search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராதனை விழா"

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.
    • தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள் . இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.

    இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

    அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. விழாவில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது. அப்போது உலகெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.

    • ராகவேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக பூர்வ ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடை பெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி விருபாட்சி புரத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சாமியின் 352-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா புத்திகே மடாதிபதி பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சாமி அருளாசியுடன் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோ பூஜையும், ஸ்ரீ சத்யநாராயண சாமி பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து ராக வேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக பூர்வ ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று ராக வேந்திர சாமிக்கு மத்ய ஆராதனை வழிபாடு நடைபெற்றது இதையொட்டி 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும், ராகவேந்திர சாமியின் 1008 நாமாவளிக்கு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து இன்று (சனிக்கிழமை) ராகவேந்திர சாமிக்கு உத்ர ஆராதனையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமம் மற்றும் சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது. விழாவின் அனைத்து நாட்களிலும் காலை சுப்ரபாதமும், வேத பாராயணமும், சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் பல்லக்கு உற்சவம் மற்றும் வெள்ளி ரத உற்சவமும் நடக்கிறது. விழாவை யொட்டி பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, சீனிவாசன், கிருஷ்ணன், உடுப்பி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சியம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.‌
    • சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.

    விழாவையொட்டி கடந்த 12-ந் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருவாசகம் முற்றோதலும், இரவு 7 மணிக்கு பெண் அழைப்பு நிகழ்ச்சியில் வேலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகளு டன், பூரண கும்பங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மை உடனுறை சொக்க நாதர் சுந்தரேஸ்வர பெரு மான் திருமண கோலத்திலும் மற்றும் 63 நாயன்மார்களின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மீனாட்சியம்மை உடனுறை சொக்கநாத பெருமான் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமான் திருக் கல்யாண குழுவினர், மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    • சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது.
    • ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மறுநாள் (30-ந் தேதி) ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை மங்கள இசையுடன் தொடங்குகிறது.
    • புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    திருவையாறு:

    திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது.

    தியாகப்பிர்ம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து 10-ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    விழா பந்தலில் காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு ஆராதனை விழா பந்தலில் 500-க்கு மேற்பட்ட கர்நாட இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அதை தொடர்ந்து 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பாடுகிறார். இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • விழாவின் முக்கிய தினமான மத்ய ஆராதனையான நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பல்லக்கு உற்சவமும், வெள்ளி ரத உற்சவமும், 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி விருபாட்சிபுரம், உடுப்பி ஸ்ரீ புத்திகே மட கிளையில், ஸ்ரீ ராகவேந்திர சாமியின் 351-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா நடந்தது.

    புத்திகே மடாதிபதி பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சாமி தொடங்கி வைத்தார்.

    கடந்த 11-ந்தேதி கொடியேற்றமும், கோ பூஜையும் நடைபெற்றது. ஸ்ரீ சத்யநாராயண சாமி பூஜை, ஸ்ரீ ராகவேந்திர சாமிக்கு பூர்வ ஆராதனை விழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய தினமான மத்ய ஆராதனையான நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்லக்கு உற்சவமும், வெள்ளி ரத உற்சவமும், 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும் நடைபெற்றது. கனக பூஜையின் போது 1008 ராகவேந்திர சுவாமியின் நாமாவளிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

    இன்று உத்ர ஆராதனையும் நடந்தது. நாளை 15-ந் தேதி கணபதி ஹோமமும், ஸ்ரீ சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது.

    ஆராதனை நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், கிருஷ்ணன், வி.ராமமூர்த்தி, டி.வி.சீனிவாசன், உடுப்பி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி குமரி மந்த்ராலயத்திற்கு வருதல்
    • இரவு 7 மணிக்கு பல்லக்கு ரதோற்சவம் சேவை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் ராகவேந்திரா சுவாமிகளின் 351-வது ஆராதனை விழா நாளை (12-ந்தேதி) முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, கோமாதா பூஜை, மஹா அபிஷேகம், 10 மணியளவில் ஸகலப்ரதாதா, குருஸ்தோத் ரம் பாராயணம் மஹா மங்கள ஆரத்தி நடக்கிறது. மாலையில் பரத நாட்டியம், பக்தி இன்னிசை பல்லக்கு மற்றும் ரதோற்சவம் சேவை, இரவு 7.15 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.

    2-ம் நாள் காலை கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, காலை 6.30 மணிக்கு பால் குடம் ஏந்தி வருதல், சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி குமரி மந்த்ராலயத்திற்கு வருதல், பின்னர் கோமாதா பூஜை நடக்கிறது. காலை 10 மணிக்கு சங்கீத குயில் பேபி எம்.சன்மிதா வழங்கும் சங்கீத இசை சாரல், மகா மங்கள ஆரத்தி, பகல் 12 மணிக்கு அலங்கார பங்க்தி, மாலை 5 மணிக்கு சீர்காழி டி.எம்.எஸ்.குரல் பக்தி மெல்லிசை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பல்லக்கு ரதோற்சவம் சேவை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.

    3-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நிர்மால்ய பூஜை, கோமாதா பூஜை, மகா அபிஷேகம், காலை 10 மணிக்கு அனிரூத் வழங்கும் பக்தி இன்னிசை, மாலை 4 மணிக்கு அலங்கார ஊர்தியுடன் சிங்காரி மேளம் முழங்க குமரி மந்த்ராலயத்தி லிருந்து பல்லக்கு பவனி சுசீந்திரம் ஆலயம் வலம் வந்து மீண்டும் குமரி மந்த்ராலயம் கொண்டு செல்லப்படுகிறது. இரவு 6.30 மணிக்கு ரதோற்சவம் சேவை, தியானம் ஸ்வஸ்தி வாசனம், இரவு 7.25 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.

    இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதி மக்கள் 3 நாட்கள் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 நாள் 3 வேளை அன்னதானத்தில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குமரி மந்த்ராலயத்தின் சார்பில் மணிகண்டன், மந்த் ராலய உறுப்பினர்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×