search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் பாதிப்பு"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது.
    • ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழைவெளுத்து வாங்கியது.

    கன மழை பெய்யும் போது புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சமத்துவபெரியார்நகர், அன்னை அஞ்சுகம் நகர், சிட்லபாக்கம், திருமலை நகர் மற்றும் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மழை வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரம் மாநகராட்சி தீவிர நடவடிக்ைக எடுத்து உள்ளது.

    மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக தொலை பேசி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பின்றியும், போக்கு வரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 785 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 62.75 கி.மீ நீளமுள்ள வரவு கால்வாய்கள் மற்றும் 6930 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல மழைநீர் வடிகால்கள், வரவு கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுரங்கப்பா தைகள் மற்றும் கடந்த காலங்க ளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் 6 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் 80 எண்ணிக்கையிலான டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள 21 ஜே.சி.பி. எயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாம்பரம் மாநகராட்சி யுடன் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பிற சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை மேற்கொள் ளவும் பணியா ளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்புகொள்ள கட்ட ணமில்லா தொலைப்பேசி எண் 18004254355, 18004251600, வாட்ஸ்அப் எண். 8438353355 மற்றும் துணை ஆணையாளர் 9677257153 உதவி ஆணை யாளர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் இரைக்கும் எந்திரங்கள், அதற்கான பைப்புகள்,மரம் அறுக்கும் எந்திரம், டார்ச் லைட், குடை கள் புதிய மண்வெட்டிகள், மீட்பு பணிக்காக கயிறுகள் மழையில் பயன்படுத்த ஊழியர்களுக்கான உடைகள், முதலுதவி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மண்டல தலைவர் ஜெய் பிரதீப் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பெரியகுளத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் பொதுப்பணி த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி வாரி வாய்க்கால் மற்றும் புதுப் பாலம், ஆடு பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வராக நதி செல்லும் புதுப்பாலம் அருகே புதிதாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும் வாரி வாய்க்கால் பக்கவாட்டு சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் பொதுப்பணி த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், மஞ்சளாறு வடிநில கோட்ட நீர்வள த்துறை (பொதுப்பணி த்துறை) உதவி செயற்பொறி யாளர் சவுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ×