search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டில் நின்ற"

    • பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் தமிழக- கர்நாடக இடையே இரு மாநில எல்லையை கடக்கும் மிக முக்கியமான சாலை பண்ணாரியிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

    மிகவும் அடர்ந்த வன ப்பகுதியில் அமைந்திருக்கும் சாலை என்பதால் சாலையில் வன விலங்குகள் அடிக்கடி கடந்து செல்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை என்பதால் ரோட்டில் வாகனங்கள் இல்லாததால் யானைகள் இரவு நேரங்களில் அதிகமாக ரோடுகளில் நின்று கொண்டு உலாவி வருகிறது.

    இந்த நிலையில் பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.

    ஒற்றை யானை என்பதால் எந்த நேரமும் வாகனத்தை தாக்க கூடும் என அச்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் யானை மெதுவாக ரோட்டில் கடந்து சென்றது.

    பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின. இரவு நேரங்களில் போக்குவரத்து தடை என்பதால் விலங்குகள் அதிகமாக ரோடுகளில் சுற்றி திரிகின்றன.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    எனவே வனப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையின அறிவுறுத்தினர்.

    ×