search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி"

    • தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர்.
    • குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து விடுதியின் ஒரு அறையில் பெண் குழந்தையை மாணவி பெற்று எடுத்துள்ளார். இத்தகவல் அறிந்த விடுதி வார்டன் கலைச்செல்வி மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாகவே தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்தார்.

    மேலும் மாணவியின் வீட்டிற்கு காதலித்து கர்ப்பமானது தெரியாது, கல்லூரியில் சேரும் போது கர்ப்பமாக தான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார். அந்த வாலிபர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

    குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர். அந்த வாலிபர் தான் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

    இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேசினர். இதில் இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒரே சமுதாயம் என்பதால் புகார் அளிக்கவில்லை. இதனால் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மாணவியர் விடுதியில் 120 மாணவிகள் உள்ளனர். வார்டனாக கலைச்செல்வி உள்ளார்.

    இந்த மாணவி கர்ப்பமானது வார்டன் தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

    • யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார்.
    • ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த கண்ணன்-அனுப்பிரியா தம்பதியின் மகள் தன்மயா (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது சிறு வயது முதலே தமிழ் ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

    இதற்காக யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார். பிரான்ஸ், பிரட்டிஷ், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை இலக்கணப் பிழையின்றி எழுதி படிக்க கற்றுக் கொண்டார். உச்சரிப்பு, எழுத்து, வாக்கியம், இலக்கணம் ஆகியவற்றை வீடியோ வடிவிலும், பி.டி.எப்., டெக்ஸ்ட் வடிவிலும் புதிர் கேள்விகள், வினாடி வினா மூலம் கற்றுத் தேர்ந்தார்.

    இது குறித்து ஆன்லைன் மூலம் நடந்த தேர்விலும் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார். இவரது திறமையை கண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இவர் மொழித் திறன் பயிற்றுவிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார். 5 வெளிநாட்டு ஆங்கில மொழியை அந்த நாட்டின் நளினத்தில் உரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

    பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கம் மற்றும் கூச்சம் இருக்க கூடாது என்று கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கு கல்லூரி பேராசிரியர்கள் கூட பேசுவதற்கு திணறி வருகின்றனர் என்பது கூடுதல் விஷயமாகும்.

    தமிழகத்தில் பிற மொழிகளை கற்கக்கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்திய மொழிகளைக் கடந்து அயல்நாட்டு மொழிகளையும் கற்று அதனை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து 8ம் வகுப்பு மாணவி அசத்தி வருவதோடு இந்த காலத்திலேயே வருவாயும் ஈட்டி வருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். பாளையம் செட்டியூர் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் சக்திவேல் (27). உறவினரான 2 பேரும் 2 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து சக்திவேல் குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தனர். ஆனால் பெண் வீட்டார் மறுத்ததால் அருணாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சக்திவேல் கூடலூரில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மேஜர் என்பதால் விருப்பப்படி வாழ அறிவுரை கூறிய போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பா.ஜ.க. பிரமுகரின் மகள்
    • தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோடு பட்டன் விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49), மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவந்திகனி. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிவந்திகனி குருந்தன்கோடு யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    இவரது மகள் சஜித்ரா (19). இவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிறு வயதில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி காலை வீட்டு மாடி அறையில் சஜித்ரா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்த நிலையில் தீ காயங்க ளுடன் கிடந்துள்ளார். உட னடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சஜித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது 17 வயது மகள் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெற்றோரிடம் கூறி உள்ளார். படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறி உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்றார். ஆனால் வரவில்லை என கல்லூரியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பெற்றோரும், காதலர் கார்த்திக்கும் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார்.
    • கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் வார்டனிடம் கூறினர். அவர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு ஜனனி தற்கொலை செய்து செய்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.

    இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

    பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.

    மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.

    தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே உள்ள மாஞ்சக்கோணம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் வேல்துரை. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது மூத்த மகள் அனுசியா (வயது 19), திருவிதாங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

    நேற்று கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்படுவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அனுசியா தெரிவித்துள் ளார். இதற் காக புத்தாடை அணிந்து அவர் நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

    மாலையில் மகள் வந்து விடுவார் என பெற்றோர் காத்திருந்த நிலையில், அனுசியா வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அங்கு விழா முடிந்ததும் அனுசியா அங்கிருந்து சென்று விட்டதாக கூறி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து தோழிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அனுசியா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுகுறித்து குலசேகரம் போலீசில் வேல்துரை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

    • செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.
    • தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.

    மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி சுய நினைவின்றி அலங்கோலமான நிலையில் நிர்வாணமாக கிடந்தார்.

    அவரது உடலில் காயங்களும் இருந்தன. சுய நினைவின்றி கிடந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி மீட்கப்பட்ட வீட்டில் சில போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த வாலிபர் உள்ளிட்ட சிலர் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், போலீசார் வந்ததும் மாணவியை நிர்வாணமாக போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். ஆகவே தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாயமான கல்லூரி மாணவி, வாலிபரின் வீட்டின் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சேர்ந்தவர் மனோகரன் (59). இவரது மனைவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூ ரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் சவுபர்ணிகா (18) கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சவுபர்ணிகாவுக்கு பொறியியல் படிக்க சிரமமாக இருப்பதாகவும், அதனால் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பு வதாகவும் கூறியுள்ளார்.

    அதற்கு தந்தை மனோகரனும் சம்மதித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் விடுமுறை முடிந்து கல்லூரி செல்வதற்காக பை வாங்கி வருவதற்காக மனோகரன் காலையில் ஈரோடு சென்று விட்டார். அவரது மனைவியும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    ஈரோடு சென்ற மனோகரன் மீ ண்டும் மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்துள்ளது. மகளை சத்தமிட்டு கூப்பிட்டும் வெகு நேரமாக கதவு திறக்கவில்லை.

    இதையத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே யே சவுபர்ணிகா இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
    • 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றி வருபவர்களுக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல் லச்சாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அதிக மாணவிகள் இருந்தது தெரியவந்தது.

    மாணவிகள் ஒவ்வொரு வரும் மடியில் இருந்தவாறு பயணம் செய்தனர். ஒரே ஆட்டோவில் 9 கல்லூரி மாணவிகள் இருந்தனர். 3 பேர் பயணம் செய்ய வேண்டிய ஆட்டோவில் 9 பேர் பயணம் செய்ததையடுத்து ஆட்டோ டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    ஏற்கனவே இவருக்கு அதிக மாணவிகளை ஏற்றி வந்ததாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் நகர் முழுவதும் ஹெல்மெட் சோதனை யிலும் போலீசார் ஈடுபட்ட னர். மணிமேடை, வடசேரி, கோட்டார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை களில் ஹெல்ெமட் அணி யாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    பெண்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். இன்று சுமார் 50-க்கும் மேற்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நோ பார்க்கிங் கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    ×