search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேய்பிறை"

    • பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
    • ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.

    சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலைநகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும், அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மகா பைரவ ருத்ர ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலத்தின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்ததும் மனதில் அமைதி ஓடிவந்து ஓட்டிக் கொள்கிறது. பயம் என்ற சொல்லே பஞ்சாகப் பறந்து போய் விடுகிறது. பயம் போக்கும் பைரவர், நம் ஒவ்வொருவரது மனதிலும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.

    கருவறை

    ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிலும் பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு மனிதன் தலைகீழாக நின்றால் எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் பைரவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கருவறை மிக அகலமாகவும், போக, போக மேலே ஒல்லியாகவும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் பைரவருக்கு கீழ் 35 அடி ஆழத்தில் பாதாள பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த ஆகம தத்துவப்படி பார்த்தால், பைரவர் ஆலய கருவறையில் ஆசர்ஷணசக்தி நிலை கொண்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆதிமூலம் உள்ளே உள்ளது. அதற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர்.

    தேய்பிறை அஷ்டமி

    சிவ ஆகம விதிகளின்படி இங்கு தீப வழிபாடு நடத்தப்படுகிறது. இத்தலத்தில் பரிவார தெய்வங்களாக ருத்ர விநாயகர், வைஷ்ணவிதேவி, பிருத்தியங்கரா தேவி, வள்ளி- தேவசேனை சமேத சுப்பிரமணியர் உள்ளனர்.

    பிரகார காவல் தெய்வங்களாக நாகசக்தியும், வன துர்க்கையும் அமைந்துள்ளனர். சற்று தொலைவில் தன் வந்திரி பகவான் வீற்றுள்ளார்.

    அவர் முன் தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எவ்வளவு கொடூர நோயாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும். ஸ்ரீமகா பைரவர் ஆலயத்தின் ஒரு பகுதியில் கோமாதா குடிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் தினமும் காலை 6 மணி,மாலை 6 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு முழம்பூ வாங்கிப் போட்டு வணங்கினால் கூட பைரவர் மகிழ்ச்சி அடைவார்.

    பைரவ சித்தாந்தம் சுவாமிகள்

    இயல்பான நிலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது இந்த ஆலயத்தை கட்டியுள்ள ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் கருத்தாகும்.

    ஸ்ரீமகா பைரவர் 12 ராசிகளையும் தன் அங்கமாக கொண்டவர். எனவே ராசிப்படி ஏற்பட்ட கர்மங்கள் தொலைந்து போகும். திருவடி சூலம் ஸ்ரீமகாபைரவ ருத்ர ஆலயத்தில் ஒருதடவை காலடி எடுத்து வைத்தால் நீங்கள் அதை உணர்வீர்கள்.

    • சிங்கம்புணரி அருகே வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், பரம்பரை ஸ்தானிகம் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வடுக பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    முன்னதாக ம்ருத்ஜெய ஹோமம், நவகிரக ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாகுதியுடன் பூஜைகள், யாக பூஜைகள் நிறைவு பெற்றன.

    அதன்பின் பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீப ஆரத்தியுடன் பூஜைகள் நிறைவு பெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், பரம்பரை ஸ்தானிகம் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

    ×