search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரியை வழிமறித்து"

    • கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர்.
    • ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதி மெயின் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் பேச்சுக் கொடுத்த அவர்கள், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவரிடம் 2 பெண்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.
    • இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.

    தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரியில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்று செல்லும் லாரிகளை ஒற்றை அணைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்பு கட்டிகளை ருசித்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.

    இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது.

    இதனால் மற்ற வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் கழித்து யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடர்ந்தது.

    ×