search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    • உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவரது மனைவி பிரேமா. பிரேமா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

    இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

    விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

    புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.

    இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.

    தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இந்தியாவை சேர்ந்தவர் முகமது பைக் மிர்சா (20). பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகமது, ஓமனில் இருந்து ஐக்கிய அமிரகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தபேது பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இதில் 31 பயணிகளில் 17 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் இந்தியர்கள் ஆவர். முகமது உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3.4 மில்லியன் திர்ஹம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

    இந்த விபத்தில் படுகாயங்கள் அடைந்த முகமது துபாயில் உள்ள மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். 14 நாட்கள் சுயநினைவின்றி இருந்தார். அதன் பிறகு மறுவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்றார்.

    விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது. மேலும், அவரது மண்டை ஓடு, காதுகள், வாய், நுரையீரல், கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களும் தடயவியல் மருத்துவ நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

    முகமதுவின் மூளையில் 50 சதவீதம் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையின் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இதன்மூலம் முகமதுவுக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் இன்று நடந்தது.
    • விபத்து தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பூர் :

    தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் வழிகாட்டுதலின் படியும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் இன்று நடந்தது.இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் 2020 ஆம் ஆண்டு தனது காரில் தாய், மனைவி, குழந்தை ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் வினோத்குமார் பலியானார். இந்த விபத்து தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் கணவனை இழந்த மனைவி மற்றும் குழந்தைக்கு ரூ.90 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதனை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் வழங்கினார்.

    • சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.
    • அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ல் அய்யந்திருமாளிகை அருகே ஆட்டோ ஓட்டிச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நதியா என்பவர் மீது மோதியது.

    இதில் நதியா மற்றும் இவரது மகன் விக்ராந்த் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இழப்பீடு கேட்டு நதியா சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆட்டோ டிரைவர் வைத்திருந்த இன்ஸ்சூரன்ஸ் ஆவணங்கள் போலியானது என சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீசில் புகார் அளித்திருந்தது.

    இதையடுத்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 3.47 லட்சம் ரூபாய் இழப்பீடு ஆட்டோ டிரைவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

    • சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடபட்டுள்ளது
    • புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள தெற்கு ஆயுதக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் அருள்தாஸ்(வயது50). இவரது மனைவி ஜெயக்கொடி.கடந்த 2017 ஆண்டு அக்டோபர் மாதத்தில், வீடு கட்டுவதற்காக கும்பகோணத்திலுள்ள எக்வீடாஸ் சிறு நிதி வங்கியை அணுகி ரூ.7.50 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஜெயக்கொடி கடன் பெற்ற போது தனது கணவர் அருள்தாஸ்க்கு பாத்தியப்பட்ட சொத்தை பிணையமாக நிதி நிறுவனத்துக்கு அடமானம் எழுதி கொடுத்துள்ளார்.

    கடன் வழங்கிய அந்த வங்கி, இன்சூரன்ஸ் பிரீமியத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக் கடனுக்கான பாலிசியையும் வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயக்கொடி இறந்து விட்டார். இதையடுத்து அருள்தாஸ், தமது மனைவி இறந்துவிட்டதை தெரிவித்து இன்சூரன்ஸ் மூலம் கடனை முடித்துக்கொண்டு, தாம் எழுதிக் கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்து, அதனை திரும்பத் தருமாறு வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

    அதற்கு நிர்வாகம்,  இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வரை மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தினால் இன்சூரன்ஸ் பணம் வந்த பின்னர் ஜெயக்கொடி இறந்த பின்பு செலுத்தப்பட்ட தொகையை திரும்ப தருவதாகவும் அடமானத்தை ரத்து செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனை நம்பி அருள்தாஸ் ஜெயக்கொடி இறந்த பின்னரும் மாதாந்திர தவணை தொகை ரூ.57 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே மாதம், மொத்த கடனையும் திரும்ப செலுத்துமாறு இறந்தவர் பெயருக்கு வங்கி நிர்வாகம் அறிவிப்பு அனுப்பியதைக் கண்டு அதிரிச்சியடைந்த அருள்தாஸ், நிதி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்ததாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் என். பாலு, வீ. லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் சேவை குறைபாட்டிற்காக மேற்கண்ட வங்கி இழப்பீடு தர வேண்டும். புகார்தாரரின் மனைவி இறந்த பின்பு வசூலிக்கப்பட்ட ரூ.57 ஆயிரத்தை புகார்தாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும் புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    எனவே நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய நிரந்தர உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதால் அதற்கு ஏற்ற புதிய ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

    பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே சர்வே முடிந்த பிறகு தான் பருவம் தவறிய மழை பெய்தது.

