search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    • உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
    • திறக்கப்படாத நிலையில் இருக்கும் பழைய ஐபோன் மாடல்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், முதல் தலைமுறை ஐபோனிற்கான மதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் பல்வேறு புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பழைய ஐபோன் அதிக விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.

    அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ஒரிஜினல் ஐபோன் மாடல் 50 ஆயிரம் டலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக முதல் தலைமுறை ஐபோன் மாடல் அதன் ஒரிஜினல் பெட்டியில் இருக்கும் நிலையில் 63 ஆயிரத்திற்கும் அதிக டாலர்களுக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது சீல் செய்யப்பட்ட நிலையில், இருக்கும் ஒரிஜினல் ஐபோன் மாடல் 55 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்து 44 ஆயிரத்து 402-க்கு விற்பனையாகி இருக்கிறது.

    முன்னதாக பலமுறை ஒரிஜினல் ஐபோன் மாடல்கள் அதன் திறக்கப்படாத நிலையில் 35 ஆயிரம் மற்றும் 39 ஆயிரம் டாலர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சத்து 91 ஆயிரத்து 892 மற்றும் ரூ. 32 லட்சத்து 22 ஆயிரத்து 394-க்கு விற்பனையாகி இருக்கின்றன. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பழைய ஐபோனிற்கான மதிப்பு இன்றும் குறையவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர பொருட்களுக்கும் இதே போன்ற மதிப்பு கிடைக்கிறது.

    அதன்படி ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கையொப்பமிட்ட ஐபோன் 11 மாடல் 4 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்து 490-க்கு விற்பனையாகி இருக்கிறது. இதே போன்று ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் தொழில்நுட்ப குறிப்புகள் 12 ஆயிரத்து 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 32 ஆயிரத்து 755-க்கு விற்பனையாகி இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன.
    • கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் 2022 ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    2022 ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைசிறந்த ஒன்றாக அமைந்து இருந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    உலகளவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்மார்ட்போன்களில் எட்டு மாடல்கள் ஐபோன் ஆகும். 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன.

    இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் SE 2022 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டு எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன. கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப் உள்ளது. ஒட்டுமொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதம் ஐபோன் 13 மாடல் ஆகும். ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 மாடலுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு காரணமாக இதன் விற்பனை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது.

    சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டு ப்ரோ மேக்ஸ் சீரிஸ் விற்பனை ப்ரோ மற்றும் பேஸ் வேரியண்ட்களை விட அதிகமாக இருந்துள்ளது.

    சாம்சங்கின் கேலக்ஸி A13 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும், ஐபோன் 13 ப்ரோ மாடல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோன் 12 மாடல் ஆறாவது இடம், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளன.

    ஐபோன் SE 2022 மாடல் ஒன்பதாவது இடமும், சாம்சங் கேலக்ஸி A03 மாடல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன் மாடல்களில் எட்டு இடங்களை பிடித்திருக்கும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • முன்னதாக வெளியான தகவல்களில் இந்த தொழில்நுட்பம் ஐபோன் 14 சீரிசில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் நீண்ட காலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களில் இந்த தொழில்நுட்பத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.

    முழுமையான ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஐபோன்களில் வழங்குவதற்கான பணிகளை ஆப்பிள் இதுவரை நிறைவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் ஸ்மார்ட்போனினை வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆக மாற்றி விடும். இதை கொண்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட இதர சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

    அதாவது உங்களின் மொபைல் போன் கொண்டு ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அல்லது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சிறிய மின்சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கும் என கூறப்பட்டது.

    எனினும், இந்த தொழில்நுட்பத்தை வழங்க ஆப்பிள் தவறிவிட்டதாக தெரிகிறது. இந்த முறை ஆப்பிள் பொறியாளர்கள், வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கி முடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கான மென்பொருள் ஆப்டிமைசேஷன்கள் உருவாக்கப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் பைலேடரல் வயர்லெஸ் சார்ஜிங் என்றும் அழைக்கப்படுகிறது.

    ஐபோன் 12 சீரிசில் இருந்தே ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வழங்குவதற்கான உபகரணங்களை பயன்படுத்த துவங்கிவிட்டது. எனினும், இந்த அம்சம் பல்வேறு காரணங்களால் செயலிழக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்கியதும், ஐபோன்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம். புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இதை கொண்டு ஐபோன் மூலம் ஏர்பாட்ஸ்-ஐ சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக இருக்கிறது.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. மத்திய அரசின் "மேக்-இன்-இந்தியா" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரூ. 8 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இது குறித்த அரசு தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் முன்னணி மொபைல் போன் ஏற்றுமதியாளராக சாம்சங்கை முந்தி இருக்கிறது.

    ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஆலைகளை தமிழ் நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயக்கி வருகின்றன. இவற்றுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட்போன் ப்ரோடக்ஷன்-லின்க்டு-இன்செண்டிவ் (PLI) திட்டத்தின் கீழ் உள்ளன. இந்த திட்டம் ஏப்ரல் 2020 வாக்கில் அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் PLI திட்டமானது இந்தியாவை ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன உதிரிபாகங்களின் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி , ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க வேண்டும்.

    மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தவிர, மேலும் சிறு இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து ஐபோன்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. 2022-23 நிதியாண்டில் இந்தியா 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டில் இருந்த 5.8 பில்லியன் டாலர்களை விட அதிகம் ஆகும். 

    • ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்து இருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • ஐபோன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீண்ட காலம் எதிர்பார்க்க ப்பட்டு வருகிறது.

    ஐபோன்களை கொண்டு பல்வேறு இதர சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் அம்சத்திற்காக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் பைமாடல் மாக்னடிக் அலைன்மெண்ட் பாகங்களை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி இந்த அம்சம் எதிர்கால ஐபோன்களில் ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும். தற்போது ஐபோன்களின் பின்புறம் ஆப்பிள் வழங்கி வரும் வயர்லெஸ் சார்ஜிங் பெரிய காயில் கொண்டுள்ளது. ஆனால் இது வாட்ச்-ஐ சார்ஜ் செய்யாது.

    காப்புரிமை விண்ணப்ப குறிப்பில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்கள் எலெக்ட்ரோமேக்னடிக் இண்டக்ஷன் முறையில் மின்சாதனங்களுக்கு சார்ஜ்-ஐ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு வயர்லெஸ் சார்ஜர் பகுதியில் இதர சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தவிர ஆப்பிள் நிறுவனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய OLED கொண்ட ஐபேட் ப்ரோ 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து அவற்றில் M2 சிப்செட் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: Patentlyapple 

    • மடிக்கக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்குவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • மடிக்கக்கூடிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் இது ஐபோன் ஃபோல்டு என்று அழைக்கப்படுகிறது.

    சாம்சங், ஹூவாய், ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கி விட்டன. ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் "ஐபோன் ஃபோல்டு" பெயரில் அழைக்கப்படும் என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் மேக்சேஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவைதவிர புதிய ஐபோன் ஃபோல்டு மாடலில் டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் இணைந்து மிக மெல்லிய கவர் கிலாஸ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இது மட்டுமின்றி ஆப்பிளஅ நிறுவனம் சொந்த சிப் டிசைன் பிரிவில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கான சொந்த சிப்செட்களை டிசைன் செய்து வருகிறது. எனினும், 5ஜி கனெக்டிவிட்டியை வழங்க ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவன மோடெம்களை சார்ந்து இருக்கிறது. டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ராஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வரை அறிமுகமாகாது என தெரிவித்து இருந்தார்.

    ஆப்பிள் நிறுவனம் தற்போது 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே வாங்குவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய மேக்புக் மாடல்களை ஆப்பிள் உருவாக்க நினைப்பதாகவே தெரிகிறது. மடிக்கப்பட்ட நிலையிலும், முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் பயன்படுத்தக்கூடிய மேக்புக் மாடல்கள் 2026 அல்லது 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: iOS Beta News/YouTube

    • வாட்ஸ்அப் செயலியின் ஐபோன் வெர்ஷனில் ஏராள மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • தற்போது புது அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், ஐபோனில் புது மாற்றங்களை பெற இருக்கிறது. அதன்படி ஐபோனிற்கான வாட்ஸ்அப் செயலியில் PiP மோட் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் பேசிக் கொண்டே மற்ற செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த வழி செய்கிறது.

