search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    300 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
    X

    பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

    300 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

    • மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கம நிகழ்வு நடந்தது.
    • புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம் ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன் கோவில் முத்துராஜம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் என்ற நிகழ்வு நடந்தது.

    இதில் நேரடியாக 300 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் காணொளி காட்சி (ஆன்லைன்) வாயிலாக 710 வெளி மாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் என ஒரே நேரத்தில் 10 10 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நேரடியாக 300 நடன கலைஞர்கள் புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம், தில்லானா ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர். ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காடு நிறுவனத்தலைவர் ஜேக்கப் ஞான செல்வம், மேலாளர் ஸ்ரீனிவாசன், சி.இ.ஓ. எஸ் தர், பிரியா உள்ளிட்டோர் உலக சாதனை என அங்கிகரித்து சீர்காழி சங்கமத்தில் பங்கேற்ற பரத கலைஞர்களுக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் பதங்கங்களை வழங்கி பரத கலைஞர்களை பாராட்டினர்.

    இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி தாளாளர் சிவசங்கர், நாடி.ஜோதிடர் சிவசாமி, சதாசிவம்,கலைமாமணி தருமை சிவா, பரதகலை ஞர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×