search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடியூரப்பா"

    • இன்னும் 3 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது.
    • இந்த விமான நிலையம் பிப்ரவரி 27-ந்தேதி நடக்கிறது.

    சிவமொக்கா:

    மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் சோகானே பகுதியில் விமான நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் நேற்று சோகானே விமான நிலைய பகுதிக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அப்போது அவர் விமான நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னா் அவா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டிலேயே மிக குறைந்த செலவில் ரூ.449.22 கோடியில் மிக நவீனமுறையில் சிவமொக்கா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் 3 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பணிகள் கூடிய விரைவில் முடிந்துவிடும். இந்த விமான நிலைய திறப்பு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது.

    இதில் கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்துக்கு அடுத்து மிகவும் நவீன முறையில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இரவு நேரங்களிலும் விமானங்கள் தரையிறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரே ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதே ஆட்சியில் விமான நிலையம் திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விமான நிலைய பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிவமொக்கா மக்களின் நீண்டநாள் கனவு நனவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா, கலெக்டர் செல்வமணி, போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள்.
    • லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன.

    பெங்களூரு :

    கொப்பலில் நேற்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் அப்போது நான் தோல்வி அடைந்தேன். அதில் தோல்வி அடைந்ததால் எனக்கு பயன் ஏற்பட்டது. அதனால் தான் நான் முதல்-மந்திரி ஆனேன். கொப்பலில் பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடப்பதாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. தங்களது இரட்டை என்ஜின் அரசு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் கொப்பல் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்ததா?. மராட்டியத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அந்த அரசிடம் இதுபற்றி பேசாதது ஏன்?.

    இந்த பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள். இது லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன. பணி நியமனங்கள், பணி இடமாற்றங்கள் என அனைத்திலும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மந்திரி ஈசுவரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ இலவச அரிசி வழங்கினேன். அதை பா.ஜனதா அரசு 5 கிலோவாக குறைந்துவிட்டது. எனது ஆட்சியில் 15 லட்சம் வீடுகளை ஏழை மக்களுக்கு கட்டி கொடுத்தேன். கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அங்கு அரசு துறைகளில் 35 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பினோம். அந்த பகுதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுத்தோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த கல்யாண கர்நாடக பகுதிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா மக்களுக்கு 600 வாக்குறுதிகளை அளித்தது.

    அதில் இதுவரை 25 வாக்குறுதிகள் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் பசவராஜ் பொம்மை செயல்படுகிறார். பிரதமர் மோடியின் முன்பு அவர் கைகட்டி நிற்கிறார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக என்னை யாராலும் ஒழிக்க முடியாது.
    • பா.ஜனதா ஒற்றுமையாக உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா.

    இவர் தான் தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி பீடத்தில் ஏற்றியவர். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எடியூரப்பா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்துவதற்கு முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், கூட்டணி ஆட்சி 2019-ம் ஆண்டு ஜூலையில் கவிழ்ந்தது. இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி மீண்டும் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    வயது முதிர்வு காரணமாக கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் 2021-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதிதனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் பா.ஜனதா தேர்தல் குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொப்பல் உள்பட 10 மாவட்டங்களில் பா.ஜனதா அலுவலக திறப்பு விழா நேற்று கொப்பலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை வரை மூத்த தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். நேற்று மாலையில் அவரை பா.ஜனதா தலைவர்கள் நேரில் சென்று விழாவுக்கு வருமாறு கூறி அழைப்பிதழ் வழங்கினர்.

    தன்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் கூறிவிட்டதாக தெரிகிறது. தன்னை கட்சியில் ஓரங்கட்டுவது குறித்து அவர் தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் எடியூரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, விழாவுக்கு வரும்படி கேட்டு கொண்டார்.

    தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது எடியூரப்பாவை அருண்சிங் சமாதானப்படுத்தினார். இதையடுத்து எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் கொப்பலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

    எடியூரப்பாவின் அதிருப்தி பா.ஜனதாவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொப்பலுக்கு புறப்படும் முன்பு பெங்களூருவிலும், அதன் பிறகு கொப்பலிலும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். கொப்பல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு எடுத்ததாக சொல்வதில் உண்மை இல்லை. அந்த கூட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்திருந்தேன். சில கட்டாயம் எழுந்ததால் நான் அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்தேன்.

    கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக என்னை யாராலும் ஒழிக்க முடியாது. அரசியலில் யாரும் யாரையும் அழிக்க முடியாது. எனக்கு என்று தனி பலம் உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை நான் பலப்படுத்தினேன். கட்சியை ஆட்சியில் அமர வைத்தேன். அதற்காக நான் பாடுபட்டேன். இது ஒட்டுமொத்த கர்நாடகத்திற்கும் தெரியும். அதனால் கட்சியில் நான் ஓரங்கட்டப்படுவதாக கூறுவதில் அர்த்தம் இல்லை.

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரது தலைமையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பா.ஜனதா ஒற்றுமையாக உள்ளது. அதனால் எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

    பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம். எனது மகன் விஜயேந்திராவை சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுமாறு கூறியுள்ளேன். கட்சியும் அவரை அந்த தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் கட்சியின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • எடியூரப்பா மீது சட்ட விரோத நில முறைகேடு பற்றி விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.
    • வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் வழக்கில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவர் மீது சட்ட விரோத நில முறைகேடு பற்றி விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.

    இதை எதிர்த்து எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் வழக்கில் இருந்து விலகினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர்.
    • முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார்.

    அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது. இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று தொடங்குகிறது.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.

    ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    • கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது.
    • அங்கு முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2008 - 10ல் எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்தபோது, அவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன. இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைப் பற்றி விசாரணை நடத்தும்படி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

    எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். நவம்பர் 2-க்குள் அறிக்கை அளிக்கவேண்டும் என லோக் ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம் 14-ம் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த், கட்டுமான நிறுவன அதிபர் ராமலிங்கம், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்காக எடியூரப்பா, விஜயேந்திரா, மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக கூறி லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். லோக் ஆயுக்தா போலீசார் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால் அவருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.

    • எடியூரப்பா வயது மூப்பால் முதல்வர் பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன் விலகினார்.
    • தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

    பெங்களூரு:

    கர்நாடக முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அப்பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு விலகினார். அவர் அரசியலலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவே கருதப்பட்டார். அவருக்கு 80 வயது, ஆனாலும் கட்சி மேலிடம் அவருக்கு புதிய பதவி வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவருக்கு கட்சியின் உயர்நிலை குழு மற்றும் தேர்தல் குழுவில் இடம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பா நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனக்கு கட்சியில் புதிய பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    கர்நாடகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்க பாடுபடுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    • கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.
    • 2023 நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு :

    ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

    சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.
    • 2023 நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு :

    ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

    சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம்.

    பெங்களூரு :

    தாவணகெரே மாவட்டம் ஒன்னாளியில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரேணுகாச்சார்யாவின் வீட்டுக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கு எடியூரப்பா அருகில் கண் கலங்கியபடி ரேணுகாச்சார்யா இருந்தார். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என்று எடியூரப்பாவிடம் ரேணுகாச்சார்யா கேட்டுக் கொண்டார். பின்னர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மிகப்பெரிய தலைவர் எடியூரப்பா. அவர், தேர்தலில் போட்டியிடுவது இல்லை, கட்சியை வளர்க்கும் பணியில் மட்டும் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். எடியூரப்பா தனது முடிவை திரும்ப பெற வேண்டும். அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு பெறக்கூடாது.

    மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம். அவர் கட்சி வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எடியூரப்பா பற்றி பேசும் போது ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுதார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது.
    • அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    வரும் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்மந்திரியுமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். தன்னுடைய சட்டசபைத் தொகுதியை எனது மகன் பி.ஒய்.விஜயேந்திரனுக்காக விட்டுக்கொடுக்கிறேன். ஷிகாரிபுரா வாக்காளர்கள் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், எடியூரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனது மகன் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார். இறுதி முடிவை பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எடுப்பார்கள் என கூறினேன். அவர்களின் முடிவே இறுதியானது. என்னால் அழுத்தம் கொடுக்க முடியாது. பரிந்துரையை மட்டுமே என்னால் கூறமுடியும். மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்.

