search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய பரதநாட்டிய திருவிழா
    X

    தென்னக பண்பாட்டு மையத்தில் பரதநாட்டியம் நடைபெற்றது.

    தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய பரதநாட்டிய திருவிழா

    • பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.
    • இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய பரதநாட்டிய திருவிழா நடைபெற்றது.

    விழாவில் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழாக்குழு அலுவலர் ரவீந்திரக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் தனிநபர் பரதநாட்டியம், குழுக்கள் பரதநாட்டியம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரதநாட்டிய விழா நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் கர்நாடக தேசிய பரதநாட்டிய அகடாமி தலைவி அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பரதநாட்டிய கலைஞர் சுவாதி பரத்வாஜ் செய்திருந்தார்.

    Next Story
    ×