    எனவே தற்போதைய நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை தாசில்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் அலுவலகத்தின் எதிரில் உள்ள மர நிழலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
    • தாசில்தார் பெர்ஷியா ஆர்ப்பாட்டக்காரர்களிடம்நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பூதலூர் தாலுகா அலுவலகம் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழை, பருவம் தம்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்குரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும், சேத பாதிப்புகளை வேளாண் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தங்கமணி, ஜெயபால், சதீஷ்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி ஒன்றிய குழுவின் துரைராஜ், சம்சுதீன், செந்தில்குமார், பாரதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்ட த்தின் முடிவில் தங்களிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக் கொள்ள தாசில்தார் அலுவலகத்தில் இல்லாததால் அவர் வரும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்து தாலுகா அலுவலகத்தில் முன்பு உட்கார்ந்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர்.

    கடுமையான வெயிலில் கோஷங்களை எழுப்பி வந்த நிலையில் போலீசார் மற்றும் துணை தாசில்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் அலுவலகத்தின் எதிரில் உள்ள மர நிழலில் அமர்ந்து கோஷங்களை முழக்கினார்கள்.

    நேற்றுமுற்பகல் 12 மணி அளவில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியாஆர்ப்பாட்டக்காரர்களிடம்நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

    அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். கோரிக்கை ஆர்ப்பாட்டம் காத்திருப்பு போராட்டமாக மாறியதால் தாலுகா அலுவலக பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.
    • நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.

    குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.

    இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை டெல்டா மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்தார். அவர்களுடன் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உணவுத்துறை விவசாயத்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

    இவர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதங்களை பார்வையிட்டனர்.

    ஒவ்வொரு மாவட்டங்களாக சென்ற இவர்கள் விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் விவரங்களை கேட்டு அறிந்தனர். இதுபற்றி முதலமைச்சருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிற மாற்றம் மற்றும் முளைத்தை நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை சம்பா பயிருக்கும் குறைக்கவும் விதிமுறைகளில் தளர்வை அறிவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் சேத மதிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிாரிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

    அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

    * கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    * நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

    * நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

    * கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

    * பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு நேரடி நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோட்டூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்

    பி.ஆர்.பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே அரசு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நேரடியாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    இந்த ஆய்வின் போது விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது
    • சேவை குறைபாடு காரணமாக

    அரியலூர்:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர், வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.6.44 லட்சம் முன்பணமும், தவணை முறையில் ரூ.22 லட்சமும் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி 2014 நவம்பர் மாத இறுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடு மனோகரனுக்கு ஒப்படைக்க வேண்டும். ஆனால், வீட்டை கொடுக்காமல், மேலும் கூடுதலாக ரூ.2.60 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், கூடுதல் தொகை செலுத்த தவறினால் வாரம் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தனியார் கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.

    இதனால், அதிர்ச்சியடைந்த மனோகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, மனோகரன் இறந்து விட்டதால், அவரது மனைவி சுதா(45) வழக்கை தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, முழு தொகையை பெற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை விட கூடுதலாக பணம் கொடுத்தால் தான் வீட்டை தரமுடியும் என கட்டுமான நிறுவனம் வற்புறுத்தியது நியாயமற்ற வர்த்தக நடைமுறை.

    மேலும், வீடு வழங்க 8 ஆண்டுகள் காலதாமதம் செய்தது சேவை குறைபாடு. எனவே, தனியார் கட்டுமான நிறுவனம், 4 வாரத்துக்குள் சுதாவிடம் வீட்டையும், இழப்பீடாக ரூ.5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினர்.
    • பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது.

    கூடலூர்,

    கூடலூர் தாலுகா தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 2 டிவிஷன் பகுதியைச் சேர்ந்த சித்தராஜ் என்பவரது பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது. இதனால் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சித்தராஜ் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறையினர் உயிரிழந்த பசு மாட்டின் உரிமையாளர் சித்த ராஜிக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினர்.

    • கலெக்டர் நேரடி ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    • கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பில்லுர் ஊராட்சி அலுபிள்ளை தாங்கி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம் சம்பா நெல் சாகு படி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவில் மழை இல்லை.

    கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை பகுதியில் 2 நாட்களாக பெய்த மழையால் இங்கு பயிரிடப்பட்ட 300ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும், சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில், தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது.

    இது குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம், கடந்த டிசம்பர் 26-ந் தேதி புகார் தெரிவித்தோம். அவர் உடனடியாக நடவடிக்கை கள் எடுக்கவும் உத்தரவு விட்டார்.

    மேலும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அதனை போட்டோ எடுத்து சென்றனர். ஆனால் அதன் பின் அதிகாரிகள் நடவடிக்கை கள் எடுக்கவில்லை.

    எனவே இந்தப்பகுதியில் கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×