என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே நடுரோட்டில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை
    X

    கூடலூர் அருகே நடுரோட்டில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

    • பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று நின்றது.
    • வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து நின்றது. நீண்ட நேரம் யானை அங்கிருந்து நகரவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து காத்து கிடந்தன. யானை நீண்ட நேரத்துக்கு பிறகு யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன. காட்டு யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

    Next Story
    ×