search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை யானை"

    • யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
    • அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் ஒன்பதாறு செக் போஸ்ட் முதல் சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுபன்றிகள்உள்ளன. கோடை காலங்களில் காட்டுயானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். பனிக்காலம் முடிந்து கோடை ஆரம்பித்துள்ளது.

    இதனால் வனப்பகுதியில் உள்ள அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.இந்நிலையில் தனது கூட்டத்திலிருந்து வழி தவறிய ஒற்றை யானை அமராவதி நகர் முருகன் கோவில்பகுதியில் சுற்றி திரிகிறது. அதன் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மீண்டும் மீண்டும் அந்த யானை பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் ரோந்து செல்லும் போலீசாரும் தயங்குகின்றனர். கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். யானையை பாதுகாப்பாக வனத்துக்குள் விரட்டி விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாரண்டஅள்ளி பகுதியில் ஐந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தன.
    • இன்று காலை அந்த ஒற்றை யானை தருமபுரி சவுளூர் அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது.

    தருமபுரி,

    கடந்த 5 மாதங்களாக பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி மனிதர்களுக்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தி வருகின்றன.

    கடந்த இரண்டு நாட்களாக மாரண்டஅள்ளி பகுதியில் ஐந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தன.

    இந்நிலையில் யானைகள் நேற்று அருகே உள்ள ஏரிகளில் ஆனந்த குளியல் போட்டு வந்தது.

    இதையடுத்து இன்று காலை அந்த ஒற்றை யானை தருமபுரி சவுளூர் அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், யானையை விரட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்பாடு

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.

    ஒற்றை யானை

    அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்த சில நாட்களுக்கு முன்பு 20 யானைகள் கொண்ட கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து ஆந்திர வன ஊழியர்கள் தமிழக வனப் பகுதியை நோக்கி சில நாட்களுக்கு முன் விரட்டியுள்ளனர்.

    யானை கூட்டம் கடந்த 15 நாட்களாக சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி குடிமிப்பட்டி, பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வி.டி.பாளையம் பகுதியில் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மோர்தானா காட்டுப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வருகிறது இந்த யானை கடந்த சில நாட்களாக சைனகுண்டாவிலிருந்து மோர்தானா செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் மாலை நேரங்களில் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களை விரட்டி வருகிறது.நேற்று முன்தினம் மாலையும் மோர்தானா செல்லும் சாலையில் மூங்கில் புதார் என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக பள்ளி மற்றும் வேலை முடித்துவிட்டு சொந்த மோர்தானா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்ற கிராம மக்களை விரட்டி உள்ளது. யானை பொதுமக்களை விரட்டும் தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    நிலையில் நேற்று மோர்தானா சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை தந்த வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து கதிர்ஆனந்த் எம்பி வனச்சரக அலுவலர் வினோபாவிடம் ஒற்றை யானை மற்றும் யானை கூட்டத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தொடர்ந்து அச்சுறுத்தும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    • பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று நின்றது.
    • வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து நின்றது. நீண்ட நேரம் யானை அங்கிருந்து நகரவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து காத்து கிடந்தன. யானை நீண்ட நேரத்துக்கு பிறகு யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன. காட்டு யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

    • விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.
    • சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.

    சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கிராமத்தின் வழியாக வந்த யானை வயல்வெளிகளை கடந்து நம்பியூர் காராப்பட்டு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒடைய க்குளம், காசிப்பாளையம் பகுதியில் சுற்றியது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் யானையை விரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். இதற்காக வனத்துறை சார்பில் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

    பகல் நேரம் என்பதால் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை. பின்னர் மாலை நேரம் ஆனதும் டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அது வந்த திசையிலேயே மீண்டும் விரட்ட ஆரம்பித்தனர்.

    அப்போது யானை கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றைக் கடந்து சென்றது. யானையை வனத்துறையினர் நேற்று மதியம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பண்ணாரி வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறி மாறி சென்று வனத்துறையி னருக்கு போக்கு காட்டியது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் யானையை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர். ஒரு வழியாக இரவு 9 மணி அளவில் பண்ணாரி வனப்பகுதிக்குள் யானை சென்றது.

    தொடர்ந்து அந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது.
    • வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது உக்கிரம் கிராமம். இன்று அதிகாலை இந்த ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று திடீரென நுழைந்தது. இதையடுத்து தெரு நாய்கள் யானையை பார்த்து குரைத்தது. இதையடுத்து சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது யானை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் அந்தயானை அங்கிருந்து வெளியேறி வயல், கரும்பு தோட்டங்கள் வழியாக நம்பியூர் அடுத்த காராப்பாடி பகுதிக்கு வந்தது.

