search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்"

    ஜேம்ஸ் ஆண்டர்சனால் 40 வயது வரை சிறப்பாக பந்து வீச முடியும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 36 வயதாகும் இவர் இன்னும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவிற்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்டுக்கள் அள்ளி இந்தியா சீர்குலைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இதுவரை 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ள ஆண்டர்சனால் 40 வயது வரை விளையாட முடியும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

    ஆண்டர்சன் 903 புள்ளிகள் பெற்று டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இதன்மூலம் 1980-ம் ஆண்டு இயன் போத்தமிற்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து ஆண்டர்சன் 900 புள்ளிகளை நடது சாதனைப் படைத்துள்ளார்.

    ஆண்டர்சன் குறித்து பெய்லிஸ் கூறுகையில் ‘‘உலகில் இல்ல பெரும்பாலான பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால் 30 வயதை தாண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை இழந்து விடுவார்கள். ஆனால் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெற்றுள்ளார். அவருடைய பந்து வீச்சை பார்க்கும் போது மிகமிக சிறந்தவராக தோன்றுகிறார்.



    இதுபோன்ற சூழ்நிலையில் ஆண்டர்சன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். லார்ட்ஸ் டெஸ்டின் போது இருந்து வானிலை இருக்குமென்றால், உலகின் எந்தவொரு பேட்ஸ்மேன்களுக்கும் சோதனைத்தான்.

    அவருடைய வயது பற்றி நான் சிந்திக்கவில்லை. அவருடைய உடலை பிட்ஆக வைத்துள்ளார். இப்படி பிட் ஆக உடலை பாதுகாத்து வந்தால் அவரால் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் விளையாட முடியும்’’  என்றார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா படுதோல்விக்கு வீரர்களின் மோசமான ஆட்டத்துடன் வானிலையும் முக்கிய காரணம் என்பதை அலச வேண்டியுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. ஆண்டர்சன், பிராட் ஆகியோரது பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்த போதிலும் சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இந்தியாவின் வெற்றியை பறிகொடுத்துவிட்டனர்.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி சில போட்டிகளில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கக் கூடிய மைதானம் ஆகும். இதனால் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரண்டு அணிகளும் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்ற பேச்சுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு மற்றொரு காரணம் இங்கிலாந்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருப்பதுதான்.



    இந்நிலையில்தான் போட்டி நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. 2-வது நாளும் மழையால் ஆட்டம் தடைபெற்றது. இந்தியா ஆல்அவுட் ஆன 35.2 ஓவருடன் 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்கேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 130 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.



    இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோரும் களம் இறங்கியதும், பேட்ஸ்மேன் சொதப்பலும்தான் தோல்விக்கு காரணம் என்று கடும் விமர்சனம் எழும்பியுள்ளது. உச்சக்கட்டமாக தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் பிசிசிஐ மோசமான ஆட்டம் குறித்து விளக்கம் கேட்க உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து யாரும் விமர்சனம் எழுப்பாத நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மீது பழிபோடுகிறார்கள். ஆனால், தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும்தானா? காரணம் என பார்க்க வேண்டும். லார்ட்ஸ் டெஸ்டில் வானிமை மையம் இந்தியாவிற்கு எதிராக தாண்டவம் ஆடியது. 2-வது நாள் மழை விட்டபிறகு ஆட்டம் தொடங்கியது. இந்தியா டாஸ் தோற்று பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.



    6 ஓவர்கள் போடுவதற்குள் மழை மீண்டும் குறுக்கீட்டது. இங்கிலாந்து ஆடுகளத்தில் மேகமூட்டமாக இருந்தாலோ, மழை விட்டுவிட்டு பெய்து ஆடுகளம் சற்று ஈரமாக இருந்தாலோ பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இந்தியா 107 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியா ஆல்அவுட் ஆன பிறகு ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இதுபோன்ற வானிலை இருக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல எந்தவொரு நாட்டு பேட்ஸ்மேன்களுக்கும் இதே கதிதான், குறிப்பாக எங்கள் நாட்டு பேட்ஸ்மேன்கள் கூட நாங்கள் பந்து வீசினால் திணறிப் போவர்கள்’’ என்றார்.