    தற்போது வீடியோ கால் பேசும் போதே வாட்ஸ்அப் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது. எனினும், இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் செயலிக்கான கேமரா அக்சஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும். இதன் காரணமாக பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த துவங்கும் போது வீடியோவை பார்க்க முடியாது. எனினும், புது அம்சம் மூலம் இந்த நிலை விரைவில் மாறும் நிலை வந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஃபேஸ் டைம் வீடியோ காலிங் மற்றும் கான்ஃபெரன்சிங் செயலிகள் ஐஒஎஸ்-இல் இயங்குவதை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் இயங்கும். ஏற்கனவே கான்ஃபெரன்சிங் செயலி வீடியோ கால் பேசும் போதே PiP மோட் மூலம் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது.

    தற்போது வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுவதோடு, லின்க் மூலம் க்ரூப் கால்களில் இணைந்து கொள்ளும் வசதி, வீடியோ கால் பேசும் போது 32 பேரை இணைத்துக் கொள்வது மற்றும் வீடியோ காலில் யாரையாவது மியூட் அல்லது மற்றவருக்கு மெசேஜ் அனுப்புவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். PiP மோடில் வீடியோ கால் அம்சம் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.

    எனினும், தற்போது இந்த அம்சங்கள் அனைத்தும் பீட்டா வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் இவை கிடைக்க மேலும் சில காலம் ஆகலாம். வெளியாகும் போதே புது அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை பீட்டா டெஸ்டிங் செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃப்ரின் கீழ் இன்வைட் செய்யப்படும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிடும் பீட்டா டெஸ்டிங்கை ரிலையன்ஸ் ஜியோ துவங்கியது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் ஐஒஎஸ் 16.2 ஒஎஸ்-ஐ வெளியிட்டது. இந்த அப்டேட் ஐபோன் 12 சீரிஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. இதில் ஐபோன் SE 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது 5ஜி சப்போர்ட் கொண்ட ஐபோன் வைத்திருப்பவர்கள் ஜியோ வெல்கம் ஆஃபரில் இணைந்து கொண்டு இலவமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.

    இதற்கு பயனர்கள் முதலில் ஐபோனில் ஐஒஎஸ் 16.2 இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் ஐபோன் செட்டிங்ஸ்-இல் 5ஜி-யை தேர்வு செய்தால் 5ஜி நெட்வொர்க்-ஐ பயன்படுத்த முடியும்.

    ஐபோனின் செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களில் 5ஜி ஆட்டோ மற்றும் 5ஜி Standalone ON ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் செட்டிங்ஸ் -- பேட்டரி -- லோ பவர் மோட்-ஐ ஆஃப் செய்ய வேண்டும்.

    தற்போது குஜராத், பூனே, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்மை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ ஏற்கனவே அறிவித்து விட்டது.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அதன் கேமராவுக்கு உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கிறது.
    • இந்த நிலையில், ஐபோன்களில் பயன்படுத்தப்படும் கேமரா சென்சார் பற்றிய புது தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஐபோன் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வோர் விவரங்கள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்படும், இதே நிலை அவற்றின் தொழில்நுட்ப விவரங்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில், சோனி நிறுவன ஆலைக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும் இது சந்தையில் மிகவும் அரிதான காரியமாகவும் பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைந்து செயல்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. எனினும், இதுபற்றி இரு நிறுவனங்களும் தொடர்ந்து மௌனம் காத்து வந்தன. இந்த நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சோனி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக டிம் குக் தெரிவித்தார்.

