search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தலைவர்"

    • உலகம் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது.

    டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது.

    கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல். பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள் என்ற தங்க விதியே, மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது. அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அது தார்மீகக் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காணொலிக் காட்சி மூலம் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். விஜயவாடாவில் ஆந்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் காணொலிக் காட்சி மூலம், பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, பழங்குடியின விவகாரங்கள் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் இரவு திருமலையில் தங்கி ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராக சுவாமி கோவில், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.

    தொடர்ந்து ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்திற்குச் செல்லும் அவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், கலந்துரையாட உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதிக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • விருது பெறுவோரை தேர்வு செய்ய மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
    • சிறப்பாக செயலாற்றிய மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.

    2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் நாளை வழங்கப்படவுள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, ஏ. நாராயணசாமி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விருதுகளுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தம் 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு என மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • நாட்டின் உணவு பாதுகாப்பை பஞ்சாப், அரியானா மாநிலங்கள் உறுதி செய்துள்ளன.
    • சமூக நலனுக்காக தொழில்நுட்பத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    அரியானா மாநித்தில் உள்ள குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    இன்று உலகம் முழுவதும் அதிவேக மாற்றத்தில் உள்ளது. தொழில்நுட்ப புரட்சி காரணமாக வேலைவாய்ப்புகள், மக்களின் அடிப்படை தேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு குருஷேத்ரா என்ஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும். 


    இந்திய வேளாண்மை மேம்பாட்டில் பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் உணவு பாதுகாப்பை இந்த மாநிலங்கள் உறுதி செய்துள்ளன. அதேசமயம் காற்று மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு இந்த பிராந்தியத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் சாதாரண மக்கள் தொழில்நுட்பத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சமூகத்தின் நலனுக்காக தொழில்நுட்பம் பயன்பட்டால் அதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். சமத்துவமான சமுதாயத்தை கட்டமைப்பதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை இந்தி பேசாத மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 22 வது வட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிவன் தியேட்டர் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு

    மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்வராஜ், வடக்கு மாநகர செயலா ளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாகராஜ், அண்ணா காலனி தொகுதி செயலாளர் மின்னல் நாகராஜ், 1 மண்டல தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் பேசினர்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைமை வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டம ன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம் , கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரி ந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

    தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பாஜக காரர்களைப் போல பேசி வருகிறார் , ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரு ம்போது அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான், ஆனால் பாஜக திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை நிலைய செயற்குழு உறுப்பினர் பா.குணராஜ், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, வடக்கு மாவட்ட நிர்வாகி திலக்ராஜ், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாணவரணி அமைப்பாளர் தளபதி அன்பு, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார், அனுஷ்யா, பத்மாவதி, பிரேமலதா கோட்டாபாலு, வேலம்மாள், வடக்கு மாவட்ட நிர்வாகி அன்பழகன், மாநகர நிர்வாகி பாக்கியராஜ், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்கள் பாக்கியராஜ், ஜான் வல்தாரிஸ்,பகுதி நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது.
    • தேசிய கல்விக் கொள்கை எதிர்கால தலைமுறையை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

    சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக இந்தியாவில் ஜனநாயக ஆட்சியின் வெற்றி குறித்து பல சர்வதேச தலைவர்கள், நிபுணர்கள் சந்தேகம் கொண்டு இருந்தனர். ஆனால் இந்தியர்களாகிய நாம் சந்தேகிப்பவர்களைத் தவறென்று நிரூபித்தோம்.

    ஜனநாயகத்தின் உண்மையான திறனைக் கண்டறிய உலகிற்கு உதவிய பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஜனநாயகம் இந்த மண்ணில் வேர்களை வளர்த்தது மட்டுமல்ல, வளப்படுத்தியது.

    நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன, பெண்கள் தடைகளை உடைத்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது. பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன.

    தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் கருணை என்பதே இன்று இந்தியாவிடம் இருக்கும் ஒரு மந்திரச் சொல். ஆண்டுதோறும் நவம்பர் 15ந் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    தேசிய கல்விக் கொள்கை எதிர்கால தலைமுறையை தொழில் புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அது நமது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கிறது. 

    கொரோனா தொற்றுக்கு எதிரான எங்களின் நடவடிக்கை எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் நாங்கள் தொடங்கினோம்.

    கடந்த மாதம் வரை போடப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது.

    உலகம் பெரும் பொருளாதார நெருக்கடி விளைவுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் போது, ​​இந்தியா ஒன்றிணைந்து முன்னேறி வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் கண்டுள்ளது.

    சொந்த வீடு என்பது ஏழைகளுக்கு இனி கனவாக இருக்காது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தால் மேலும் பலருக்கு அது நனவாகி வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதே இது போன்ற முயற்சிகளின் நோக்கமாகும்.

    ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியை, பிரிவினைக்கால பயங்கரங்களை நினைவுகூரும் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்; இதன் மூலம் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, மக்களுக்கு அதிகாரப் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறோம்.

    காலனியாதிக்க ஆட்சியாளர்களிடம் இருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று தீர்மானித்த நாள் தான் நாளைய தினம்.

    இந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், ஒரு சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதைத் தங்களின் மகத்தான தியாகங்கள் மூலம் சாத்தியமாக்கிய அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் தலைவணங்குவோம். சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதே சுதந்திர தினத்தின் முக்கியமான அம்சம். 

    உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×