search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் மழைநீர் பாதிப்பை தடுப்பது குறித்து ஆய்வு
    X

    சரவணக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பெரியகுளத்தில் மழைநீர் பாதிப்பை தடுப்பது குறித்து ஆய்வு

    • பெரியகுளத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் பொதுப்பணி த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி வாரி வாய்க்கால் மற்றும் புதுப் பாலம், ஆடு பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வராக நதி செல்லும் புதுப்பாலம் அருகே புதிதாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும் வாரி வாய்க்கால் பக்கவாட்டு சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் பொதுப்பணி த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், மஞ்சளாறு வடிநில கோட்ட நீர்வள த்துறை (பொதுப்பணி த்துறை) உதவி செயற்பொறி யாளர் சவுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×