    இத்துடன் சோனி நிறுவன தலைமை செயல் அதிகாரி கெனிசிரோ யோஷிடாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிம் குக் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சோனி உற்பத்தி ஆலையில் எடுக்கப்பட்டதாக டிம் குக் குறிப்பிட்டு இருக்கிறார். பேட்டரி, சிப் மற்றும் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகளை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் ஆப்பிள் மர்மமாகவே வைத்திருக்கிறது. எனினும், வினியோக துறையை சார்ந்தவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முன்புறம் மற்றும் பின்புற கிளாஸ் ஷீட்களை கார்னிங் நிறுவனம் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளனர்.

    இதே போன்று சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் பெரும்பாலான OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. ஆப்பிள் பயன்படுத்தும் சிப்செட்களை TSMC உற்பத்தி செய்து கொடுக்கிறது. சோனி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே கேமரா ஹார்டுவேர் பற்றிய ஒப்பந்தம் அதன் தோற்றத்தை பொருத்து இதுவரை உறுதுப்படுத்தாமலேயே இருக்கிறது. மேலும் இது பற்றிய உறுதியான தகவல் வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.

    இது தவிர சோனி நிறுவனம் செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களை கொண்டு புது சென்சார் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகம் மற்றும் குறைந்த வெளிச்சத்தை அனுமதிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சென்சார் நிச்சயம் எதிர்கால ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
    • தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.

    எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.

    இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 14-க்கு இத்தனை சலுகைகள் கிடைக்கின்றன.

    ஐபோன் வாங்குவோர் பலருக்கும் மனதில் எழும் முதல் சந்தேகம், முற்றிலும் புதிய ஐபோன் 14 வாங்கலாமா அல்லது ஐபோன் 13, ஐபோன் 12 என சற்று பழைய மாடல்களை வாங்கலாமா என்பது தான். இது பற்றிய தெளிவு கிடைக்க ஐபோன் 14 டிசைன் மற்றும் அம்சங்கள் கிட்டத்தட்ட ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், ஐபோன் 14 மாடலில் 5-கோர் GPU கொண்ட ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி எஸ்ஒஎஸ் வசதி, கிராஷ் டிடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் புதிய ஐபோன் 14-இல் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை எதுவும் ஐபோன் 13 மாடலில் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை வெளியான ஐபோன்களில் அதிநவீன மாடல் ஐபோன் 14 தான்.

    இதுதவிர ஐபோன் 14 மாடலுக்கு ஆன்லைன் வலைதளங்களில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் "பிளாக் ஃபிரைடே சேல்" அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோன் 14 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    ப்ளிப்கார்ட் சலுகை விவரங்கள்:

    தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் சலுகையின் கீழ் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. இந்த விலை ஐபோன் 14 (128 ஜிபி) மாடலுக்கானது ஆகும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ஐபோன் 14 விலையில் ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 (128 ஜிபி) விலை மேலும் குறைந்து ரூ. 72 ஆயிரத்து 400-க்கு கிடைக்கும்.

    இவை தவிர ஐபோன் 14 வாங்குவோர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் சலுகையில் முழு தள்ளுபடியை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 51 ஆயிரத்து 900 என மாறி விடும். எனினும், எக்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    • ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பெருமளவு ஆபத்தில் சிக்கியும், சீராக இயங்கும் அளவுக்கு தரம் கொண்டிருப்பதற்கு உலகளவில் பெயர் பெற்றுள்ளன.
    • ஒரு வருடத்திற்கு முன் கடலில் விழுந்த ஐபோன் மாடல் கரை ஒதுங்கிய சம்பவம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறி இருக்கிறது.

    ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடத்திற்கு பின் மீட்கப்பட்ட ஐபோன் தற்போது சீராக இயங்குகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    கிளார் அட்ஃபீல்டு நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்து விட்டார். கடலில் விழுந்து காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை பிராட்லி காட்டன் என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

    இதை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 2021 முதல் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். எப்போது சர்ஃபிங் செய்யும் போது தனது ஐபோன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டிக் கொள்வார். அதே போன்று தான் செய்யும் போது தான் தண்ணீரில் தவறி விழுந்த அட்ஃபீல்டு பையை எப்படியோ தொலைத்திருக்கிறார்.

    தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என அட்ஃபீல்டு தெரிவித்து இருக்கிறார். மேலும் 450 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    ×