    இதைப்பார்த்த விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர். யானை சாலை ஓரமாக வயல் வெளியில் ஓடியது. சிலர் மோட்டார் சைக்கிளில் யானையை விரட்டி சென்றனர்.

    பின்னர் அந்த யானை கோபி செட்டிபாளையம் அருகே உள்ள ஒடையாகவுண்டன்பாளையம் வெள்ளிமலை கரடு என்ற பகுதியில் உள்ள மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சுற்றியது. இதைப்பார்த்த வெங்கிடு என்பவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    இதையடுத்து அந்த ஒற்யை யானை கரும்பு தோட்டத்துக்குள் சென்று மறைந்து விட்டது. பின்னர் அவர்கள் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையையும் விரட்டினர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை இருக்கும் இடத்தை தேடினர். அப்போது யானை கோபி செட்டிபாளையம் காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் அவர்கள் யானையை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பவானிசாகர் அடுத்து விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து இந்த ஒற்றை யானை வழிதவறி வந்து இருக்கிறது. வழி தெரியாததால் இது உக்கரம், காராப்பாடி வழியாக கோபி செட்டிபாளையம் பகுதிக்கு வந்து இருக்கிறது.

    எனவே பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது. வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • கடந்த சில நாட்களாக தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்குகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை கீழே இறங்குகின்றன.

    இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் பொட்டல் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்குகிறது.

    மேலும் தற்போது கரடி ஒன்றும் மணிமுத்தாறில் உள்ள கோவில், காவல் நிலைய பகுதியில் சுற்றி திரிகின்றது.

    யானை மற்றும் கரடி சுற்றி திரியும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், யானை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் அப்பகுதியி னர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றது. குறிப்பாக யானை அதிகவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.
    • இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.

    தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரியில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்று செல்லும் லாரிகளை ஒற்றை அணைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்பு கட்டிகளை ருசித்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.

    இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது.

    இதனால் மற்ற வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் கழித்து யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடர்ந்தது.

    • சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.
    • காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தாளவாடியில் இருந்து கரும்புகள் லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள கரும்புஆலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது. தற்போது இரவில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களின் எண்ணி்ககை குறைந்தது. இதனால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர். சோதனைச்சாவடி அருகே சாலையில் ஒற்றை யானை கரும்புதுண்டுகளை சாப்பிட்டபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.

    கார் மெதுவாக அதனருகே சென்றபோது சாப்பிடும் போது இடையூறு செய்வதாக கருதிய யானை காரை துரத்தியது. அப்போது அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் கதறினர். டிரைவர் வேகமாக காரை பின்னோக்கி இயக்கியதால் அனைவரும் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் தமிழக- கர்நாடக இடையே இரு மாநில எல்லையை கடக்கும் மிக முக்கியமான சாலை பண்ணாரியிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

    மிகவும் அடர்ந்த வன ப்பகுதியில் அமைந்திருக்கும் சாலை என்பதால் சாலையில் வன விலங்குகள் அடிக்கடி கடந்து செல்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை என்பதால் ரோட்டில் வாகனங்கள் இல்லாததால் யானைகள் இரவு நேரங்களில் அதிகமாக ரோடுகளில் நின்று கொண்டு உலாவி வருகிறது.

    இந்த நிலையில் பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.

    ஒற்றை யானை என்பதால் எந்த நேரமும் வாகனத்தை தாக்க கூடும் என அச்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் யானை மெதுவாக ரோட்டில் கடந்து சென்றது.

    பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின. இரவு நேரங்களில் போக்குவரத்து தடை என்பதால் விலங்குகள் அதிகமாக ரோடுகளில் சுற்றி திரிகின்றன.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    எனவே வனப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையின அறிவுறுத்தினர்.

    • வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
    • வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏரா ளமான வன விலங்கு கள் உள்ளன.

    இந்த வனப்பகுதி களில் இருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது .

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்த நிலையில் இரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.

    இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி திருமூர்த்தி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதாரம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வனத்துறைக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார்.

    பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். ஆனால் யானைகள் வாழைகளை சேதப்படுத்தி கொண்டு இருந்தது. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு யானை வனப்பகுதிக்கு சென்றது.

    இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300 வாழைகள் சேதம் ஆனது. கருப்பன் என்ற ஆட்கொல்லி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வனப்பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் கும்கி யானை உள்ள பகுதியிலயே கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×