search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவறை"

    • ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.
    • பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

    மாங்காடு தலத்தில் கோவிலிலின் கோபுர வாசலைக் கடந்து, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது.

    வினைதீர்க்கும் விநாயகரை வணங்கி விட்டு உள்ளே சென்றால் முருகக் கடவுளையும், ஆதிசங்கரரையும் வணங்கலாம்.

    சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரைத் தரிசித்தபின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாகச் சென்றால் சபா மண்டபத்தை அடையலாம்.

    தவம் செய்யும் காமாட்சி அன்னையின் சந்நிதி தனியாக உள்ளது.

    பஞ்சாக்னியில் காமாட்சி அம்மன் நிற்கும் கோலம் தனிச் சிறப்புடையது.

    உள்ளே கருவறையில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

    ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.

    ஸ்ரீ சக்கரம் கூர்ம (ஆமை) ஆசனத்தில் அமையப் பெற்றுள்ளது.

    கருவறைக்குள் தரிசனம் முடிந்தபிறகு வெளிப் பிராகாரச் சுற்றில் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம்.

    பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

    • காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
    • கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

    ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

    காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

    கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

    • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
    • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

    ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

    அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

    வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

    இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

    கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

    ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

    அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

    கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

    பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

    • பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
    • இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.

    இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.

    பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.

    • சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
    • சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.

    அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.

    அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

    சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.

    மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.

    சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

    சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.

    இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

    கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.

    இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.

    தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.

    விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.

    கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.

    சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.

    சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.

    அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

    விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.

    • கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
    • கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.

    இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

    சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.

    இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.

    கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.

    கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

    இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.

    அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.

    இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.

    பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.

    இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.

    இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.

    கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.

    கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.

    திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.

    இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.

    கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.

    • கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள்.
    • முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடி மரமண்டபம், பிரகாரம், தேர்மண்டபம். கலையரங்கம் போன்ற அமைப்புக்களுடன் காணப்படுகிறது.

    கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள். அம்மன், சுவாமி இருவரின் சுயம்புவாகத் தோன்றிய பாறை வடிவங்களும் அவற்றின் பின்புறம் பீடத்தின் மேல் இருவரின் உருவச் சிலைகளும் அமைந்துள்ளன.

    கருவறையினை அடுத்து அர்த்தமண்டபமும் அதன் இருபுறமும் வழிபாட்டுக்குரிய பொருட்கள் வைக்கும் அறைகள் இரண்டும் அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தினை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபம் கம்பித் தடுப்பால் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பிரிவில் பேச்சியம்மனும் கருப்பசாமியும் இரண்டாவது பிரிவில் பைரவரும் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தை அடுத்துக் கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயரத்தில் பலிபீடமும் அதன் பின்புறம் கொடிமரமும் உள்ளன. பலிபீடத்தின் முன்பு சிம்மவாகனம் ஒன்று கருவறையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐந்து அடி உயரச் சூலம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் மகா வல்லப விநாயகரும் வாயிலின் இருபுறங்களிலும் இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    கொடிமர மண்டபத்தின் நடுவில் பலிபீடத்தை அடுத்து முப்பத்திரண்டு அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் பொதியப்பட்டுக் காட்சியளிக்கிறது. அடிப்பாகச் செப்புத் தகட்டில் வடபுறம் அம்மனும் சுவாமியும் தென்புறம் சூலமும் கீழ்ப்புறம் விநாயகரும் மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் உருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர்.

    கொடிமரம் சந்தனமரத்தால் ஆனது. இது பதினெட்டுப் பாகங்களைக் கொண்டது. பதினெட்டு ஆகமங்கள் என்பதன் அடையாளமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

    முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் முன்பக்கம் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோவில் மண்டபங்களின் கிழக்கு, தெற்கு, மேற்குச் சுவர்களில் அர்த்தநாரீசுவரர், மீனாட்சியம்மன், துர்க்கை அம்மன் ஆகியோரின் புடை சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பிரகார மண்டபத்தில் அழகிய தெய்வங்களின் ஓவியங்களும் துர்க்கையம்மன், மீனாட்சியம்மன் சிலைகளும் உள்ளன. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகருக்கெனத் தனிச் சந்நிதி உள்ளது.

    கருவறையின் மேல் சிறிய விமானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது முப்பத்தைந்து அடி உயரமாகும். இதில் அம்மன், சுவாமி சிற்பங்களும் காவல் தெய்வங்கள், சிம்மம் ஆகியவற்றின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் உச்சியில் மூன்று கும்பங்கள் உள்ளன.

