search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலாசார  விழாவில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பரிசு
    X

    கோப்புபடம். 

    கலாசார விழாவில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பரிசு

    • ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது.

    அனுப்பர்பாளையம்:

    தமிழா் பண்பாடு கலாசாரப் பேரவை சாா்பில் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் கலாசாரப் பெரு விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கலைஞா்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×