search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூரில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது- பெண் பயணி உயிர் தப்பினார்
    X
    அய்யலூர் மேம்பாலத்தில் தீ பிடித்து எரிந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்.

    அய்யலூரில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது- பெண் பயணி உயிர் தப்பினார்

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரிலும் எலெக்ட்ரிக் பைக் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள தனியார் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு செல்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்கினார்.

    அந்த வண்டியில் இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வசூல் செய்வதற்காக தனது எலெக்ட்ரிக் வண்டியில் அய்யலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென வண்டியின் பின் பகுதியில் இருந்து புகை வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தி விட்டு அருள்ஜோதி பார்வையிட்டார். சற்று நேரத்தில் வண்டி முழுவதும் தீ பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

    இருந்தபோதும் சில நிமிடங்களில் வண்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. இதை பார்த்ததும் அருள்ஜோதி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரிலும் எலெக்ட்ரிக் பைக் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×