    கோவில் முன்மண்டபத்தின் மேலே சிறிய மூன்று கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் அம்மன், சுவாமி உருவங்கள், மகிசாசுரமர்த்தினி, முருகன், விநாயகர், காவல் தெய்வங்கள், காளி, யானை, சிம்மன் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலுக்கு வடபுறம் சிறிது தொலைவில் மேற்கு நோக்கிய வண்ணம் தேர்மண்டபம் தேர் ஒன்று உள்ளது. விழா நாட்களில் அம்மன் இந்தத் தேரில் வீதி உலா வருகிறாள். இத்தேர் தவிர, சூரனைச் சுமந்து செல்வதற்குரிய சப்பரம் ஒன்றும் உள்ளது.

    தேர் விலை உயர்ந்த தோதகத்தி மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இரு குதிரைகள் தேரினை இழுத்துச் செல்லும் தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சாரதியாகப் பிரம்மனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறமும் இரு மங்கையர் உருவங்கள் கவரி வீசுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன. அழகிய சிறிய தூண்களும் சிறிய கோபுர அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலின் மேற்கில் கிழக்கு நோக்கிய வண்ணம் கலையரங்கம் ஒன்று உள்ளது. இதனைக் கட்டிய நன்கொடையாளரின் பெயரால் 'சௌந்திர பாண்டிய நாடார் கலையரங்கம்' என்று இது வழங்கப்படுகிறது. இக்கலையரங்கில் கோவில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிளக்குப் பூசையும் தசரா விழாவில் சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. தவிர பொதுமக்கள் திருமணம், சடங்கு, பிறந்தநாள் விழாப் போன்ற தம் இல்ல நிகழ்ச்சிகளை இக்கலையரங்கில் குறைந்த வாடகையில் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

    முத்தாரம்மன் கோவிலுக்குக் கீழ்ப்புறம் மேற்கு நோக்கி வண்ணம் பெரிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் உட்சுவரில் பார்வதியின் திருக்கல்யாணக் காட்சி அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இது திருமண மண்டபமாகவும் ஒவ்வொரு மாதப் பவுர்ணமியன்றும் திருவிளக்குப்பூசை நடத்துவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    தசரா விழாவின் போது சூரனைச் சம்ஹாரம் செய்வதற்காக முத்தாரம்மன் இம்மண்டபத்திலிருந்தே புறப்பட்டுச் செல்கிறாள்.

    கோவிலுக்கு வரும் மேற்குத்திசைச் சாலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தோரண வாயில் ஒன்று காணப்படுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு முழுமையாக ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.

    • பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
    • ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.

    சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலைநகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும், அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மகா பைரவ ருத்ர ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலத்தின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்ததும் மனதில் அமைதி ஓடிவந்து ஓட்டிக் கொள்கிறது. பயம் என்ற சொல்லே பஞ்சாகப் பறந்து போய் விடுகிறது. பயம் போக்கும் பைரவர், நம் ஒவ்வொருவரது மனதிலும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.

    கருவறை

    ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிலும் பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு மனிதன் தலைகீழாக நின்றால் எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் பைரவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கருவறை மிக அகலமாகவும், போக, போக மேலே ஒல்லியாகவும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் பைரவருக்கு கீழ் 35 அடி ஆழத்தில் பாதாள பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த ஆகம தத்துவப்படி பார்த்தால், பைரவர் ஆலய கருவறையில் ஆசர்ஷணசக்தி நிலை கொண்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆதிமூலம் உள்ளே உள்ளது. அதற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.

    தேய்பிறை அஷ்டமி

    சிவ ஆகம விதிகளின்படி இங்கு தீப வழிபாடு நடத்தப்படுகிறது. இத்தலத்தில் பரிவார தெய்வங்களாக ருத்ர விநாயகர், வைஷ்ணவிதேவி, பிருத்தியங்கரா தேவி, வள்ளி- தேவசேனை சமேத சுப்பிரமணியர் உள்ளனர்.

    பிரகார காவல் தெய்வங்களாக நாகசக்தியும், வன துர்க்கையும் அமைந்துள்ளனர். சற்று தொலைவில் தன் வந்திரி பகவான் வீற்றுள்ளார்.

    அவர் முன் தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எவ்வளவு கொடூர நோயாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும். ஸ்ரீமகா பைரவர் ஆலயத்தின் ஒரு பகுதியில் கோமாதா குடிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் தினமும் காலை 6 மணி,மாலை 6 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு முழம்பூ வாங்கிப் போட்டு வணங்கினால் கூட பைரவர் மகிழ்ச்சி அடைவார்.

    பைரவ சித்தாந்தம் சுவாமிகள்

    இயல்பான நிலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது இந்த ஆலயத்தை கட்டியுள்ள ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் கருத்தாகும்.

    ஸ்ரீமகா பைரவர் 12 ராசிகளையும் தன் அங்கமாக கொண்டவர். எனவே ராசிப்படி ஏற்பட்ட கர்மங்கள் தொலைந்து போகும். திருவடி சூலம் ஸ்ரீமகாபைரவ ருத்ர ஆலயத்தில் ஒருதடவை காலடி எடுத்து வைத்தால் நீங்கள் அதை உணர்வீர்கள்.

    ×