search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம்"

    • திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    நாடு முழுவதும் நாளை (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இறுதிக்கட்டமாக இன்று புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.

    கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே கோவையில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கடைவீதி களில் திரண்டு புத்தாடைகளை வாங்கினர். காலை முதலே கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினர்.

    இதனால் ஜவுளிக்கடை கள், இனிப்பு, பட்டாசு, நகைக்கடைகள் முன் கூட்டியே திறக்கப்பட்டு விற்பனையை தொடங்கின. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதனால் கடைவீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்து கொள்ள அறிவுறுத்துவதுடன், கவனமாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் போலீசார் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்கும் என்பதால் அனைத்து கடை வீதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா மூலம் கடைவீதிகள் கண்காணிக்கப்படுகின்றன.

    இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். கோவையில் தீபாவளி பண்டிகையொ ட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடைவீதிகளில் ஜவுளி எடுக்க மக்கள் குவிந்துள்ளதால், மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.
    • கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம், ஏ. ஐ. டி.யூ .சி. டாஸ்மாக் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் துரை. மதிவாணன், முத்துக்குமரன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், தலைவர் பால. வடிவேலன், மாவட்ட பொருளாளர் இளஞ்செ ழியன், மேற்பார்வையாளர் கருணாகரன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் சுமார் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது.

    நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இதை பயன்படுத்தி சமூக விரோதிகளால் டாஸ்மாக் கடைகளில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் அடிக்கடி வந்து கண்காணிக்க வேண்டும்.

    பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகள் முன்பு அனாவசியமாக கூடும் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலைகளில் குழாய் பதிக்கும் போது பள்ளங்களை மூட வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா கோபிநாத், உறுப்பினர்கள் சுமத்ரா மோகன், வெங்கட், செல்வ பாரதி கண்ணன், சுப்ரமணியன், வனிதா, மற்றும் செல்வம், உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர் வெங்கட் பேசும்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஊராட்சி பகுதியில் சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கப்படுவ தாகவும் சரிவரபள்ளங்களை மூடுவதில்லை எனவும், இதனால் கிராம சாலைகள் அதிகளவில் சேதமடைந்தது வருவதாகவும் கிராம மக்கள் பெரிய அளவில் பதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    இதற்கு பதில் அளித்த ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பதில் அளித்தார்.

    இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.
    • இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.

    புதுக்கோட்டை

    தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.

    இதற்கு ஏதுவாக புதுக் கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 7 நாட்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச் சிகள், கருத்தரங்கம், இலவச சிறப்பு முகாம்கள், மரக் கன்று நடுதல்,

    கால்நடை சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், உறுப்பினர் சந்திப்பு கூட்டங் கள் மாணவ-மாணவிக ளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிளான விழா நடத்து வது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் புதுக் கோட்டை மண்ட இணைப்ப திவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்ப திவாளரும் செயலாட்சியரும் கூட்டுறவு வாரவிழாக்குழு துணைத்தலைவருமான மு. தனலெட்சுமி மற்றும் வார விழாக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    • சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுக்கா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆத்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஆத்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் இளையபெருமாள் கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.

    அதற்கான சந்தை வாய்ப்புகளை எளிமைப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் வடவீரபா ண்டியன் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை இயற்கை சாகுபடியிலும் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறவும் உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் புதிய தொழில்நுட்பங்களையும் வேளாண்மை துறை சார்ந்த மானியங்களையும் விவசாயிகள் இடத்திலே கொண்டு சேர்ப்பதற்கு சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றுவதற்கு அலுவலர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    பின்னர் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை வழங்குவதற்கு வேளாண்மை துறை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    முதலில் ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகமணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினர்.

    • ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தொழிலை பதிவு செய்ய வலியுறுத்தல்
    • சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல் மேலாளர் குணேஷ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அப்போது டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜெண்டுகள் ஆகியோர் ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தங்களின் தொழிலை பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிய அங்கீகாரம் தருவதன்மூலம் சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டும் என்பவை தொடர்பாக கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

    நீலகிரி மாவட்ட மேக்சி கேப்-டிராவல் ஏஜெண்டுகள் உரிமையாளர் சங்க தலைவர் குலசேகரன், செயலாளர் நித்தின்சேகர், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் இம்பாலாபாபு, பிரீத்திரவி, பவானிரமேஷ், இம்பீரியல் நஞ்சுண்டன், ஸ்டேன்லி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது;- பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொ கை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 332 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருச்சி

    மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் அவைத்தலைவர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்க மண்டல செயலர் ஜெகதீசன், விவசாய அணி செயலாளர் கருடா நல்லேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மீரான், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா, பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல்ரகுமான், ஜோதிவாணன், பாலாஜி, மகாதேவன், ஷாஜஹான், வட்டசெயலாளர்கள் பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி, ராஜ்மோகன் வெற்றிவீரன்.மலைக்கோட்டை ஜெகதீசன், கதிர்வேல். ஜெயகுமார்.சிங்கமுத்து, ராமநாதன் புகலேந்திரன், கார்த்திகேயன். கே.சக்திவேல், சந்தோஷ்ராஜ், பாசறை குமார், இசக்கி அம்மாள், முருகன், நவமணி, ரத்தினம். குவைத் மனோகர் ரவிசங்கர், கதிரவன், எல்.ஐ.சி.பெரியண்ணன், பொம்மாசி பாலமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தில்லை நகர் பகுதி சார்பாக மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பகுதி செயலாளர் .எம். ஆர்.ஆர் முஸ்தபா, ஜங்ஷன் பகுதி சார்பாக சண்முகா மகாலில் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
    • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார்.

    திருச்சி

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, செந்தமிழன், சண்முகவேல், மாணிக்கராஜா, அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் ராஜசேகரன், மகேந்திரன், பொருளாளர் எஸ்.கே. செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி, அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், தேர்தல் பிரிவு செயலாளர்கள் பார்த்திபன், குமரேசன் உள்ளிட்ட அமைப்புச் செயலாளர்கள், 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், காசி மகேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கீல் சரவணன், பாசறை ஜான் கென்னடி, ஒன்றிய செயலாளர் சண்முகம், பெஸ்ட் கே பாபு, சிறுபான்மை பிரிவு பகுருதீன், பகுதி செயலாளர்கள் செல்வம் என்ற பன்னீர் பாண்டியன், வேதாத்ரி நகர் பாலு, நாகநாதர் சிவக்குமார், வெங்கட்ரமணி, சதீஸ்குமார்,தனசிங் மதியழகன், தருண், மீரான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்ட பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறை சார்பில் புகளூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் குணசேகரன் தலைமை வைத்தார். குளித்தலை நீர்வளத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் முன்னிலை வைத்தார். நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளர் கார்த்திக் வரவேற்றார்.

    நொய்யல் முதல் வாங்கல் வரை பாயும் விவசாய பாசன வாய்க்கால்களான புகழூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் மதகுகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் புகழூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். அதன் பின்னர் புகழூர் மற்றும் பாப்புலர் வாய்க்கால்களில் மதகுகள் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    அதற்கு விவசாயிகள் தற்பொழுது பாசனத்திற்கு விடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்தினால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே வரும் மே , ஜூன் மாதங்களில் புகழூர் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்திவிட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.


    • கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
    • கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய் யல் அருகே குப்பம் மற்றும் வேட்டமங்கலம் இடங்களில் கல்குவாரி அமைக்க திட்டமி டப்பட்டு ள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன் தலைமை வகித்தார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரி ஜெயலட்சுமி முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப் புத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்த னர்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்கு வாரிகள் செயல்பட்டு வரு கிறது. மாவட்டத்தில் செயல் படும் ஒரு சில கல்குவாரி களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக வெட்டி எடுக்கப் பட்டு வருவதை அதிகா ரிளால் கண்டறியப்பட்டுள் ளது.

    கல்குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடை யாது. கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை.

    பரமத்தி ஒன்றியம் முழு வதும் சட்ட விரோ தமாக இயங்கும் கல்கு வாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.

    சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    • வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.
    • நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது

    குளித்தலை 

    கரூர் மாவட்டம், குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் ராஜேந்திரம் தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.

    மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்,

    கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது, பொய்யாமணி, இனுங்கூர், குமாரமங்கலம், வதியம், கே. பேட்டை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அன்று நடைபெறும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமில் முனைப்போடு செயல்பட்டு புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரமோகன், ஒன்றிய அவை தலைவர் செழியன், பொருளாளர் ரங்கநாதன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன், பாஸ்கர், இளம் கதிர் மற்றும் தகவல் தொழில்நுட்பாடிய உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி லோகநாதன் நன்றி கூறினார்.

    ×