search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் பைக்"

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 வெளியிட்டது.
    • 2023 ஆண்டு இந்திய சந்தையில் மேலும் புது வாகனங்களை அறிமுகப்படுத்த ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு புது மைல்கல்களை இந்த ஆண்டு எட்டியது. முன்னதாக ஒலா S1 ஏர் பெயரில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டது. இதுதவிர இந்திய விற்பனையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. சமீபத்தில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் தற்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்கு வந்துவிட்ட நிலையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் 2023 ஆண்டுக்கான ஒலா எலெக்ட்ரிக் நிறுவன திட்டங்கள் பற்றி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த பதிவில், புது எலெக்ட்ரிக் வாகனங்களை 2023 ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மாஸ் மார்கெட் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    "இருசக்கர வாகன உற்பத்தி சீராக நடைபெற்று வருவது, மிக முக்கிய எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள், மென்பொருள், எலெக்டிரானிக்ஸ், பேட்டரி மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்ட பிரிவுகளில் அதிக போட்டியை ஏற்படுத்தும் வாய்ப்பை கொடுக்கும். இதன் மூலம் உலக தரம் மிக்க நான்கு சக்கர வாகனங்களை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலை பிரிவில் அறிமுகம் செய்ய வழி வகுக்கும்," என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    இதுதவிர புது எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீட்டு காலம் பற்றியும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். அதில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2027 இறுதியில் ஆறு வெவ்வேறு வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்திருக்க ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புது வாகனங்கள் மட்டுமின்றி, ஒலா எலெக்ட்ரிக் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

    • ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
    • புதிய எலெக்ட்ரிக் பைக் அதிக சக்திவாய்ந்த பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது ரோஸ் பரேட்-க்காக புது டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன திட்டம் அனைவரும் அறிந்ததே. இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி விட்டன. இதில் சர்வதேச சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கும் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

    இதே தகவல்களில் இந்தியாவுக்காக ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதும் அம்பலமானது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் சந்தையில் பெருமளவு வாடிக்கையாளர்களை குறிவைத்து வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இவை அதிக செயல்திறன் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என தெரிகிறது.

    அமெரிக்க சந்தைக்காக திட்டமிடப்பட்டு இருக்கும் புது எலெக்ட்ரிக் பைக் மிட்-பெர்ஃபார்மன்ஸ் ஸ்டிரீட் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார், 150 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து தற்போது வெளியான தகவல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் ஆரம்பகட்ட எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப் மாடல்களை இந்தியாவில் சோதனை செய்ய ராயல் என்பீல்டு துவங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இந்த எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை துவங்கி உள்ள நிலையில், தற்போது விற்பனை செய்து வரும் சில மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கடந்த ஆறு முதல் எட்டு மாத காலமாக முதலீடு செய்து வருவதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. இதற்காக ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில் இருந்து புது திறமையாளர்களை பணியில் சேர்த்து இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் முன் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் பிரிவில் எந்த மாடல்களையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்யவில்லை. அந்த வகையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு இணைய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவரும் மாடல்களை எதிர்பார்க்கிறது. எனினும், ராயல் என்பீல்டு இந்த பிரிவில் எந்த மாடலையும் கொண்டிருக்கவில்லை.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு விவரம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் அல்ட்ராவைலட், தனது F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில், அல்ட்ராவைலட் F77 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அல்ட்ராவைலட் F77 மாடல் இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    மேலும் புதிய அல்ட்ராவைல்ட F77 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராவைலட் F77 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ராவைலட் F77 பல்வேறு காரணங்களுக்காக விற்பனைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

    முந்தைய திட்டப்படி அல்ட்ராவைலட் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் இரண்டாம் தலைமுறை மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், இதன் முதல் தலைமுறை மாடலே அடுத்த மாதம் தான் விற்பனைக்கு வர இருக்கிறது. 2019 அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட தற்போது விற்பனைக்கு வரும் மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரிலும் எலெக்ட்ரிக் பைக் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள தனியார் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு செல்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்கினார்.

    அந்த வண்டியில் இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வசூல் செய்வதற்காக தனது எலெக்ட்ரிக் வண்டியில் அய்யலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென வண்டியின் பின் பகுதியில் இருந்து புகை வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தி விட்டு அருள்ஜோதி பார்வையிட்டார். சற்று நேரத்தில் வண்டி முழுவதும் தீ பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

    இருந்தபோதும் சில நிமிடங்களில் வண்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. இதை பார்த்ததும் அருள்ஜோதி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரிலும் எலெக்ட்ரிக் பைக் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் வாகனத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.

    "எலெக்ட்ரிக் வாகன பிரிவு குறித்த திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த மிக எளிய வழியை தேர்வு செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் அதிக வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன," என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில் ராயல் என்பீல்டு பெயரில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது.


    "தற்போது ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சினைகளை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. நகர பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்."

    "தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. இது முழுக்க ராயல் என்பீல்டு மாடலாகவே இருக்கும். அறிமுகமாகும் போது சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையிலஅ இருக்கும்," என சித்தார்தா  லால் தெரிவித்து இருக்கிறார்.

    • இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் பிரபல அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்தது.
    • இந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு புது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துவங்கும் போது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களை பணி அமர்த்த முடிவு செய்து உள்ளது. தற்போது இரு நிறுவனங்கள் இணைந்து நிதி சார்ந்த திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெற இரண்டு மாதங்கள் ஆகும்.


    இதைத் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து முதலீட்டை ஈர்ப்பது, புது நிறுவனத்தை துவங்குவது என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள இருக்கிறது. இது சார்ந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக கூட்டணி அமைத்த பின் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மேலும் இரண்டு காலாண்டுகளே தேவைப்படும்.

    அந்த வகையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவன கூட்டணியில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • டி.வி.எஸ். மற்றும் பி.எம்.டபிள்யூ. இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்கின்றன.
    • டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டி.வி.எஸ். நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது.

    தற்போது டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து 15 கிலோவாட் ஹவர் ரேன்ஜ் பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் 5 முதல் 25 கிலோவாட் ஹவர் ரேன்ஜில் எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


    டி.வி.எஸ். மட்டுமின்றி அதன் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அறிமுகமாகிறது. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் ஸ்விஸ் இ மொபிலிட்டி குழுமத்தை விலைக்கு வாங்கி இருந்தது. இதை கொண்டு எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சியில் டி.வி.எஸ். கவனம் செலுத்தும் என தெரிகிறது.

    முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் ஜியோ பி.பி. உடன் இணைந்து நாடு முழுக்க சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு செய்தது. இரு நிறுவனங்கள் இணைந்து வழக்கமான AC சார்ஜிங் நெட்வொர்க் மட்டுமின்றி DC பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்-யையும் அமைக்க உள்ளன.

    ×