    அதுபோகட்டும் 3-வது நாள் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும்போது வெயில் சுல்லென்று அடித்தது. இதனால் 15 ஓவர்களுக்குப் பிறகு பந்து ஸ்விங் ஆகவில்லை. பந்து வேலை செய்யும்போது இந்தியா 131 ரன்னுக்கள் ஐந்துவிக்கெட்டுக்களை சாய்த்துவிட்டது. ரிவர்ஸ் ஸ்விங், சுழற்பந்து வீச்சுக்கு டர்ன் என எதுவுமே இல்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் எளிதாக ரன் சேர்த்தனர். 24 டெஸ்டில் 863 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவரால் முதல் சதத்தை பதிவு செய்ய முடிந்தது.

    3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும். 39 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது.



    4-வது நாள் காலையில் வானிலை மேகமூட்டமாக இருந்ததால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டிக்ளேர் செய்தார். இந்தியா பேட்டிங் செய்யும்போது அவ்வப்போது சிறுசிறு மழைத்துளிகள் விழுந்த வண்ணம் இருந்தது. உணவு இடைவேளையின்போது மழை பெய்தது. இதைப் பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து இந்தியாவை 130 ரன்களில் சுருட்டிவிட்டனர்.

    இதனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்கியது இந்தியா தோல்விக்கு காரணம் என்ற சொல்லிவிட இயலாது. வானிலை முக்கிய பங்கு வகித்தது. ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருந்திருக்கும்.

    இதனால் லார்ட்ஸ் டெஸ்டை வைத்து மட்டுமே ஒட்டுமொத்த இந்திய அணியை எடைபோடுவது சரியாகுமா.....
    லார்ட்ஸ் படுதோல்வியால் கோபம் அடைந்துள்ள ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் #ViratKohli
    லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக  கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின்தான் (29 ரன்கள், ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள்) அதிகபட்ச ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

    இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.



    இந்திய அணி மீது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், விராட் கோலி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், விராட் கோலி  கூறும் போது,:- “ சில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் நாம் கற்றுக்கொள்வோம்.  எங்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள், நாங்களும், நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #BCCI #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை.

    ஆனால் நேற்றுடன் முடிவடைந்த லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை.

    சொந்த மண்ணில் பல்வேறு அணிகளை வீழ்த்திய இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியபோது தொடரை 1-2 என இழந்தது. அப்போது அதிக போட்டிகள் காரணமாக பழு அதிகமானது. அதனால் விளையாட முடியவில்லை என்று கூறப்பட்டது.

    இதனால் இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து தொடரின்போது டி20, ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அங்குள்ள சூழ்நிலை பழக்கப்பட்டு விடும் என்று கூறியது.

    அதன்படியே பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதனால் இந்திய அணி நிர்வாகம் சாக்குபோக்கு சொல்ல முடியாது. இதற்கிடையே விராட் கோலி முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

    இந்திய அணி 3-வது போட்டியில் வருகிற சனிக்கிழமை (9-ந்தேதி) நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 3-வது போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும்.



    இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் கேள்விகள் கேட்க இருக்கிறது. மேலும், 2014-ம் ஆண்டு இந்திய அணி 1-3 என இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்ததால்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணை பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ் (பந்து வீச்சு), டிரெவோர் பென்னி (பீல்டிங் கோச்) ஆகியோரி அதிரடியாக நீக்கப்பட்டு ரவி சாஸ்திரி மானேஜராக நியமனம் செய்யப்பட்டார்.

    அதன்பின் சஞ்சங் பாங்கர் பேட்டிங் கோச்சராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தியா பேட்டிங் மற்றும் ஸ்லிப் கேட்ச் ஆகியவற்றில் பலவீனமாக இருப்பதால் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
    விராட் கோலி 2004-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியை பெற்ற பிறகு முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் கூட நடைபெறவில்லை. 170.3 ஓவர்களில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வரை இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது கிடையாது.



