search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும்- அரியலூர் கலெக்டர்
    X

    காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும்- அரியலூர் கலெக்டர்

    • காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும் என்று அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்
    • 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது,அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 தாலுகா மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்க ளாகவே மருந்து கடைக ளுக்கு சென்று மாத்திரை களை வாங்கி சாப்பிடக்கூ டாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் மற்றும் அரசு மருத்து வமனைகளுக்கு சென்று டாக்டரை அணுகி தேவை யான சிகிச்சை பெற்று க்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி, ஏர் கூலர், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலர வைத்து பிறகு தண்ணீரை நிரப்பி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிர ட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்ப டுத்தி, அவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் பாது காத்து கொள்ள வேண்டும்.தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

    Next Story
    ×