search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை தலைமை விவகாரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது.
    • தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்ததால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. மேலும் கட்சி தொண்டர்களும் 99 பேர் சதவீதம் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிகள் பறிக்கப்படுவது உறுதியானது. அந்த பதவிகளை விட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை ஐகோர்ட்டை நாடினார்.

    தேர்தல் ஆணையம் இதுவரை ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கும் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவால் தகர்க்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு எதிராக எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2 நாட்களாக அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வக்கீல்கள் கடும் வாதம் செய்தனர். நேற்று மாலை வரை அந்த வழக்கு விசாரணை நீடித்தது.

    இறுதியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

    திங்கட்கிழமை (11-ந்தேதி) காலை 9.15 மணிக்கு அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால் 9 மணிக்கு தான் தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

    அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் நிலவுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருதரப்பினரும் திக், திக் மனநிலையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி திங்கட்கிழமை காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 90 சதவீதம் பணிகள் நடந்து முடிந்து விட்டன. மீதம் உள்ள 10 சதவீத பணிகளும் நாளை முடிந்து விடும் என்று தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் பொதுக்குழு உறுப்பினர்களிடையே எழுந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

    அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் சென்னைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகத்துடன் சென்னைக்கு வர தொடங்கி விட்டனர்.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு வருபவர்கள் எங்கெங்கு தங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி பழனிசாமி அணியினர் அனைத்து வகையிலும் முழு ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பு திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்ப செயல்பட மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.

    எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வரும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் உள்ளது. அவரது முட்டுக்கட்டைகளால் கட்சிப் பணிகள் தேங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய முடியாமல் போனதற்கு அவர்தான் காரணமாகும். அவரது சுயநலத்தால் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார். அவரது மகன் தி.மு.க. தலைவரை சந்தித்து பேசுகிறார். இதையெல்லாம் நாங்கள் எப்படி ஏற்க முடியும்.

    ஓ.பன்னீர்செல்வத்தை சரியான வழியில் கொண்டு வர அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் பேசி விட்டோம். அவர் சுயநலத்துடன் மட்டுமே இருக்கிறார். கட்சி நலனை பார்க்கவே இல்லை.

    எனவே இனி அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. ஒற்றை தலைமைக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களில் 2432 பேரின் ஆதரவு இருக்கிறது. எனவே கட்சி நலனுக்கான முடிவுகள் உறுதியாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
    • பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை 8-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

    ஓபிஎஸ் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

    பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன்வைத்த வாதம் தவறு, தலைவர்கள் உயிருடன் இல்லாதபோது தான் பதவி காலி என கருதமுடியும் என்று ஒபிஎஸ் தரப்பு வாதம் முன்வைத்தது.

    கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்டவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை ஐகோர்ட், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தது.

    • பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் தலைமை கழக நிர்வாகிகள் என்று மொத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இதனால் அதில் யாரும் கையெழுத்திட வேண்டும் என்கிற அவசியம் ஏற்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று பிற்பகலில் நடைபெற்றது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் காரசாரமான வாதங்களை முன் வைத்தனர்.

    ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி காலம் 5 ஆண்டு காலம் என்றும், இடையிலேயே அவரது பதவி காலாவதியாகி விட்டதாக கூறி விட்டு பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முயற்சிப்பது கட்சியின் விதிகளுக்கு முரணானது என்றும் வாதிடப்பட்டது.

    அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது செல்லாது என்றும் வாதிடப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கட்சியின் விதிகளை மாற்றுவதற்கு பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இதன் அடிப்படையிலேயே பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பொதுக்குழு கூட்டத்தில் இடைக்காலமாகவே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பின்னர் தேர்தல் மூலமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் எடுத்து கூறப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விரிவாக பதில் மனு தயாரித்துள்ளார். இன்று பிற்பகலில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் கூறியதாவது:-

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்று நீதிபதி எழுப்பி இருக்கும் கேள்விக்கு உரிய பதில் அளிக்கப்படும். கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தது. ஆனால் அன்று 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், 2 பதவிகளும் தாமாகவே காலாவதி ஆகி விட்டன. இதனை நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

    இன்று நடைபெறும் விசாரணையின் போது இந்த வாதத்தை எடுத்து வைப்போம்.

