search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் சடலம்"

    • 2 நாட்களாக வாலிபரின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • வாலிபர் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைபட்டியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் சுரேஷ்குமார் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ரத்தினம் தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். சுரேஷ் குமார் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் சந்தேகம் அடைந்து தாலுகா போலீ சாருக்கு புகார் அளித்தனர்.

    இதனையடுத்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது சுரேஷ்குமார் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எவ்வாறு இறந்தார், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பஸ்நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார்.
    • நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் சோனை. இவருக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிலையத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்களை தெருநாய்கள் கடித்து குதறி இருந்தது தெரிய வந்தது.

    நோய்வாய் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர் மயங்கி விழுந்த நிலையில் தெருநாய்கள் கடித்திருக்க லாம் என்றும், பஸ்க்காக காத்திருந்தபோது தெரு நாய்கள் கடித்திரு க்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொது மக்கள் பாதிக்க ப்பட்டு வரும் நிலையில் நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திரு ப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து ள்ளது.

    இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் மாநிறம், பிஸ்கட் கலர் கருப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் வெள்ளை கலர் வேஷ்டியும் அணிந்திருந்தார்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் மதுரை வடக்காவணி மூலவீதி பகுதியில் உடல் நலம் சரியில்லாமல் படுத்து கிடந்த வரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இறந்தவர் பெயர் வெங்கட்ராமன் (வயது 75), இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து திலதர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போல் மதுரை செனாய் நகர் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக மதிச்சியம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் ரோஸ் கலர் அரக்கை சட்டையும், ப்ளூ கருப்பு கலர் கட்டப்பட்ட கைலியும் அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின் இருக்கையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • காரில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் கனகதாரா நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த். பங்குச்சந்தை வர்த்தகம் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று மாலை தியேட்டரில் சினிமா படம் பார்ப்பதற்காக அரவிந்த் தனது மனைவியுடன் காரில் ஏறி புறப்பட தயாரானார். அப்போது காரின் கதவை திறந்தபோது பின் இருக்கையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் காருக்குள் எப்படி வந்தார்.

    இறந்தது எப்படி என்பது மர்மமாக உள்ளது. அரவிந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரை அங்கு நிறுத்தி உள்ளார். அப்போது அவர் காரின் கதவை லாக் செய்ய வில்லை என்று தெரிகிறது. எனவே காருக்குள் பிணமாக கிடந்தவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பே இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கீழே ஆண் சடலம் மிதந்தது.
    • சடலத்தின் முகங்கள் சிதைக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சரியாக வயது கூட கணிக்க முடியாத நிலையில் கண்டெடு க்கப்பட்டுள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை சேலம் செல்லும் பாலம் கீழே ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரை வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டு பார்த்தபோது சடலம் ஆற்றில் அடித்து வரப்பட்டது தெரியவந்தது.

    சடலத்தின் முகங்கள் சிதைக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சரியாக வயது கூட கணிக்க முடியாத நிலையில் கண்டெடு க்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் யார்? எந்த பகுதியைச் சார்ந்தவர்? இது கொலையா? தற்கொலையா? என போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் சடலம் மீதந்து வந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

    • சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
    • நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் மனோகரன்(வயது50). இவர் நேற்று காலை வழக்கம் போல், கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்டார். சவுக்கு தோப்பு அருகே, அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.

    அடையாளம் தெரியாத காரணத்தால், நிரவி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை பற்றி அடையாளம் யாருக்கேனும் தெரிந்தால், நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    ×