தோம். அதனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தி ரசீதும் பெற்றுள்ளோம்.

    நாங்கள் புதிய பயிர் கடன் பெறுவதற்காக வங்கிக்கு சென்றோம். அப்போது உங்களது பழைய கடன் வரவு ஆகவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எங்களது சேமிப்பு கணக்கில் நாங்கள் செலுத்திய தொகை மற்றும் கரும்பு பில் தொகை ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது.

    இதனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மோசடி- கையாடல் செய்த விவசாயிகளின் ரூ.42 லட்சத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும்.

    திருப்பூர் :

    குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (டான்பெட்) அனுமதி அளித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்திட பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வாவிபாளையம் முத்தூர் வளாகத்தில் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிேலா ரூ.105.90 என்ற விலையில 6 சதவீதத்திற்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிலோ கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி கொப்பரையை கொண்டு வந்து வருகிற 30-ந்தேதி வரை விற்பனை செய்யலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    • கூட்டம் தொடங்கியதும், மாவட்ட கலெக்டர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது
    • இந்த ஆண்டு இதுவரை 31பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசா யிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், மாவட்ட கலெக்டர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய புலவர் செல்லப்பா, தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்திற்கான விருதை கலெக்டருக்கு வழங்கியுள்ளார். இதற்கு விவசாயிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    இதை தொடர்ந்து விவசா யிகள் சார்பில் கலெக்டர் அரவிந்துக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.பின்னர் கலெக்டர் அரவிந்த் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் குறுவை தொகுப்பை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சி பாறையில் தேனி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    வீர நாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.ஒரே மாட்டிற்கு நான்கு முறை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டம் வழியாக இரவு நேரங்களில் அதிக அளவு கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகிறது.கற்கள் உடைக்கப்படுவதால் வீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறுகை யில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நெல் குறுவை தொகுப்பு திட்டமானது, நடப்பாண்டில் டெல்டா அல்லாத சில மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தும் போது வேளாண் இடு பொருள்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    பேச்சிப்பாறையில் தேனி மகத்துவ மையம் தற்போது செயல்பட்டு வருகிறது. தேனி ஆராய்சி மையம் அமைப்பதற்கான திட்டம் இல்லை. குமரி மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 31பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    வீர நாராயணசேரி பெண் அதிகாரி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளதால் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.
    • சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.

    உடுமலை :

    ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவாகாத கார்டுதாரருக்கு பதிவேட்டில் கையொப்பம் பெற்று, ரேஷன் பொருள் வழங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் மாவட்டத்தின் பல கடைகளில் இத்தகைய உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.

    அதிகாரிகளும் மேலாய்வு நடத்தவில்லை.கைவிரல் ரேகை பதிவு செய்ய இயலாதவரின், ஆதார் பதிவுகளை அப்டேட் செய்ய வேண்டுமெனஅரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கும் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது வழக்கமாக ஆதார் பதிவு நடக்கும் இடத்திலேயே, அப்டேட் பதிவு முகாம் நடப்பதாக அறிவிப்பு செய்கின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.அப்படியே தகவல் தெரிந்தாலும், நடமாட முடியாத மற்றும் பஸ்சில் சென்றுவர சிரமப்படும் முதியோர் என ஒவ்வொரு கிராமத்திலும் ஏராளமான கார்டுதாரர்கள், அப்டேட்செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு முறையும் நடக்கும் இம்முகாம்களால் பயன்பெறுவோர் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக, ஆதார் அப்டேட்முகாம்களை தொலைவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடத்தாமல் கூட்டுறவு சங்கங்கள் வாரியாக நடத்த திட்டமிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட முதியோர் சிலர் கூறியதாவது: -

    தாலுகா அலுவலகம் சென்றுவர முடியாததால், கைவிரல் ரேகை புதுப்பிக்க இயலாமல் தவிக்கிறோம். சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.மாறாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை என வாரம் ஒருநாள் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானவர்கள் பயன்பெறுவர்.மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுடன் ஆலோசித்து தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.  

    • சிவகங்கை மாவட்டத்தில் இதர கடன்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பொது நகைகடன், வட்டியில்லா பயிர்க்கடன், வட்டி இல்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், சுய உதவிகுழு கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது‌.

    எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், நில உடமை தொடர்பான 10 (1) கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று பங்குதொகை மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.110 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களை பெற்று பயனடையலாம்.

    இது தொடர்பான விவரங்களுக்கு சிவகங்கை, திருப்புவனம் வட்டத்திற்கு கள அலுவலர் குறிஞ்சி இளவரசனையும், காளையார்கோவில் வட்டத்திற்கு நவநீதகிருஷ்ண னையும், மானாமதுரை வட்டத்துக்கு மாரியையும், இளையான்குடி வட்டத்திற்கு அழகர்சாமியையும், கல்லல் தேவகோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்கு பொன்னையாவையும், எஸ். புதூர், சிங்கம்புணரி வட்டத்துக்கு வனிதாவையும், சாக்கோட்டை, கண்ணங்குடி வட்டத்திற்கு பூங்கோதையையும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×