    • எடியூரப்பா இதுவரை 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.
    • 4 முறை முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    பெங்களூரு:

    கர்நாடக அரசியலில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் எடியூரப்பா. பா.ஜனதா வட இந்திய மாநிலங்களில் மட்டுமே கோலோச்சி வந்த காலக்கட்டத்தில் தென்இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார். இது அப்போது அக்கட்சியின் பலம் வாய்ந்த தலைவர்களாக திகழ்ந்த வாஜ்பாய், அத்வானி போன்றோருக்கு பெரும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்தது.

    சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா 3½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்தார். மந்திரி பதவி கேட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி போர்க்கொடி தூக்கியதால் அவர் ஆட்சியை நடத்த பெரும் சவால்களை சந்தித்தார். நில முறைகேடு, கனிம வளங்கள் முறைகேடு என ஊழல் புகார்களின் சுழலில் சிக்கிய அவர் பதவியை இழந்து சிறைக்கும் சென்றார்.

    அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பாவின் முடிவே கட்சி மேலிடத்தின் முடிவாக இருந்தது. கர்நாடக பா.ஜனதாவிலோ அல்லது ஆட்சியிலோ யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை எடியூரப்பாவின் தீர்மானமே இறுதியாக இருந்தது. எடியூரப்பா தான் பா.ஜனதா மேலிடம் என்ற நிலை இருந்தது.

    அவர் முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் அவர் கை காட்டியவருக்கே முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதாவது சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டரை அவர் தான் முதல்-மந்திரி ஆக்கினார். ஆனால் ஊழல் புகார்களில் பா.ஜனதா மேலிடம் அதிருப்தியில் இருந்ததை அடுத்து எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டார்.

    இதையடுத்து அவர் அக்கட்சியை விட்டு விலகி 2012-ம் ஆண்டு கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் அவர் எதிா்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    10 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் 6 இடங்களில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டதே காரணம் ஆகும்.

    எடியூரப்பா விலகிய பிறகு கட்சியை வழிநடத்த அவருக்கு இணையான ஒரு தலைவர் இல்லாமல் பா.ஜனதா தடுமாறியது. அதே நேரத்தில் எடியூரப்பாவும் பா.ஜனதாவுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உணர்ந்தார். இதையடுத்து எடியூரப்பா கர்நாடக ஜனதாவை கலைத்துவிட்டு மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பினார். இதன் மூலம் பா.ஜனதா மீண்டும் பலம் பெற்றது. சித்தராமையா ஆட்சிக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்தினார்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அப்போது எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும், தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் மூன்றே நாட்களில் அந்த பதவியை இழந்தார்.

    காலப்போக்கில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் அவர் மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகள் அவர் பதவியில் இருந்த நிலையில் வயது மூப்பு காரணமாக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா துறந்தார்.

    இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு 80 வயது ஆகிறது. பா.ஜனதாவில் தீவிர அரசியலில் நீடிக்க வயது வரம்பு 75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கு காரணமாகவும், பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முன்னணி தலைவராகவும் இருந்ததால் அந்த வயது வரம்பையும் மீறி 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அவருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எடியூரப்பா போட்டியிட மாட்டார் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். தனது சிகாரிப்புரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும், அவருக்கு மக்கள் தன்னை போலவே ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் எடியூரப்பாவின் 50 ஆண்டு கால கர்நாடக அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    எடியூரப்பா முதல் முறையாக 1972-ம் ஆண்டு சிகாரிப்புரா பட்டண பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு அந்த அதே பட்டண பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். 1983-ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சட்டசபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அந்த தொகுதியில் அவர் இதுவரை 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். 1999-ம் ஆண்டு அவர் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும் ஜனதா தளம் (எஸ்) ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் 4 முறை முதல்-மந்திரியாக பணியாற்றினார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். அவரது இந்த 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    ×