search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharathanatyam"

    • மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கம நிகழ்வு நடந்தது.
    • புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம் ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன் கோவில் முத்துராஜம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் என்ற நிகழ்வு நடந்தது.

    இதில் நேரடியாக 300 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் காணொளி காட்சி (ஆன்லைன்) வாயிலாக 710 வெளி மாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் என ஒரே நேரத்தில் 10 10 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நேரடியாக 300 நடன கலைஞர்கள் புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம், தில்லானா ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர். ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காடு நிறுவனத்தலைவர் ஜேக்கப் ஞான செல்வம், மேலாளர் ஸ்ரீனிவாசன், சி.இ.ஓ. எஸ் தர், பிரியா உள்ளிட்டோர் உலக சாதனை என அங்கிகரித்து சீர்காழி சங்கமத்தில் பங்கேற்ற பரத கலைஞர்களுக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் பதங்கங்களை வழங்கி பரத கலைஞர்களை பாராட்டினர்.

    இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி தாளாளர் சிவசங்கர், நாடி.ஜோதிடர் சிவசாமி, சதாசிவம்,கலைமாமணி தருமை சிவா, பரதகலை ஞர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    முடிவில் பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    பெரிய கோயில் சதய விழாக்குழுத்தலைவர் .து செல்வம் தலைமை தாங்கினார்.

    துரை.கோவிந்தராஜ் (அறநிலையத்துறை பணி ஓய்வு) வரவேற்றார்.

    தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு தென் மாநிலங்கள் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஏ.பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரதநாட்டிய கலைஞர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்து ழைப்போடு செய்யப்பட்டிருந்தது.

    முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.

    • பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.
    • இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய பரதநாட்டிய திருவிழா நடைபெற்றது.

    விழாவில் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழாக்குழு அலுவலர் ரவீந்திரக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் தனிநபர் பரதநாட்டியம், குழுக்கள் பரதநாட்டியம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரதநாட்டிய விழா நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் கர்நாடக தேசிய பரதநாட்டிய அகடாமி தலைவி அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பரதநாட்டிய கலைஞர் சுவாதி பரத்வாஜ் செய்திருந்தார்.

    பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் மூலம் மிகவும் பிரபலமான ருக்மிணியின் பரத நாட்டியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. #Rukmini
    பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் நடித்தவர் ருக்மிணி. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

    லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' என்ற அரங்கில் உலகின் தலைசிறந்த டான்சர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணி அங்கே நடனமாடினார்.



    பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாக கொரியோகிராபி செய்து நடனமாடியிருந்தார். ருக்மிணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள். சென்ற வருடம் சிறந்த நடனத்தை கொடுத்ததற்காக நெதர்லாந்தின் கவுரவ குடியுரிமையும் கொடுக்கப்போகிறார்கள்.

    ×