search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்குலி"

    • கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை.
    • வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்டு சதம் அடிக்க வேண்டும் என கங்குலி கூறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

    முன்னதாக கடந்த 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு செடேஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். இருப்பினும் 2020/21 தொடரில் பார்மை இழந்து தடுமாறிய அவர் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியது.

    இந்நிலையில் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 வருடங்கள் கழித்து ஒரு வழியாக சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

    வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    அவர் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். அதன் வாயிலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 13வது இந்தியர் என்ற சாதனையும் படைப்பார். அதற்கு அவர் தகுதியானவர்.

    ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.

    ஏனெனில் கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை. எனவே அவருக்கு அப்படி ஒரு சதம் தற்போது தேவைப்படுகிறது. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • 20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை.
    • உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

    உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகி இருந்தார்.

    முதுகுவலி காயம் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆட இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பும்ரா விலகியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களில் ஒருவர் இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது. இதற்காக முகமது ஷமி, தீபக் சாஹர் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை. அவர் இன்னும் நீடிக்கிறார். பும்ராவின் நிலை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட் களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்கள். 13-ந்தேதி வரை இந்திய அணி பெர்த் நகரில் இருக்கும்.

    உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது. அதற்கு முன்பு 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 17-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ந்தேதி நியூசிலாந்துடனும் இந்தியா விளையாடுகிறது.

    • நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
    • நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்

    புதுடெல்லி:

    மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.

    இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும்.

    மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடினோம்.
    • நான் விளையாடியதை விட அதிக போட்டிகளில் அவர் விளையாடுவார் .

    ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் காங்குலி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். அவர் (கோலி) என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம், நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம் .

    நான் எனது தலைமுறையில் விளையாடினேன். அநேகமாக. நான் விளையாடியதை விட அதிகமாக போட்டிகள் அவர் விளையாடுவார் . தற்போது, ​​நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் உலக ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    கொல்கத்தா:

    லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

    மேலும் இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர்.

    கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவி சாஸ்திரியும், கங்குலியும் இணைந்துள்ளனர்.

    உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்திய மகாராஜா அணி விவரம்:-

    கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி

    உலக ஜெயிண்ட்ஸ் அணி விவரம்:-

    இயன் மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்

    • விராட் கோலி 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.
    • டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 33 வயதான அவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு சதம் அடித்து இருந்தார்.

    தற்போது விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    இதை தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை கேள்வி எழுப்பி இருந்தனர்.

    அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகமே.

    இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி அறிவுரை வழங்கி உள்ளார். அவர் தனது வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    விராட் கோலி தற்போது சவாலான நிலையில் உள்ளார். இது அவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    அவர் தனது வழியை கண்டறிந்து வெற்றி பெற வேண்டும். 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் ஒருவரால் மட்டுமே மீண்டும் நல்ல நிலைககு வர இயலும்.

    விளையாட்டில் இது போன்று நடைபெறுவது வழக்கம் தான். ஒவ்வொரு வருக்கும் நடந்துள்ளது. டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அது போலதான் தற்போது விராட் கோலிக்கு நடந்துள்ளது.

    எதிர்கால வீரர்களுக்கும் இது மாதிரியான நிலை ஏற்படும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதனால் விராட் கோலி தனது குறைபாட்டை அறிந்து தனக்குரிய விளையாட்டை ஆட வேண்டும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஒரு ரன்னும், 3-வது போட்டியில் 11 ரன்னும் எடுத்தார். முன்னதாக நடந்த 5-வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 31 ரன்களே எடுத்தார்.

    விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியும். இல்லையென்றால் அவர் இடம் பெறுவது கடினமாகிவிடும். உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது.

    கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது அவருக்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும் என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #Rahane #Ganguly
    கொல்கத்தா:

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, அயர்லாந்து 20 ஓவர் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். நான் தேர்வாளராக இருந்தால் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ரஹானேவை தான் தேர்வு செய்து இருப்பேன். அம்பத்தி ராயுடுவை விட இங்கிலாந்து சூழ்நிலையில் ரஹானே சிறப்பாக செயல்படக்கூடியவர்.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் ரஹானே நல்ல சாதனை படைத்து இருக்கிறார்’ என்றார். #Rahane #Ganguly #ENGvIND
    ×