search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு - திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
    X

    சென்னை ஐகோர்ட்

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு - திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

    • ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
    • பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை 8-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

    ஓபிஎஸ் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

    பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன்வைத்த வாதம் தவறு, தலைவர்கள் உயிருடன் இல்லாதபோது தான் பதவி காலி என கருதமுடியும் என்று ஒபிஎஸ் தரப்பு வாதம் முன்வைத்தது.

    கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்டவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை ஐகோர்ட், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தது.

    Next Story
    ×