    அடுத்ததாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி கட்சியை வழி நடத்த தலைமை பதவியில் யாரும் இல்லாத நேரத்தில் தலைமை கழக நிர்வாகிகள் இணைந்து கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் தலைமை கழக நிர்வாகிகள் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எத்தனை நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்கிற கேள்விக்கும் இன்று உரிய பதில் அளிக்கப்படும். ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பு கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதியே வெளியிடப்பட்டு விட்டது. இதன் மூலம் 18 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் உடனடியாக அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் தலைமை கழக நிர்வாகிகள் என்று மொத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதில் யாரும் கையெழுத்திட வேண்டும் என்கிற அவசியம் ஏற்படவில்லை. இது போன்று கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கைகள் மூலம் போடும் இதுபோன்ற முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வியூகத்தை வகுத்துள்ளார்.

    பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறி இருக்கும் நிலையில் ஐகோர்ட்டும் தங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அது போன்ற உத்தரவையே வழங்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் 2665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
    • பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு தூதுவிட்ட வண்ணம் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற 11-ந்தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீ வாரு மண்டப வளாகத்தி நடைபெற உள்ளது.

    கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் சென்னை கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தடை கேட்டு தொடர்ந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயணன் வாதங்களை எடுத்து வைக்கிறார். கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தாலும், மற்றொரு புறம் பொதுக்குழு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. தலைமை கழகம் செய்து வருகிறது.

    அ.தி.மு.க.வில் 2665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,432 பேர் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 2441 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர்.

    இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் சக்கர வர்த்தி தனது ஆதரவாளர்களுடன் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுகுழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்து விட்டது.

    மேலும் சில பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு தூதுவிட்ட வண்ணம் உள்ளனர்.

    11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்ததந்த மாவட்ட கழக செயலாளர்கள் பஸ்களில் அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி அவர்களை அழைத்து வர மாவட்ட செயலாளர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • அ.தி.முக.வில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகி விட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடை பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டி இருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததும், தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டுகளை அவர் நாடினார்.

    அவை அனைத்துக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உடனுக்குடன் விளக்கங்கள் கொடுத்து பதிலடி அளிக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திடம் 40 பக்க விரிவான விளக்க மனு ஒன்றை எடப்பாடி பழனிசாமி அணியினர் அளித்தனர்.

    அந்த 40 பக்க மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி அணியினர் மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளனர். தற்போதுதான் அந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் கமிஷனில் அளித்துள்ள மனுவில் எடப்பாடி பழனிசாமி கூ றி இருப்பதாவது:-

    அ.தி.முக. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களையும் துன்புறுத்தினார்.

    அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே உள்ளன. கட்சி விதிகளை மீறுவதற்கு அவருக்கு தார்மீக உரிமையும் கிடையாது. முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    அது நடக்காமல் போகவே போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அதன்பிறகும் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.

    இவற்றில் பலன் கிடைக்காததால் தன்னை பற்றி சுய விளம்பரம் செய்து கொண்டார். அதோடு தனது ஆதரவாளர்களை கட்சி நலனுக்கு எதிராக தூண்டிவிட்டார். அவர்கள் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார்.

    இவை அனைத்துமே அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதற்காக அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

    அ.தி.முக.வில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடை பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டி இருக்க வேண்டும். அதற்கு மாறாக 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டில் போய் மனு கொடுத்தார். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவருக்கு அவராகவே தடை விதித்து கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை.

    ஆனால் உண்மையை மறைத்து ஒருதலைபட்சமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி தந்திருக்கிறார். அவரது கடிதம் கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அ.தி.மு.க. தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    அதுபோல அவருக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருந்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சி விதி 20ஏ (7) பிரிவின்படி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் கட்சி வழி நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை என்னவாகும்? என்பது தான் கேள்வியாக உள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை இருந்தால்தான் கட்சியை திறம்பட வழி நடத்தி செல்ல முடியும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

    இதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி 'காய்' நகர்த்தி வருகிறார். அவரது தலைமையை ஏற்க கட்சியின் பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகிறார்.

    ஓ.பன்னீர் செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும், ஜே.சி.டி.பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒரு சிலர்தான் உள்ளனர்.

    இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 11-ந் தேதி நடைபெற்றால் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும்.

    இந்த பொதுக்குழுவில் அவரை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்த பிறகு 6 மாத காலத்தில் மீண்டும் பொதுக்குழுவை கூட்டி முறைப்படி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை என்னவாகும்? என்பது தான் கேள்வியாக உள்ளது.

    ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் அவர் அ.தி.மு.க.வில் நீடிப்பாரா? அல்லது தேர்தல் கமிஷன் மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போடுவாரா? என்பது கேள்விக்குறியாகும்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஓரம் கட்டப்பட்டால் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிடுவார்.

