search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர்கள்"

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
    • விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தனி நபர்களும் 50 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
    • ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா நேற்று தொடங்கியது.

    இதில் நேற்று மாலையில் ஒரே நேரத்தில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக கோவில் வளாகத்தில் மகா நந்திகேசுவரர் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடையில் திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 குழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    தவிர, தனி நபர்களும் 50 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

    சிறுமிகள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலைஞருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டது.

    இதன்படி வரிசையாக நிறுத்தப்பட்டு, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    தவிர, பாட்டு, மிருதங்கம், தவில், வீணை உள்பட சுமார் 50 இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இசைத்தனர்.

    சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 3 பாடல்கள் பாடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியைக் காண ஆயிர த்துக்கும் அதிகமானோர் திரண்டு ரசித்தனர்.

    இதேபோல, இக்கோயிலில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவில் ஆயிரம் பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

    ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இரண்டாவது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

    • 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர் பி.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர், 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு,மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராசன், நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி எஸ்.டி.முத்துவேல் (மேற்கு), சிவா (கிழக்கு), நீடாமங்கலம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.கே.முருகானந்தம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
    • முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- –

    மாவட்டக் கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்ட த்திலும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர்குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

    ஆகவே விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவை க்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகா ட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாவட்டக் கலை விருதுகள் 18 வயதும் அதற்குற்பட்ட கலைஞர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை வளர்மணி" விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலைச் சுடர்மணி" விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை நன்மணி" விருதும், 66 வயதிற்குமேற்பட்ட கலைஞர்களுக்கு "கலை முதுமணி" விருது வழங்கப்படவுள்ளது.

    எனவே, விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றி தழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்ய க்கூடாது. இம்மா வட்ட விருது பெறத் தகுதியவாய்ந்த கலைஞர்களிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்ப்பட்டி, தஞ்சாவூர் – என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    முடிவில் பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    பெரிய கோயில் சதய விழாக்குழுத்தலைவர் .து செல்வம் தலைமை தாங்கினார்.

    துரை.கோவிந்தராஜ் (அறநிலையத்துறை பணி ஓய்வு) வரவேற்றார்.

    தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு தென் மாநிலங்கள் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஏ.பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரதநாட்டிய கலைஞர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்து ழைப்போடு செய்யப்பட்டிருந்தது.

    முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.

    • 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளார்கள்.
    • கலந்து கொண்ட நடனக்கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி தொடக்க விழா நடை பெற்றது.

    பெரிய கோயில் சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

    துரை.கோவிந்த ராஜ் (அறநிலைத்துறை பணி ஓய்வு) வரவேற்பு ரையாற்றினார். தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்துழைப்போடு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன் செய்திருந்தார்.

    நடனக்கு ழுவின் குரு தனவெட்சுமி நன்றி கூறினார்.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள நடன நிகழ்ச்சியில 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளார்கள்.

    இன்றைய நிகழ்ச்சியில் மாநகர மேயர், சதயவிழாக்குழுத்தலைவர், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தென்மா நிலங்கள் பொது செயலர் சந்திரபோஸ் கலந்து கொண்டு நடனக்கலை ஞர்களுக்குச் சான்றிதழ் வழங்க உள்ளனர்.

    • 22 அணிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
    • ஏராளமான பொதுமக்கள் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியின்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு ருத்ர நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலைப்பண்பாட்டுத் துறையுடன் இணைந்து மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி நிகழ்த்திய இவ்விழாவுக்கு, நாட்டியப்பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    விழாவில், கல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 22 அணிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்,

    இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், வணிகர் சங்க பிரமுகர் ஏடிஎஸ்.தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ரியாத், ஜம்புகென்னடி, சூர்யா, நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பரத நாட்டியக் கலைஞர்களை பாராட்டினர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    • ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது.

    அனுப்பர்பாளையம்:

    தமிழா் பண்பாடு கலாசாரப் பேரவை சாா்பில் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் கலாசாரப் பெரு விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கலைஞா்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது.
    • 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவிமருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது

    1000-ம் ஆண்டுக்குமேல் பழமையான கோவிலாகும். இந்த கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தியாகராஜர் சன்னதி எதிரில் 'திருத்துறைப்பூண்டியில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர் ஜோதி ஊர்வலம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதி ஊர்வலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்னண் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியர்கள், தீயணைப்பு துறை, நகராட்சி ஊழியர்கள்,ரோட்டரி சங்கத்தினர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம் சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் கலுசிவலிங்கம், மேலாளர் பாபு, பொறியாளர் தங்கப்பாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்ரியா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயதீபா, சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.

    • சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது-பொற்கிழி சிவகங்ககை லெக்டர் வழங்கினார்.
    • 5 வகை பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் 5 வகை

    பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்ட 15 கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பங்கேற்று பொன்னாடை அணிவித்து, சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சிலம்பம் போட்டியில் பங்கேற்ற முனீஸ், சுவினாஸ்ரீ மற்றும் விசை இசை போட்டியில் கலந்து கொண்ட லட்சுமிமித்ரன் ஆகியோருக்கு கலைஇளமணி விருதும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

    சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட பெருமாள், ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாரிக்கண்ணு, மரக்கால் ஆட்டத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் ஆகியோருக்கு கலைவளர்மணி விருதும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும், வழங்கப்பட்டுள்ளன.

    கிராமிய பாடகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகராசு, சிற்ப கலையில் கலந்து கொண்ட செல்வராஜ், தப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாக்கியராஜ் ஆகியோருக்கு கலைச்சுடர்மணி விருதும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

    வீதி நாடகம் போட்டியில் பங்கேற்ற தங்கவேல், கொம்பு இசையில் கலந்து கொண்ட வேலு, தவில் இசையில் கலந்து கொண்ட சந்திரசேகரன் ஆகியோருக்கு கலைநன்மணி விருதும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

    பம்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டி, நாதஸ்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போஸ், நாடகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி ஆகியோருக்கு கலைமுதுமணி விருதும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் சார்பில் விருது மற்றும் பொற்கிழி பெற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து இந்த கலைகளை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக் கொடுத்து புதிய கலைஞர்களை உருவாக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலைபண்பா ட்டுத்துறை மைய உதவி இயக்குநர் செந்தில்குமார், தேர்வுக்குழு உறுப்பினர் நாகராஜபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×