search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பு"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது.
    • ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழைவெளுத்து வாங்கியது.

    கன மழை பெய்யும் போது புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சமத்துவபெரியார்நகர், அன்னை அஞ்சுகம் நகர், சிட்லபாக்கம், திருமலை நகர் மற்றும் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மழை வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரம் மாநகராட்சி தீவிர நடவடிக்ைக எடுத்து உள்ளது.

    மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக தொலை பேசி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பின்றியும், போக்கு வரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 785 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 62.75 கி.மீ நீளமுள்ள வரவு கால்வாய்கள் மற்றும் 6930 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல மழைநீர் வடிகால்கள், வரவு கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுரங்கப்பா தைகள் மற்றும் கடந்த காலங்க ளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் 6 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் 80 எண்ணிக்கையிலான டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள 21 ஜே.சி.பி. எயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாம்பரம் மாநகராட்சி யுடன் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பிற சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை மேற்கொள் ளவும் பணியா ளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்புகொள்ள கட்ட ணமில்லா தொலைப்பேசி எண் 18004254355, 18004251600, வாட்ஸ்அப் எண். 8438353355 மற்றும் துணை ஆணையாளர் 9677257153 உதவி ஆணை யாளர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் இரைக்கும் எந்திரங்கள், அதற்கான பைப்புகள்,மரம் அறுக்கும் எந்திரம், டார்ச் லைட், குடை கள் புதிய மண்வெட்டிகள், மீட்பு பணிக்காக கயிறுகள் மழையில் பயன்படுத்த ஊழியர்களுக்கான உடைகள், முதலுதவி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மண்டல தலைவர் ஜெய் பிரதீப் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஊராட்சியை ஒரே மாவட்டத்தில் இணைக்க கோரி 6 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர்
    • பொன்னமராவதி அருகே கிராமசபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ரெகுநாதபட்டி கிராமத்தில் ஊராட்சி துணை தலைவர் ரெசினா பேகம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமிநாதன் பங்கேற்றார்.

    கூட்டத்தில் ரெகுநாதம்பட்டி, சீகம்பட்டி, வைரம்பட்டி, கோபால்பட்டி விடத்தலாம்பட்டி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது வரை வருவாய் கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சியிலும் ,பாராளுமன்றம்,சட்டமன்ற தொகுதி சிவகங்கை மாவட்டத்திலும்,உள்ளாட்சி பிரதிநிதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இருப்பதால் 6 ஊர் கிராம மக்களும் ஏதோ ஒரு மாவட்டத்தில் தங்களது ஊராட்சியை முழுமையாக இணைக்க கோரி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    காவல் நிலையம், மின் வாரியம் சிவகங்கை மாவட்டத்திலும் இருப்பதால் சாலை வசதி, சாலைப்போக்குவரத்து பேருந்து வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலோ அல்லது சிவகங்கை மாவட்டத்திலோ ஏதோ ஒரு மாவட்டத்தில் அரசு விரைவில் இணைக்க வேண்டும். என கோரிக்கை வைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை அதனை ஊராட்சி செயலாளர் சரவணன் வாசித்தார். இதில் நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலாஜி, பள்ளி தலைமைஆசிரியர் நாகலட்சுமி, ரேசன் கடை விற்பனையாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், நர்ஸ் கலைச்செல்வி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி சப் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் இருந்தனர்.

    • திருப்பத்தூரில் நாளை சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாரும், அமைச்சருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூரில் நாளை (3-ந் தேதி) சிவகங்கை மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான பணிகள், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறது.
    • உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினரு மான காதர் பாட்சா முத்து ராமலிங்கம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்பேரில், மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாளை (நவ.1) ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மதியம் 2 மணிக்கு நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப் பிற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கான நேர்காணல் நடக்கிறது. எனது தலைமை யில் (காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்) நடக்கும் இந்த நேர்காணலில் ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்பு களில் ஏற்கெனவே பணியாற்றியிருந்தால், அதுதொடர்பான உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூரில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் சாலை ஓரங்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளை அறிவிப்பு கிடைக்கப்பட்ட 3 தினங்களுக்குள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதுடன் தாங்கள் வைத்துள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 116-வது தேவர் ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு செல்லும் வாகனங்கள் கீழ்கண்டவாறு உள்ள அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி சேத்தூர், முறம்பு, ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், அழகாபுரி, அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    தோட்டிலோவன்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    பந்தல்குடி, அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    மல்லாங்கிணரில் இருந்து செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை (கல்குறிச்சி), கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்

    நரிக்குடி, பார்த்திப்ப னூர், அபிராமம், பசும் பொன்ஆகிய வழித்தடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்

    செங்கமல நாச்சியார்புரம் -கங்காகுளம், இரட்டை பாலம்-சிவகாசி பஸ் நிலையம், விளாம்பட்டி ஜங்சன்- எஸ்.எச்.என்.வி. பள்ளி, மீனாட்சிபுரம்- முஷ்டகுறிச்சி, மந்திரி ஓடை-முடுக்கன்குளம், காரியாபட்டி- புதுப்பட்டி, கல்குறிச்சி ஜங்சன்-கிருஷ்ணாபுரம், ராமலிங்கா மில்-குலசேகர நல்லூர், தமிழ்பாடி ஜங்சன்-ராமசா மிபட்டி, திருச்சுழி-மயிலி ஜங்சன், திருச்சுழி-பச்சேரி ஜங்சன், பூமாலைபட்டி ஜங்சன்-முத்துராமலிங்க புரம்புதூர், வீரசோழன் -மீனாகுளம், வீரசோழன்- கீழசெம்பூர் ஜங்சன், தேளி-தேளி (எல்லை), ரெட்டைகுளம்-ஆலாந்தூர், செங்குளம்-கருவக்குடி, கள்ளக்குறிச்சி-பூலாங்கால், ஒத்தக்கடை-எம்.ரெட்டியப்பட்டி, கட்டனூர்-பொட்டப் பச்சேரி, கட்டனூர்-கருவக் குடி ஜங்சன் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட வழி தடங்கள் ஆகும்.

    மேலும் தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். நடை பயணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

    வாகனங்களில் வெளிபுறத்தில் நின்றோ, நடனமாடி கொண்டோ மற்றும் மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ செல்லக்கூடாது.

    காவல்துறையினரின் முழுமையான தணிக்கைக்கு பின்பு வாகன அனுமதி சீட்டு பெற்று வாகனத்தில் முன்புறம் மற்றும் பின்புறம் ஒட்டி செல்ல வேண்டும். சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின் போதும், காவல்துறை யினரால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    மது அருந்திவிட்டு வாக னங்களில் செல்லக்கூடாது. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி, மது பானங்கள், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கல், கத்தி, கம்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். வாகனங்களில் சென்று வரும் போது தேவையற்ற முறையில் பிற மதத்தினரையோ, சமுதாயத்தினரையோ புண்படுத்தும் வகையில் பேசுவதோ, கோஷங்கள் எழுப்புவதோ கூடாது.

    வாகனங்களில் உள்ள மேற்கூரை அகற்றப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாகவோ, ஆபத்தை விளைவிக்கும் வகையில் முந்தி செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் சம்பந்தப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வாடகைக்கு குடிவருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்
    • அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தல்

    வேலாயு தம்பாளையம்,

    அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில், கொள்ளை, வழிபறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.எனவே கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு ட்பட்ட நொய்யல், குந்தா ணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலிய மங்கலம் ,புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பா ளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர் ,தோட்டக்குறிச்சி, வேலா யுதம்பாளையம், தளவாபா ளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று, அதன் நகல்களை கொண்டு வந்து வேலா யுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். போலீசார் ஒப்புதலுக்கு பிறகே, அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்ப வர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடி யாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அரியலூரில் கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு

    அரியலூர்,

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை மூலதனக் கடனை பெற்று பயன்பெறலாம்.கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை , நிலவுடைமை தொடர்பாக 10 (1)}கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகிய ஆவணங்களுடன் கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அவரவர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தினைப் பெற்று ரூ.100 பங்குத்தொகை, ரூ.10 நுழைவுக்கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராகச் சேர்ந்து மேற்கண்டுள்ள ஆவணங்களுடன் நடைமுறை மூலதனக் கடன் மனுவினைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது
    • அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வருகிற 28-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளாகும். இதேபோல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தியடிகள் பிறந்தநாள். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், ஓட்டல் பார்கள் வருகிற 28-ந்தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறையாகும். அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும் என கலெக்டர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும் என்று அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்
    • 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது,அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 தாலுகா மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்க ளாகவே மருந்து கடைக ளுக்கு சென்று மாத்திரை களை வாங்கி சாப்பிடக்கூ டாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் மற்றும் அரசு மருத்து வமனைகளுக்கு சென்று டாக்டரை அணுகி தேவை யான சிகிச்சை பெற்று க்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி, ஏர் கூலர், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலர வைத்து பிறகு தண்ணீரை நிரப்பி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிர ட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்ப டுத்தி, அவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் பாது காத்து கொள்ள வேண்டும்.தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். 

    • போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    வருகிற 11-ந்தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது.

    வாடகை, திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாக னங்கள், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த வாக னங்களில் வருபவர்கள் உரிய ஆவணங்களை 8-ந்தேதிக்கு முன்னர் உட்கோட்ட அலுவல கங்களில் அளித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக் கப்படமாட்டாது. பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்களும் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாக னத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கவோ, ஒலி பெருக்கி கள் பொருத்தியோ செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

    ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக் கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணம் செல்லலாம்.

    சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சி கள் கொண்டாடவும், ஒலி பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    பரமக்குடி நினைவி டத்தில் செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணி வகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.பரமக்குடி நினைவி டத்தில் 11-ந்தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். கட்சிகள், அமைப்புகள் 8-ந்தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×