search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகைக்கு குடிவருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்
    X

    வாடகைக்கு குடிவருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்

    • வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வாடகைக்கு குடிவருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்
    • அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தல்

    வேலாயு தம்பாளையம்,

    அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில், கொள்ளை, வழிபறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.எனவே கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு ட்பட்ட நொய்யல், குந்தா ணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலிய மங்கலம் ,புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பா ளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர் ,தோட்டக்குறிச்சி, வேலா யுதம்பாளையம், தளவாபா ளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று, அதன் நகல்களை கொண்டு வந்து வேலா யுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். போலீசார் ஒப்புதலுக்கு பிறகே, அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்ப வர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடி யாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×