    அதன் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை இனி வேறு ஒரு மூத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொடுக்க முடிவெடுத்து விடுவார். இதற்கான கடிதத்தையும், சபாநாயகரிடம் வழங்கி விடுவார். அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு விடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், சட்டசபையில் சபாநாயகருக்கு அதிக அதிகாரம் உள்ளதால் அவர் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரையும் அ.தி.மு.க. என்றே கருதி அதன் அடிப்படையில் சட்டசபையில் அவருக்கு பேச அனுமதி கொடுக்கலாம்.

    ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தனி அணியாக செயல்படவும் வாய்ப்பு வழங்கலாம். அ.தி.மு.க. கொடுக்கும் கடிதத்தை பொறுத்து சபாநாயகர் முடிவெடுப்பார்.

    எப்படி இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 11-ந் தேதிக்கு பிறகு சிக்கல்தான் உருவாகும். அதை அவர் சமாளித்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பறித்து விடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
    • அப்போதும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்தார்.

    அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    வருகிற 11-ந்தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ரூ.1000 கோடி செலவு செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை.

    இவ்வளவு பெரிய தொகை அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத்தன் இருக்கும், அதாவது, மக்கள் வரிப்பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர். அது மட்டுமல்ல வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பறித்து விடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

    அப்போதும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி மனு அனுப்பினேன்.

    இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து அ.தி.மு.க.,வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்து உள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு அளித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்தது.
    • ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி 11-ந்தேதி நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பொதுக்குழுவில் பங்கேற்க தயாராகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடுகளில் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி வீட்டில் கே.பி.முனுசாமி உள்ள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,441 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் அவரை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து ஆதரவை தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவு எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கு விசாரணை இன்று மாலையில் வரும் நிலையில் அடுத்தக்கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தரப்பினர் புகார் அளித்தனர்.
    • இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, ஜூலை.7-

    சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை யில் அ.தி.மு.க. தலைமை கழகம் உள்ளது. அ.தி.மு.க. வில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில் எடப் பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே உச்சக்கட்ட மோதல் வலுத்து வருகிறது. கட்சியிலும் குழப்பம் நீடிக் கிறது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், பொதுக்குழு வுக்கு அனுமதி அளிக்கக் கோரி எடப்பாடி பழனி சாமி தரப்பினரும் மாறி மாறி கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இரு அணிகளிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் தரப்பினர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கூடுதல் பாது காப்பு வழங்க கோரி ராயப் பேட்டை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நேற்று காலை முதல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக் காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
    • இதன் மூலம் நாளை நடைபெற இருந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2 நீதிபதிகள் அளித்த உத்தரவுக்கு எதிராக அவைத் தலைவரை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இது கோர்ட்டு அவமதிப்பு என்றும், சட்ட விரோதமாக பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் கோர்ட்டு ஒரு எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்றும், பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு உத்தரவு பிறப்பித்தது கட்சியின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.

    எனவே இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. நாளை நடைபெற உள்ள அவமதிப்பு வழக்குக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாளை நடைபெற இருந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுக்குழுவில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமாகும் என்றும் இது எப்படி கோர்ட்டு அவமதிப்பாகும் என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 2 நீதிபதிகள், பொதுக்குழு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. விதிப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் ஆகும்.
    • இந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கி விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளனர்.

    இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற தடையை மீறி 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் அவை தலைவரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இது சட்ட விரோதம் என்ற நிலையில், 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதும் சட்ட விரோதமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    அ.தி.மு.க. விதிப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கி விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 15 நாட்களுக்கு முன்பு அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் ஓ .பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில், சில வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து, விசாரணையை நேரம் குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • 11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுக்குழு கூட்டமே இல்லை
    • ஓ.பன்னீர் செல்வத்தை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேட்டி அளித்த போது, ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 'கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுப்பார்கள்' என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுக்குழு கூட்டமே இல்லை. அது எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடும் கூட்டம். ஓ.பன்னீர் செல்வத்தை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை.

    அவர் அளவோடு பேச வேண்டும். இல்லை என்றால் அவர் மீதுள்ள பழைய வழக்குகளை எல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வைப்போம். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை.

    ஜெயலலிதா 21 ஆண்டுகள் இருந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. 2 மாதம் கூட ஆகாத நிலையில் எப்படி இந்த பதவியை நீக்க முடியும். எடப்பாடி பழனிசாமி என்ன கட்சியின் நிறுவன தலைவரா? எனவே ஓ.பன்னீர்செல்வத்தை யாராலும் நீக்க முடியாது.

    இவ்வாறு கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

    ×