search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Torch procession"

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில் 43 ஆம் ஆண்டாக சக்தி மாலை அணிவது கஞ்சி கலச ஊர்வலம் அன்னதானம் தீச்சட்டி ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    குடியாத்தம், பேர்ணாம்பட்டு தாலுகாக்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து மேல் மருவத்தூருக்கு இருமுடி செலுத்தி வருகின்றனர்.

    நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் நேற்று கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தை முன்னிட்டு முத்தியாலம்மன் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து 501 பெண்கள் கஞ்சி கலசம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கள்ளூர் காந்தி நகரில் உள்ள மன்றத்தை அடைந்தனர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலையில் முத்தாலம்மன் கோவிலிலிருந்து 251 பெண்கள் தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மன்றத்தை அடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் கே.எம்.எஸ்.ஜெயவேல், மன்ற உறுப்பினர்கள் ஜீவா, பாபு, பாலாஜி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜி.சரவணன் உள்ளிட்ட மன்றத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர் ஜோதி ஊர்வலம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதி ஊர்வலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்னண் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியர்கள், தீயணைப்பு துறை, நகராட்சி ஊழியர்கள்,ரோட்டரி சங்கத்தினர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம் சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் கலுசிவலிங்கம், மேலாளர் பாபு, பொறியாளர் தங்கப்பாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்ரியா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயதீபா, சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.

    ×