search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர சட்டம்"

    • எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.
    • மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

    எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது. இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என எம்.பி. ராகவ் சாதா அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவசர சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்க போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
    • ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறிதது கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார். எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.

    இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதை மறைமுகமாக தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது. நேரடியாகவோ அல்லது கவர்னர்கள் மூலமாகவோ இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் இதை எதிர்த்துள்ளது. தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
    • இந்த அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்றும், ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் கூறியது. டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது எனவும் தெரிவித்தது.

    இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதாவது, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், நிரந்தரமாக தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். பாராளுமன்றத்தில் அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே, மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட்டது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றனர்.

    இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அவசரச் சட்டம் மூலம் இன்று டெல்லியில் சர்வாதிகாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    • சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வருகிற அக்டோபர் 17-ல் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்பட உள்ளது.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, கண்காணிப்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளட்ட பணிகளை ஆணையம் கையாளும்.

    மேலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறைத்தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பாக விளம்பரம் செய்தால் அந்த நிறுவனங்களை நடத்தும் நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். 

    • வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது
    • சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என தகவல்

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய சட்டம் இயற்றவேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், வரும் 17ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    முத்தலாக் பிரச்சனைக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. #BJP #ShivSena
    மும்பை:

    முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சிவசேனா, முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்டவும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதற்காக முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதை சிவசேனா வரவேற்கிறது. ஆனால், மத்திய அரசு இந்த ஒரு நடவடிக்கையுடன் நின்று விடக்கூடாது. இதே வேகத்தை அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதிலும் காட்ட வேண்டும். இதற்காகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 

    என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ×