search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complaint Number"

    • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.
    • தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலை பேசி எண் 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.

    விரைவாகச் செயல்பட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னையில் மழை தொடர்பான புகார்களை 1913, 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207 ஆகிய எண்களிலும் 94454 72075 என்ற கைப்பேசி எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது.
    • ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழைவெளுத்து வாங்கியது.

    கன மழை பெய்யும் போது புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சமத்துவபெரியார்நகர், அன்னை அஞ்சுகம் நகர், சிட்லபாக்கம், திருமலை நகர் மற்றும் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மழை வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரம் மாநகராட்சி தீவிர நடவடிக்ைக எடுத்து உள்ளது.

    மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக தொலை பேசி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பின்றியும், போக்கு வரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 785 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 62.75 கி.மீ நீளமுள்ள வரவு கால்வாய்கள் மற்றும் 6930 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல மழைநீர் வடிகால்கள், வரவு கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுரங்கப்பா தைகள் மற்றும் கடந்த காலங்க ளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் 6 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் 80 எண்ணிக்கையிலான டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள 21 ஜே.சி.பி. எயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாம்பரம் மாநகராட்சி யுடன் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பிற சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை மேற்கொள் ளவும் பணியா ளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்புகொள்ள கட்ட ணமில்லா தொலைப்பேசி எண் 18004254355, 18004251600, வாட்ஸ்அப் எண். 8438353355 மற்றும் துணை ஆணையாளர் 9677257153 உதவி ஆணை யாளர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் இரைக்கும் எந்திரங்கள், அதற்கான பைப்புகள்,மரம் அறுக்கும் எந்திரம், டார்ச் லைட், குடை கள் புதிய மண்வெட்டிகள், மீட்பு பணிக்காக கயிறுகள் மழையில் பயன்படுத்த ஊழியர்களுக்கான உடைகள், முதலுதவி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மண்டல தலைவர் ஜெய் பிரதீப் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 9700041114 என்ற வாட்ஸ்-அப் புகார் எண் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் சுத்தமாக செயல்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக கிறிஸ்துராஜ் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க 9700041114 என்ற வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்தியாக தெரிவிக்க அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வேலை செய்யாத மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் சுத்தமாக செயல்படவில்லை. எனவே உடனடியாக வாட்ஸ்அப் எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட புதிய கலெக்டர் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்காலிகமாக தடைபட்டுள்ளது. ஓரிரு நாளில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் மாவட்ட கலெக்டர் அலுவலக எண்ணில் தொடர்ச்சியாக பொது மக்கள் புகார் அளிக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.

    • கடந்த 2 தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடிகிறது.
    • வட மாநிலத்தவர்களுக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    நீலாம்பூர்,

    தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின.

    அந்த வீடியோக்கள் போலி என அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடிகிறது. வட மாநிலத்த வர்களுக்கு பாது காப்பில்லை என்ற கோணத்தில் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதாக தகவல்களும் வெளி யாகியது.

    இதை யடுத்து கோவை போலீசார் வட மாநில த்தவர்களுக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியான கருமத்த ம்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கி யராஜ் மற்றும் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் அரசூரில் உள்ள மில் ஒன்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    அப்போது வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ, அச்சப்படும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்தாலோ உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும். அதற்கான பிரத்தியேக எண்களும் அறிவிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். 24 மணி நேரமும் நீங்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். அதற்கு ஏற்ற வகையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதிகள், வேலை செய்யும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×