search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா வன்முறை"

    • நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்.
    • அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று மகா பஞ்சாயத்து கமிட்டி குற்றச்சாட்டு.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ஜலாபிஷேக யாத்திரையின்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நூ மட்டுமின்றி அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்திற்கும் பரவியது. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், பிரச்சனை காரணமாக தடைபட்ட யாத்திரையை நிறைவு செய்வதற்காக விஷ்வ இந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வால் மாவட்டத்தில் இன்று மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்தினர். வெறுப்பு பேச்சு பேசக்கூடாது, வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின்பேரில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின்போது போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    எனினும் நிபந்தனைகளையும் மீறி, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேச்சாளர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்சசை வெடித்துள்ளது. ஒரு பேச்சாளர் பேசும்போது, "நீங்கள் ஒரு விரலை உயர்த்தினால், உங்கள் கைகளை வெட்டுவோம்" என்று கூறியியதாகவும், மற்றொருவர் சுய பாதுகாப்புக்காக மக்களுக்கு துப்பாக்கிகளுக்கு உரிமம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அப்பகுதியில் நடக்கும் அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று கூறிய மகா பஞ்சாயத்து கமிட்டி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நூ பகுதியில் துணை ராணுவப் படை தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    மேலும், ஜூலை 31ல் நடந்த வன்முறை குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும், வகுப்புவாத மோதல்களில் கொல்லப்பட்ட தங்கள் சமுதாய மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கமிட்டி கோரியது. மேலும், கலவரத்தின் போது ஏற்பட்ட இழப்புகளை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரும் 28ம் தேதி நூ மாவட்டத்தில் மீண்டும் ஜலாபிஷேக யாத்திதையை நடத்த மகா பஞ்சாயத்து கமிட்டி முடிவு செய்துள்ளது. மேலும் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

    • விஷமிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்கின்றனர்
    • கலவரத்தில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்டவர்கள் அரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்

    இணையத்தில் வரும் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் உண்மைதன்மையை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் உணர்வுபூர்வமான விஷயங்களில் விபரீத நோக்கத்துடன் பல விஷமிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்கின்றனர்.

    அத்தகைய பொய் ஒன்று தற்போது தெரிய வந்திருக்கிறது.

    அரியானாவின் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31 அன்று இரு பிரிவினருக்கிடையே மோதல் வெடித்து அது வன்முறையாக மாறியது. வன்முறை வெடித்ததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 300-க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சட்டவிரோதமாக அரியானாவில் குடியேறி வியாபாரமும் செய்து வந்த ஒரு சிலர்தான் இதற்கு காரணம் என கூறி அரியானா அரசாங்கமும், நிர்வாகமும் அங்குள்ள சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வசிப்பிடங்களையும் கடைகளையும் இடித்து தள்ளியது.

    இது சம்பந்தமாக பல புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பரவலானது. இதனையடுத்து இணைய சேவைகளை அந்த மாநில அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதனால் ஒரு பிரிவை சேர்ந்தவரின் வீடு இடிக்கப்பட்டதாகவும் அதனை அவர் செயலற்று வேடிக்கை பார்ப்பதாகவும் ஒரு புகைப்படம் வைரலானது.

    இதனை பதிவு செய்தவர், "ஒரு அப்பாவி தன் வீடு அரசாங்கத்தால் இடிக்கப்படுவதை பரிதாபமாக பார்க்கிறார்" என ஒருவரி செய்தியும் உடன் சேர்த்து வெளியிட்டு இருந்தார்.

    ஆனால் ஆய்வில் இந்த புகைப்படம் 2022 ஏப்ரலில் மத்திய பிரதேசத்தில் உள்ள கர்கோன் பகுதியில் அந்த மாநில அரசாங்கம் அங்கு நடந்த கலவரத்தினையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையின் போது வெளியான புகைப்படம் என தெளிவாகியுள்ளது.

    அரியானாவில் இணைய சேவை இடைநிறுத்தம் ஆகஸ்ட் 13 வரை தொடரும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுத்ரி அக்தாத் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவில் நூஹ் பகுதியில் கடந்த 31-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவிய நிலையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    வன்முறை தொடர்பாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 188 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

    இதைத்தொடர்ந்து கலவரக்காரர்கள் மற்றும் வன்முறையை துண்டியவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நூஹ், நல்ஹர், புன்கானா, டாரு, ஆகோன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

    நூஹ் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இதுவரை 1,208 கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சமூக மக்களை குறி வைத்து அரியானா அரசு கட்டிடங்களை இடிப்பதாக நூஹ் பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுத்ரி அக்தாத் குற்றம் சாட்டியுள்ளார்.

    • அரியானா வன்முறையில் 2 ஊர்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
    • வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது.

    கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 2 ஊர்க்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 142 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அங்குள்ள எதிர்கட்சியான அரியானா காங்கிரஸ் சார்பில் 10 பேர் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டு, வன்முறை நடந்த நூ பகுதிக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

    அவர்கள் நேற்று அங்கு செல்ல முயன்றபோது ரோஜ்கா மியோ கிராமத்தின் எல்லையில் அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதை அரியானா அரசு உறுதி செய்யவேண்டும்.

    சென்னை:

    அரியானாவில் நடந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    அரியானாவில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன். உண்மையான பலம் என்பது அமைதி, அகிம்சை மற்றும் இணக்கமாக வாழ்வதில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.

    கலவரக்காரர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி அரியானா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதை அரியானா அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    • அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்றார் முதல் மந்திரி.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

    வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கை எதுவும் நடைபெறாமல் இருக்க 20 துணை ராணுவ படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. எனவே போராட்டக்காரர்கள் அமைதி வழியில் திரும்ப வேண்டும்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • அரியானாவில் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
    • நூ மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

    வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது.

    இந்நிலையில், நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

    நூ மாவட்டத்தில் 50 போலீஸ் வாகனங்கள் உள்பட 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, தீவைக்கப்பட்டன. 10 போலீசார் உள்பட 23 பேர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக 27 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நூ மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

    மேலும், முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்

    • அரியானாவின் குருகிராமில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 40 பேர் காயமடைந்தனர்.
    • இதையடுத்து, குருகிராமில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அரியானா மாநிலம் குர்கிராம் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

    அப்போது குர்காம்-அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்தபோது, ஒரு அமைப்பினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது. இதில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

    தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். அத்துடன் துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்

    தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கலவரம் எதிரொலியாக, அரியானாவின் குருகிராமில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • அரியானா மாநிலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கவுகாத்தி:

    அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

    அப்போது குர்கான்-அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்தபோது, ஒரு அமைப்பினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது. இதில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குதல்கள் நடந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

    தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    ×