search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயல், இசை நாடக கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் கலெக்டர் தகவல்
    X

    இயல், இசை நாடக கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் கலெக்டர் தகவல்

    • விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
    • முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- –

    மாவட்டக் கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்ட த்திலும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர்குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

    ஆகவே விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவை க்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகா ட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாவட்டக் கலை விருதுகள் 18 வயதும் அதற்குற்பட்ட கலைஞர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை வளர்மணி" விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலைச் சுடர்மணி" விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை நன்மணி" விருதும், 66 வயதிற்குமேற்பட்ட கலைஞர்களுக்கு "கலை முதுமணி" விருது வழங்கப்படவுள்ளது.

    எனவே, விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றி தழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்ய க்கூடாது. இம்மா வட்ட விருது பெறத் தகுதியவாய்ந்த கலைஞர்களிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்ப்பட்டி, தஞ்சாவூர் – என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×