search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில்63 நாயன்மார்களின் ஆராதனை விழா
    X

    மீனாட்சியம்மை உடனுறை சொக்கநாத பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்த போது எடுத்த படம்.

    பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில்63 நாயன்மார்களின் ஆராதனை விழா

    • பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சியம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.‌
    • சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.

    விழாவையொட்டி கடந்த 12-ந் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருவாசகம் முற்றோதலும், இரவு 7 மணிக்கு பெண் அழைப்பு நிகழ்ச்சியில் வேலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகளு டன், பூரண கும்பங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மை உடனுறை சொக்க நாதர் சுந்தரேஸ்வர பெரு மான் திருமண கோலத்திலும் மற்றும் 63 நாயன்மார்களின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மீனாட்சியம்மை உடனுறை சொக்கநாத பெருமான் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமான் திருக் கல்யாண குழுவினர், மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×