    கடுமையான பிட்ச் கொண்ட தென்ஆப்பிரிக்கா தொடரில் கூட இன்னிங்ஸ் தோல்வியை பெறவில்லை. இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.

    அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    முதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.
    2-வது இன்னிங்சில் விராட் கோலி 4-வது வீரராக களம் இறங்காததற்கு தொடக்க ஜோடி நீண்ட நேரம் நிற்காததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவ்வப்போது பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான் அவர் வெளியில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி பீல்டிங் செய்யவில்லை. ரகானேத்தான் கேப்டனாக செயல்பட்டார்.



    இங்கிலாந்து டிக்ளேர் செய்ததும் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரில் முரளி விஜயும், 7-வது ஒவரில் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுக்கள் வீழந்த பின்னர் விராட் கோலிதான் களம் இறங்குவார். ஆனால் ரகானே களம் இறங்கினார்.

    இதனால் விராட் கோலி முகுது வலி காரணமாகத்தான் களம் இறங்கியவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அவர் இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது கடைசி 37 நிமிடங்கள் பீல்டிங் செய்யவில்லை. இதனால் 37 நிமிடங்கள் கழித்துதான் களம் இறங்க முடியும்.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் 28 நிமிடத்திற்குள் ஆட்டமிழந்தனர். இன்னும் 9 நிமிடங்கள் இருந்ததால் அவரால் களம் இறங்க முடியவில்லை. இதனால் ரகானே களம் இறங்கியதாக கூறப்படுகிறது.
    முரளி விஜயை டக்அவுட்டாக்கி ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமைய ஆண்டர்சன் பெற்றுள்ளார். #JamesAnderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 99 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முரளி விஜய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.



    இந்த விக்கெட் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதன்மூலம் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் கொழும்பு (எஸ்எஸ்சி) மைதானத்தில் 166 விக்கெட்டும், காலே மைதானத்தில் 111 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது ஆண்டர்சன் லார்ட்ஸில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் 137 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    கிறிஸ் வோக்ஸ் 137 ரன்னுடன் களத்தில் இருந்தார். தற்போது வரை இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    விராட் கோலியை வீழ்த்தியதுடன், சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த கிறிஸ் வோக்ஸ், வானிலை கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தது. அடிக்கடி மழை விட்டுவிட்டு பொழிய, மைதானத்தை சுற்றி மேகமூட்டாக காணப்பட, வானிலையை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தார்கள்.

    இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட் பந்துகளை சமாளித்த விராட் கோலி கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிக்க செய்த கிறிஸ் வோக்ஸ், முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஏறக்குறைய போட்டியை இந்தியாவிடம் இருந்து பறித்து விட்டார்.

    இந்நிலையில் விராட் கோலியை வீழ்த்த வானிலை நன்றாக ஒத்துழைத்தது என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் வரிசையில் அவர்தான் ராஜா.



    2-வது நாள் ஆட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்தை நன்றாக ஸ்விங் ஆனது. விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதினேன். அதன்படி நடந்தது.

    ஒருமுறை அவர் களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின் அவுட்டாக்குவது கடினமாகிவிடும். ஆகவே, அவரை வீழ்த்தியன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன்’’ என்றார்.
    டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் அனில் கும்ப்ளே உடன் இணைந்தார் ஆண்டர்சன். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது.

    இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள்.



    இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றி, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

    இலங்கையின் முத்தையா முரளிதரன் 493 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னே 319 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் 140 போட்டிகளில் 546 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    இங்கிலாந்து - இந்தியா 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் லார்ட்ஸ் திருப்பி வழங்குகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாததால் முதல் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் வழங்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது.



    இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்டின்போது மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது. அதன்பின் தற்போதுதான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையினால் தடைபட்டு வருகிறது.
    ×